திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1186 திருவாசக ஆராய்ச்சியுரை இனிப் போதுமானவையே; நின் திருவடிகளின் பொருட்டே மனம் கசிந்து உருகுதலை யான் நின்பால் வேண்டுதல் செய்கின்றேன் என் பதாம். உற்றார் உடற்றொடர்பன்றி உயிர்த் தொடர்பற்றவராதலின் அவரை விரும்புதலாற் பெரும்பயனின்மையின் 'உற்றாரை யான் வேண்டேன்' என்றார். ஊரும் பேரும் உலகப்பற்றினை மிகுவித்த லின் 'ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்' என்றார். பேர் - புகழ். கற்றாரை விரும்பாமை அவர் அறிவு சுட்டறியும் அறிவாவதன்றி இறைவனை அறிவதற்கு உதவாமை பற்றியாகும். திருக்குற்றாலம் கூத்தப் பெருமானது ஐவகைத் தலங்களுள் ஒன்றாதலின் "சூற்றா லத்த மர்ந்துறையும் கூத்தா' என்றார். "குற்றாலத்துறை கூத்தன்" 9: 10 "குழலார் கோதை வரைமார்பிற் குற்றாலத்தெங் கூத்தனை" 15: 7 "குற்றாலத்தமர்ந்துறையுங் குழகன் தன்னை” 214:9 "குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்'" 294:4 என அப்பரடிகள் வாக்காலுமறிக, கூத்தா உன் குரை கழல் என் றது "கூத்தா நின் குரையார் கழலே" (நாவு 209 : 5) என அரு ளியமையுங் காண்க. கன்று + ஆ கற்றாவென எதுகை நோக்கித் திரிந்தது. கன்றினிடத்து பசுவின் மனம் கசிந்துருகுதல் போல இறைவன் மாட்டு மனம் கசிந்துருக வேண்டுமென்பார், 'கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே' என்றார். இதன்கண் 'உன் குரைகழற்கே கசிந்துருக வேண்டுவனே' என்றதனால் சிவானந்த முதிர்வு என்னும் பதிகப் பொருள் புலப் படுதல் காண்க. 3
1186 திருவாசக ஆராய்ச்சியுரை இனிப் போதுமானவையே ; நின் திருவடிகளின் பொருட்டே மனம் கசிந்து உருகுதலை யான் நின்பால் வேண்டுதல் செய்கின்றேன் என் பதாம் . உற்றார் உடற்றொடர்பன்றி உயிர்த் தொடர்பற்றவராதலின் அவரை விரும்புதலாற் பெரும்பயனின்மையின் ' உற்றாரை யான் வேண்டேன் ' என்றார் . ஊரும் பேரும் உலகப்பற்றினை மிகுவித்த லின் ' ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் ' என்றார் . பேர் - புகழ் . கற்றாரை விரும்பாமை அவர் அறிவு சுட்டறியும் அறிவாவதன்றி இறைவனை அறிவதற்கு உதவாமை பற்றியாகும் . திருக்குற்றாலம் கூத்தப் பெருமானது ஐவகைத் தலங்களுள் ஒன்றாதலின் சூற்றா லத்த மர்ந்துறையும் கூத்தா ' என்றார் . குற்றாலத்துறை கூத்தன் 9 : 10 குழலார் கோதை வரைமார்பிற் குற்றாலத்தெங் கூத்தனை 15 : 7 குற்றாலத்தமர்ந்துறையுங் குழகன் தன்னை 214 : 9 குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய் ' 294 : 4 என அப்பரடிகள் வாக்காலுமறிக கூத்தா உன் குரை கழல் என் றது கூத்தா நின் குரையார் கழலே ( நாவு 209 : 5 ) என அரு ளியமையுங் காண்க . கன்று + கற்றாவென எதுகை நோக்கித் திரிந்தது . கன்றினிடத்து பசுவின் மனம் கசிந்துருகுதல் போல இறைவன் மாட்டு மனம் கசிந்துருக வேண்டுமென்பார் ' கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே ' என்றார் . இதன்கண் ' உன் குரைகழற்கே கசிந்துருக வேண்டுவனே ' என்றதனால் சிவானந்த முதிர்வு என்னும் பதிகப் பொருள் புலப் படுதல் காண்க . 3