திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

40. குலாப்பத்து அனுபவம் இடையீடுபடாமை திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது குலா என்பது அடிகள் தாம் விரும்பிய சிவானந்த வெள்ளம் நிறையப்பெற்று அதனை நல்கிய தில்லைத் திருச்சிற்றம்பலக் கூத் தப்பிரானை மிகவும் கொண்டாடி மனசின்கண்ணே மகிழ்ச்சி மிகுந்து இறுமாந்து ஆடும் கூத்தாகும். இப்பதிகத்தின் உள்ளுறை அனுப வம் இடையீடுபடாமை. இதன் பொருள் சிவானந்த அனுபவம் இடையறவு அடையாமல் என்றும் ஒரே படித்தாய் நிகழ்ந்து கொண்டிருப்பதாகும். அவ்வனுபவம் என்றும் ஒரே படித்தாய் நிகழ்வதாலேயே குலா என்னும் கூத்து தில்லை ஆண்டானைக் கொண்டாடி நிகழ்வதாயிற்று, இதனைத் திருவாசகச் சிறப்புடை யார், 557 விரும்புசிவா னந்தவெள்ளம் விழைந்து தில்லை நாயகனை மிகக் கொண்டாடி நிரம்புமனக் களிமிகுந்த விறுமாப்பே குலாப்பத்தாய் நிகழ்த்தலாமே.ருப்பு என்பர். இது கொச்சகக்கலிப்பா என்னும் செய்யுள் வரையாற் பாடப்பெற்றது. கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசித்து தேடும் பொருளுஞ் சிவன்கழலே யெனத்தெளிந்து கூடும் உயிருங் குமண்டையிடக் குனித்தடியேன் ஆடுங் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே ப-ரை. அடியேன் ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு அடி யேன் பிச்சைப்பாத்திரமாகிய திருவோட்டினையும் கோவண உடை யினையுமே எனக்குத் தொடர்புடையன என்று கொண்டு, உள் கசிந்து தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து - உள்ளம் உருகித் தேடவேண்டிய பொருளும் சிவபெருமானது வீரக்கழல் அணிந்த திருவடிகளே எனத்தேறி, கூடும் உயிரும் குமண்டை இட - எனது உடலும் உயிரும் பேரின்பம் நிறைவடைய. குனித்து ஆடும் குலா - உடலை வளைத்து ஆனந்தத்தால் கொண்டாடும்
40. குலாப்பத்து அனுபவம் இடையீடுபடாமை திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது குலா என்பது அடிகள் தாம் விரும்பிய சிவானந்த வெள்ளம் நிறையப்பெற்று அதனை நல்கிய தில்லைத் திருச்சிற்றம்பலக் கூத் தப்பிரானை மிகவும் கொண்டாடி மனசின்கண்ணே மகிழ்ச்சி மிகுந்து இறுமாந்து ஆடும் கூத்தாகும் . இப்பதிகத்தின் உள்ளுறை அனுப வம் இடையீடுபடாமை . இதன் பொருள் சிவானந்த அனுபவம் இடையறவு அடையாமல் என்றும் ஒரே படித்தாய் நிகழ்ந்து கொண்டிருப்பதாகும் . அவ்வனுபவம் என்றும் ஒரே படித்தாய் நிகழ்வதாலேயே குலா என்னும் கூத்து தில்லை ஆண்டானைக் கொண்டாடி நிகழ்வதாயிற்று இதனைத் திருவாசகச் சிறப்புடை யார் 557 விரும்புசிவா னந்தவெள்ளம் விழைந்து தில்லை நாயகனை மிகக் கொண்டாடி நிரம்புமனக் களிமிகுந்த விறுமாப்பே குலாப்பத்தாய் நிகழ்த்தலாமே.ருப்பு என்பர் . இது கொச்சகக்கலிப்பா என்னும் செய்யுள் வரையாற் பாடப்பெற்றது . கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசித்து தேடும் பொருளுஞ் சிவன்கழலே யெனத்தெளிந்து கூடும் உயிருங் குமண்டையிடக் குனித்தடியேன் ஆடுங் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே - ரை . அடியேன் ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு அடி யேன் பிச்சைப்பாத்திரமாகிய திருவோட்டினையும் கோவண உடை யினையுமே எனக்குத் தொடர்புடையன என்று கொண்டு உள் கசிந்து தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து - உள்ளம் உருகித் தேடவேண்டிய பொருளும் சிவபெருமானது வீரக்கழல் அணிந்த திருவடிகளே எனத்தேறி கூடும் உயிரும் குமண்டை இட - எனது உடலும் உயிரும் பேரின்பம் நிறைவடைய . குனித்து ஆடும் குலா - உடலை வளைத்து ஆனந்தத்தால் கொண்டாடும்