திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குலாப்பத்து மெய்யன்போடு ஆனந்தத்தால் கொண்டாடி தில்லை ஆண்டானை கொண்டன்று - தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண் ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற ஆண்டவனைப் பற்றியதாகும். ஆடும் கூத்து, 1191 என்புகளை உள்ளே உருகச் செய்து நல்வினை தீவினைகளாகிய சஞ்சிதகன் மங்களின் வலியினைக்கெடுத்துப் பழைய பற்றுக்களாகிய பகைகளை நீக்கித் தூய்மையடையச் செய்து எதிர் காலத்தில் வரக் கடவனவாயுள்ள ஆகாமிய கன்மங்களை முழுவதும் அழியும் வண் ணம் என் உள்ளத்தில் எழுந்தருளிய அதனால் மெய்யன்போடு ஆடும் கூத்து தில்லை ஆண்டானைப்பற்றியதாகும் என்பதாம். 14 என்பு ளுருக்கல் - உடம்பிலுள்ள வலியபொருளாகிய என்பினை உள்ளுருகச் செய்தல். இருவினை என்பது நல்வினை தீவினைகளாகிய சஞ்சிதகன்மங்களைக் குறித்தது. ஈடு அழித்தல் - இருவினைகளின் வலியைக் கெடுத்தல். துன்பம் - பிறவித்துன்பங்கள். துவந்துவம் = பகை; அது 'தொந்தம்' எனவும் வழங்கும். துவந்துவங்கள் தூய்மை செய்தல் - பற்றுக்களாகிய பகையை நீக்கி என்னைத் தூய்மை அடையச் செய்தல், முன்பு - வருங்காலத்தைக் குறித்தது. வருங் காலத்திலுள்ளன ஆகாமிய கன்மங்கள். உள்புகுந்த என்னும் பெயரெச்சம் ஏதுப்பொருட்டு. இறைவன் உள்புகுதலால் காலத்தில் வரக்கடவனவாகிய தீமைகள் நீங்குதலை. வேயுறு தோளி பங்கன்.... உளமே புகுந்த அதனால்" என்பதனாலுமறிக. அன்பின் குலா உருக்கி ஈடழித்து களைந்து தூய்மை செய்து உள் புகுந்த ஆண்டானைக் கொண்டன்று என வினை முடிபு செய்க. இதன் கண். "அன்பின் குலாதில்லை ஆண்டானைக் கொண்டன்று என்பதனால் அனுபவமிடையீடு படாமை என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 560 குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கடமைப் பிறியும் மனத்தார் பிறிவரிய பெற்றியனைச் செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. ப-ரை குறியும் நெறியும் குணமும் இலார் - பெயரும் வழியும் முக்குணங்களும் இல்லாதவரும். குழாங்கள் தமை பிறியும் மனத் தார் - மனைவி மக்கள் உறவினர் முதலிய கூட்டங்களை விட்டுநீங்
குலாப்பத்து மெய்யன்போடு ஆனந்தத்தால் கொண்டாடி தில்லை ஆண்டானை கொண்டன்று - தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண் ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற ஆண்டவனைப் பற்றியதாகும் . ஆடும் கூத்து 1191 என்புகளை உள்ளே உருகச் செய்து நல்வினை தீவினைகளாகிய சஞ்சிதகன் மங்களின் வலியினைக்கெடுத்துப் பழைய பற்றுக்களாகிய பகைகளை நீக்கித் தூய்மையடையச் செய்து எதிர் காலத்தில் வரக் கடவனவாயுள்ள ஆகாமிய கன்மங்களை முழுவதும் அழியும் வண் ணம் என் உள்ளத்தில் எழுந்தருளிய அதனால் மெய்யன்போடு ஆடும் கூத்து தில்லை ஆண்டானைப்பற்றியதாகும் என்பதாம் . 14 என்பு ளுருக்கல் - உடம்பிலுள்ள வலியபொருளாகிய என்பினை உள்ளுருகச் செய்தல் . இருவினை என்பது நல்வினை தீவினைகளாகிய சஞ்சிதகன்மங்களைக் குறித்தது . ஈடு அழித்தல் - இருவினைகளின் வலியைக் கெடுத்தல் . துன்பம் - பிறவித்துன்பங்கள் . துவந்துவம் = பகை ; அது ' தொந்தம் ' எனவும் வழங்கும் . துவந்துவங்கள் தூய்மை செய்தல் - பற்றுக்களாகிய பகையை நீக்கி என்னைத் தூய்மை அடையச் செய்தல் முன்பு - வருங்காலத்தைக் குறித்தது . வருங் காலத்திலுள்ளன ஆகாமிய கன்மங்கள் . உள்புகுந்த என்னும் பெயரெச்சம் ஏதுப்பொருட்டு . இறைவன் உள்புகுதலால் காலத்தில் வரக்கடவனவாகிய தீமைகள் நீங்குதலை . வேயுறு தோளி பங்கன் .... உளமே புகுந்த அதனால் என்பதனாலுமறிக . அன்பின் குலா உருக்கி ஈடழித்து களைந்து தூய்மை செய்து உள் புகுந்த ஆண்டானைக் கொண்டன்று என வினை முடிபு செய்க . இதன் கண் . அன்பின் குலாதில்லை ஆண்டானைக் கொண்டன்று என்பதனால் அனுபவமிடையீடு படாமை என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 560 குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கடமைப் பிறியும் மனத்தார் பிறிவரிய பெற்றியனைச் செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே . - ரை குறியும் நெறியும் குணமும் இலார் - பெயரும் வழியும் முக்குணங்களும் இல்லாதவரும் . குழாங்கள் தமை பிறியும் மனத் தார் - மனைவி மக்கள் உறவினர் முதலிய கூட்டங்களை விட்டுநீங்