திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குலாப்பத்து இதன்கண் 'அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்று’ என்பதனால் அனுபவமிடையீடுபடாமை என்னும் பதிகப் பொருள் புலப்படும். 56 I பேருங் குணமும் பிணிப்புறுமிழ் பிறவிதனைத் தூரும்பரிசு துரிசறுத்துத் தொண்டரெல்லாஞ் சேரும் வகையாற் சிவன் கருணைத் தேன்பருகி ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 1193 4 ப-ரை பேரும் குளமும் பிணிப்புறும் இப்பிறவிதனை - பெய ரும் முக்குணங்களும் பந்தமாக உறுகின்ற இந்த மானிடப்பிறவியை, தூரும் பரிசு துரிசு அறுத்து - தூர்ந்து போகும் வண்ணம் அதற்கு ஏதுவாகிய குற்றங்களைக் கெடுத்து, தொண்டர் எல்லாம் சேரும் வகையால் சிவன் கருணை தேன் பருகி - அடியவர்கள் எல்லாரும் பின்னர்த் திருவடியைக் கூடும் முறைமையால் சிவபெருமானது அருளாகிய தேனையுண்டு, ஆரும் குவா - நிறைவடைதலால் உள் தாகும் ஆனந்தக் கொண்டாட்டம், தில்லை ஆண்டானை கொண் டன்று - தில்லைத் திருச்சிற்றம் பலத்தின் கண்ணே ஆனத்தத்தாண் டவஞ் செய்கின்ற ஆண்டவனைப் பற்றியதாகும். பெயரும் குணங்களும் பந்தமாக உறுகின்ற இந்த மானிடப் பிறவி தூர்ந்து போகும் வண்ணம் அதற்கு ஏதுவாகிய குற்றங்க ளைக் கெடுத்து அடியவர்கள் எல்லாரும் இறைவன் திருவடி யைக் கூடும் முறைமையால் சிவபெருமானது அருளாகிய தேனை உண்டு நிறைவடைதலால் உளதாகும் ஆனந்தக் கொண்டாட்டம் தில்லை ஆண்டவனைப்பற்றியதாகும். உடம்பு காரணமாக உயிர்க்குப் பெயரும் குணங்களும் சொல் லப்படுதற்குப் பிறவியே காரணமாதலினாலும் அப்பெயரும் குணமும் மக்களைப் பந்தித்தலாலும் "பேரும் குணமும் பிணிப்புறும் இப்பிற விதனை'' என்றார். தூர்தல் - தூர்ந்து இல்லாது போதல், அடிகள் தம்மையும் உளப்படுத்தித் தொண்டரெல்லாம்' என்றார். துரிசு குற்றம். இங்கே ஆணவமலத்தை உணர்த்தியது ‘தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும், நாதனை" (சுந். 68: 8) 'தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்' (சுந். 24 : 4) என வருவன காண்க. சேரும் வகையால் - பின்னர் இறைவன் திருவடியைக் கூடும் முறைமையால். ஆரும் குலா-நிறைவடைத லால் உளதாகும். குலா ஆரும் என்னும் பெயரெச்சம் ஏதுப் பொருட்டு.
குலாப்பத்து இதன்கண் ' அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்று என்பதனால் அனுபவமிடையீடுபடாமை என்னும் பதிகப் பொருள் புலப்படும் . 56 I பேருங் குணமும் பிணிப்புறுமிழ் பிறவிதனைத் தூரும்பரிசு துரிசறுத்துத் தொண்டரெல்லாஞ் சேரும் வகையாற் சிவன் கருணைத் தேன்பருகி ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே . 1193 4 - ரை பேரும் குளமும் பிணிப்புறும் இப்பிறவிதனை - பெய ரும் முக்குணங்களும் பந்தமாக உறுகின்ற இந்த மானிடப்பிறவியை தூரும் பரிசு துரிசு அறுத்து - தூர்ந்து போகும் வண்ணம் அதற்கு ஏதுவாகிய குற்றங்களைக் கெடுத்து தொண்டர் எல்லாம் சேரும் வகையால் சிவன் கருணை தேன் பருகி - அடியவர்கள் எல்லாரும் பின்னர்த் திருவடியைக் கூடும் முறைமையால் சிவபெருமானது அருளாகிய தேனையுண்டு ஆரும் குவா - நிறைவடைதலால் உள் தாகும் ஆனந்தக் கொண்டாட்டம் தில்லை ஆண்டானை கொண் டன்று - தில்லைத் திருச்சிற்றம் பலத்தின் கண்ணே ஆனத்தத்தாண் டவஞ் செய்கின்ற ஆண்டவனைப் பற்றியதாகும் . பெயரும் குணங்களும் பந்தமாக உறுகின்ற இந்த மானிடப் பிறவி தூர்ந்து போகும் வண்ணம் அதற்கு ஏதுவாகிய குற்றங்க ளைக் கெடுத்து அடியவர்கள் எல்லாரும் இறைவன் திருவடி யைக் கூடும் முறைமையால் சிவபெருமானது அருளாகிய தேனை உண்டு நிறைவடைதலால் உளதாகும் ஆனந்தக் கொண்டாட்டம் தில்லை ஆண்டவனைப்பற்றியதாகும் . உடம்பு காரணமாக உயிர்க்குப் பெயரும் குணங்களும் சொல் லப்படுதற்குப் பிறவியே காரணமாதலினாலும் அப்பெயரும் குணமும் மக்களைப் பந்தித்தலாலும் பேரும் குணமும் பிணிப்புறும் இப்பிற விதனை ' ' என்றார் . தூர்தல் - தூர்ந்து இல்லாது போதல் அடிகள் தம்மையும் உளப்படுத்தித் தொண்டரெல்லாம் ' என்றார் . துரிசு குற்றம் . இங்கே ஆணவமலத்தை உணர்த்தியது தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை ( சுந் . 68 : 8 ) ' தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன் ' ( சுந் . 24 : 4 ) என வருவன காண்க . சேரும் வகையால் - பின்னர் இறைவன் திருவடியைக் கூடும் முறைமையால் . ஆரும் குலா - நிறைவடைத லால் உளதாகும் . குலா ஆரும் என்னும் பெயரெச்சம் ஏதுப் பொருட்டு .