திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1202 திருவாசக ஆராய்ச்சியுரை என்னை விட்டு நீங்கும் வண்ணம் திருவருளைத் தந்து, தன் பொன் அடிஇணை காட்டி - தனது பொன்போன்ற அரிய திருவடிகள் இரண் டினையும் காட்டியருளி, மெய்யனாய் வெளி காட்டி - மெய்ப்பொரு ளானவனாய் வெளியே தன்னுடைய திருவுருவத்தினைக் காட்டி, முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேன் - என் முன் பரமாசாரியனாக நின்ற தாகிய ஒப்பற்ற வியக்கத்தக்க செயலினை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன். மயக்கவுணர்ச்சியுடையேனாய் இம் மண்ணுலகத்திலே பிறந்து வாழ்க்கை என்று சொல்லப்படும் கடலுள் அகப்பட்டு மகளிர் என்ற நீர்ச்சுழியில் சிக்கி நான் தலைதடுமாறா வண்ணம் பொய்யெல்லாம் விடத் திருவருள் தந்து தன் பொன்போன்ற திருவடி இரண்டினையும் காட்டியருளி மெய்ப் பொருளானவனாய் வெளியே தன்னுடைய திரு வுருவத்தைக் காட்டி என் முன்பாகப் பரமாசாரியனாக நின்ற ஒப் பற்ற வியக்கத்தக்க செயலினை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் me mies என்பதாம். மையல் - நிலையிலாதனவற்றை நிலையுடையன என்று உணரும் மயக்கவுணர்ச்சி. மையலாய் அகப்பட்டு என இயையும். ஆழி - பெருங் கடல். வாழ்வு - பூவுலகில் பிறந்து வாழும் வாழ்க்கை. அவ் வாழ்க்கையைக் கடலாகக் கூறியது காரண காரியத் தொடர்ச்சியாக மேன்மேலும் வருதல்பற்றியாகும். சுழியென்றது அவரை மணப்பதால் கிப் பாசத்தினின்றும் நீங்குதல் தையலாரைச் மக்களும் சுற்றமும் முதலிய பற்றுக்கள் பெரு அருமைபற்றியாகும். சுழித்தலைப் படுதல் 'பழுது நானுழன்றுள் தடுமாறிப் படுசுழித்தலை பட்டன னெந்தாய்" (60-1) எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியமை காண்க. தலைதடுமாறாதே என்பதில் தலை என்பது இடமாயினும் இங்கே நிலைமையை உணர்த்தியது பொய்யெலாம் விட - நிலையில் லாத பொருள்களிடத்துள்ள பற்றுக்களெல்லாம் நீங்கும் வண்ணம். மெய்யனாய் - மெய்ப்பொருளானவனாய், பொய்யெலாம் லிடத் திரு வருள் தந்து என்றது நயன தீக்கை செய்தமையைக் குறி து: பொன்னடியிணை காட்டி எனத் திருவடியை விசேடித்துக் கூறியது திருவடித் தீக்கை செய்த விசேடம் பற்றியாகும். மெய்யனாய் வெளி காட்டி முன்நின்றது இறைவன் பரமாசாரியனாய் அடிகளை ஆட் கொண்ட காலத்து என்க. நான் தலைதடுமாறாதே பொய்யெல்லாம் விடத் திருவருள் தந்து தன் பொன்னடியிணை காட்டி மெய்யனாய் வெளி காட்டி முன்நின்ற அற்புதம் என்க. அற்புதம் - பெருமித உணர்ச்சி உண்டாகி இன்னதென்று அறியப்படாதது என வரும். இதன் கண் 'திருவருள் தந்து அடியிணைகாட்டி மெய்யனாய் வெளி காட்டி முன்னின்றதோர் அற்புதம் விளம்பேன்' என்றதனால் அனுபவ மாற்றாமை யென்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க. 1
1202 திருவாசக ஆராய்ச்சியுரை என்னை விட்டு நீங்கும் வண்ணம் திருவருளைத் தந்து தன் பொன் அடிஇணை காட்டி - தனது பொன்போன்ற அரிய திருவடிகள் இரண் டினையும் காட்டியருளி மெய்யனாய் வெளி காட்டி - மெய்ப்பொரு ளானவனாய் வெளியே தன்னுடைய திருவுருவத்தினைக் காட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேன் - என் முன் பரமாசாரியனாக நின்ற தாகிய ஒப்பற்ற வியக்கத்தக்க செயலினை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் . மயக்கவுணர்ச்சியுடையேனாய் இம் மண்ணுலகத்திலே பிறந்து வாழ்க்கை என்று சொல்லப்படும் கடலுள் அகப்பட்டு மகளிர் என்ற நீர்ச்சுழியில் சிக்கி நான் தலைதடுமாறா வண்ணம் பொய்யெல்லாம் விடத் திருவருள் தந்து தன் பொன்போன்ற திருவடி இரண்டினையும் காட்டியருளி மெய்ப் பொருளானவனாய் வெளியே தன்னுடைய திரு வுருவத்தைக் காட்டி என் முன்பாகப் பரமாசாரியனாக நின்ற ஒப் பற்ற வியக்கத்தக்க செயலினை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் me mies என்பதாம் . மையல் - நிலையிலாதனவற்றை நிலையுடையன என்று உணரும் மயக்கவுணர்ச்சி . மையலாய் அகப்பட்டு என இயையும் . ஆழி - பெருங் கடல் . வாழ்வு - பூவுலகில் பிறந்து வாழும் வாழ்க்கை . அவ் வாழ்க்கையைக் கடலாகக் கூறியது காரண காரியத் தொடர்ச்சியாக மேன்மேலும் வருதல்பற்றியாகும் . சுழியென்றது அவரை மணப்பதால் கிப் பாசத்தினின்றும் நீங்குதல் தையலாரைச் மக்களும் சுற்றமும் முதலிய பற்றுக்கள் பெரு அருமைபற்றியாகும் . சுழித்தலைப் படுதல் ' பழுது நானுழன்றுள் தடுமாறிப் படுசுழித்தலை பட்டன னெந்தாய் ( 60-1 ) எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியமை காண்க . தலைதடுமாறாதே என்பதில் தலை என்பது இடமாயினும் இங்கே நிலைமையை உணர்த்தியது பொய்யெலாம் விட - நிலையில் லாத பொருள்களிடத்துள்ள பற்றுக்களெல்லாம் நீங்கும் வண்ணம் . மெய்யனாய் - மெய்ப்பொருளானவனாய் பொய்யெலாம் லிடத் திரு வருள் தந்து என்றது நயன தீக்கை செய்தமையைக் குறி து : பொன்னடியிணை காட்டி எனத் திருவடியை விசேடித்துக் கூறியது திருவடித் தீக்கை செய்த விசேடம் பற்றியாகும் . மெய்யனாய் வெளி காட்டி முன்நின்றது இறைவன் பரமாசாரியனாய் அடிகளை ஆட் கொண்ட காலத்து என்க . நான் தலைதடுமாறாதே பொய்யெல்லாம் விடத் திருவருள் தந்து தன் பொன்னடியிணை காட்டி மெய்யனாய் வெளி காட்டி முன்நின்ற அற்புதம் என்க . அற்புதம் - பெருமித உணர்ச்சி உண்டாகி இன்னதென்று அறியப்படாதது என வரும் . இதன் கண் ' திருவருள் தந்து அடியிணைகாட்டி மெய்யனாய் வெளி காட்டி முன்னின்றதோர் அற்புதம் விளம்பேன் ' என்றதனால் அனுபவ மாற்றாமை யென்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க . 1