திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1208 008 திருவாசக ஆராய்ச்சியுரை மாடு - செல்வம். சுற்றம் - உறவினர். போகம் - அனுபவிக்கப் படும் பொருள்கள் மங்கையர் தம்மொடும் என்னும் ஒடுவை மாடு சுற்றம் போகம் என்பவற்றோடும் கூட்டுக. கூடுதல் - தொடர்புபடு தல். அங்கு எனச் சுட்டியது மாடு சுற்றம் முதலிய தொடர்புகளை. குணம் - இயல்பு. ஏறுண்ணுதல் - கவரப்படுதல். குலாவி -கொண் டாடி. வீட்டுதல் - அழித்தல். மென் மலர் கழல் காட்டியமை, வெந்தொழில் வீட்டுதற்கும், வீட்டின்பம் தருதற்கும் ஏதுவாகும். கழல் காட்டி ஆண்டமை என இயையும். ''விரைமலர்க் கழல்காட்டி, அச்சன் என்னையும் ஆண்டுகொண்டருளிய" "எல்லையில் லாததன் இணைமலர்க் கழல் காட்டி, அறிவு தந்தெனை ஆண்டு" என (அற்9: 10) திருவாசகத்தும், 4 அடிச் சந்தமால் கண்டிலாதன காட்டி வந்தாண்டு கொண்டு (i8) எனத் திருக்கோவை யாரிலும் அருளியமை காண்க. ஆடுவித்தல் - ஆனந்தக் கூத்தாடச் செய்தல். அகம் - உள்ளம். "ஆடுவித்தென தக : புகுந்தமை" பின்னர்க்கூறப்படுதலின் வீடு என் பது வீட்டின்பத்தை உணர்த்தியது வீடு தந்து என்றதனால் அடிகள் சீவன் முத்தராய் இருந்த நிலைமை புலப்படும் அறியேன் என்றது இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்றவாறு. Kui 400-00 இதன் கண் 'ஆடுவித்தென தகம் புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே' என்பதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 5 572 வணங்கு மீப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும் பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக் குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங் கூடி அணைந்து வந்தெனை யாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. ப-ரை வணங்கும் இப்பிறப்பு இறப்பு இவை நினையாது-வளைந்து வருகின்ற இந்தப் பிறப்பையும் இறப்பையும் நீக்குதற்குரிய வழிகளை எண்ணாமல், நான் மங்கையர் தம்மோடும் பிணைந்து - நான் மகளி ரோடும் கூடி வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி -அவர்க சீவன் முத்தர் உடம்புடன் இருக்கும் போதே வீட்டின்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்யோர்.
1208 008 திருவாசக ஆராய்ச்சியுரை மாடு - செல்வம் . சுற்றம் - உறவினர் . போகம் - அனுபவிக்கப் படும் பொருள்கள் மங்கையர் தம்மொடும் என்னும் ஒடுவை மாடு சுற்றம் போகம் என்பவற்றோடும் கூட்டுக . கூடுதல் - தொடர்புபடு தல் . அங்கு எனச் சுட்டியது மாடு சுற்றம் முதலிய தொடர்புகளை . குணம் - இயல்பு . ஏறுண்ணுதல் - கவரப்படுதல் . குலாவி -கொண் டாடி . வீட்டுதல் - அழித்தல் . மென் மலர் கழல் காட்டியமை வெந்தொழில் வீட்டுதற்கும் வீட்டின்பம் தருதற்கும் ஏதுவாகும் . கழல் காட்டி ஆண்டமை என இயையும் . ' ' விரைமலர்க் கழல்காட்டி அச்சன் என்னையும் ஆண்டுகொண்டருளிய எல்லையில் லாததன் இணைமலர்க் கழல் காட்டி அறிவு தந்தெனை ஆண்டு என ( அற் 9 : 10 ) திருவாசகத்தும் 4 அடிச் சந்தமால் கண்டிலாதன காட்டி வந்தாண்டு கொண்டு ( i8 ) எனத் திருக்கோவை யாரிலும் அருளியமை காண்க . ஆடுவித்தல் - ஆனந்தக் கூத்தாடச் செய்தல் . அகம் - உள்ளம் . ஆடுவித்தென தக : புகுந்தமை பின்னர்க்கூறப்படுதலின் வீடு என் பது வீட்டின்பத்தை உணர்த்தியது வீடு தந்து என்றதனால் அடிகள் சீவன் முத்தராய் இருந்த நிலைமை புலப்படும் அறியேன் என்றது இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்றவாறு . Kui 400-00 இதன் கண் ' ஆடுவித்தென தகம் புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே ' என்பதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 5 572 வணங்கு மீப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும் பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக் குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங் கூடி அணைந்து வந்தெனை யாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே . - ரை வணங்கும் இப்பிறப்பு இறப்பு இவை நினையாது - வளைந்து வருகின்ற இந்தப் பிறப்பையும் இறப்பையும் நீக்குதற்குரிய வழிகளை எண்ணாமல் நான் மங்கையர் தம்மோடும் பிணைந்து - நான் மகளி ரோடும் கூடி வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி -அவர்க சீவன் முத்தர் உடம்புடன் இருக்கும் போதே வீட்டின்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்யோர் .