திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1212 201 2 திருவாசக ஆராய்ச்சியுரை மெய்யடியார்களது திருவடித் தொண்டின்கண் சேர்ப்பித்த அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன். ஆகம் அளவையால் அறிதற்கு அரிய இறைவன் தன் பரம்பெருங் கருணையால் இவ்வுடம்பையும் உயிரையும் ஊசலாட்டுகின்ற இருவினை களை நீக்கி எனக்கு மெய்யுணர்வினைத் தந்து ஒளிவடிவினை அடையச் செய்து மும்மலங்களின் கட்டினைத் தொலைத்து ஆசை தீர்த்து என் னைத் தன் மெய்யடியார்களது திருவடித் தொண்டின்கண் சேர்ப்பித்த அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்பதாம். aka நல்வினை சுவர்க்கத்திற்கும் தீவினை நரகத்திற்கும் உடலையும் உயி ரையும் இழுக்க அவை ஊசலாடுவதுபோல அங்குமிங்கும் அலைதலால் ஊசலாட்டும் இருவினை' என்றார். என்னைக் கூட்டிய என இயை யும் ஓசை - ஆகம அளவைக்கு ஆகுபெயர். ஆகம அளவையாவது இறைவனை நூலுணர்வினால் அறிதல், இவ்வளவையால் அறியமுடி யாமை. நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க" (திருவண்டா 49) என தடிகள் பிறிதோரிடத்துக் கூறுதலானுமறிக. உணர்வு -பர ஞானமாகிய உண்மை உணர்வை. உணர்வாக்குதல் இரு வினைகளும் பாசமான வையும் ஆசையும் நீக்கப்பட்டமையால் தூய பளிங்கு போன்ற ஒளிவடிவினைக் கொடுத்தல். தன் உயர்ந்த பரம் பெருங் கருணை என இறைவன் பேரருளினது உயர்வின் மிகுதியும் பெருமை யும் கூறப் ட்டது. ஆசை என்றது வாசனா மலமாகிய அவாவினை. அடியார் அடிக் கூட்டுதல் - மெய்யடியார்களுக்கு அடித் தொண்டனா கச் சேர்த்தல். வாசனாமல நீக்கத்திற்கு அடியார் அடிக் கூட்டுதல் ஏதுவாகும். ஆசை தீர்த்தடியார் அடிக்கூட்டிய என்றாராயினும் அடி யார் அடிக்கூட்டி ஆசை தீர்த்த என்பது கருத்தாகக் கொள்க. இதன் கண் 'வினையறுத்து உணர்வுதந்து ஒளியாக்கி பாசம் அறுத்து ஆசை தீர்த்து அடியரிற் கூட்டிய அற்புதம்" என்பதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 575 பொச்சை யானவிப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல இச்சை யாயின ஏழையாக் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை இச்ச கத்தரி யயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 8
1212 201 2 திருவாசக ஆராய்ச்சியுரை மெய்யடியார்களது திருவடித் தொண்டின்கண் சேர்ப்பித்த அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் . ஆகம் அளவையால் அறிதற்கு அரிய இறைவன் தன் பரம்பெருங் கருணையால் இவ்வுடம்பையும் உயிரையும் ஊசலாட்டுகின்ற இருவினை களை நீக்கி எனக்கு மெய்யுணர்வினைத் தந்து ஒளிவடிவினை அடையச் செய்து மும்மலங்களின் கட்டினைத் தொலைத்து ஆசை தீர்த்து என் னைத் தன் மெய்யடியார்களது திருவடித் தொண்டின்கண் சேர்ப்பித்த அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்பதாம் . aka நல்வினை சுவர்க்கத்திற்கும் தீவினை நரகத்திற்கும் உடலையும் உயி ரையும் இழுக்க அவை ஊசலாடுவதுபோல அங்குமிங்கும் அலைதலால் ஊசலாட்டும் இருவினை ' என்றார் . என்னைக் கூட்டிய என இயை யும் ஓசை - ஆகம அளவைக்கு ஆகுபெயர் . ஆகம அளவையாவது இறைவனை நூலுணர்வினால் அறிதல் இவ்வளவையால் அறியமுடி யாமை . நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க ( திருவண்டா 49 ) என தடிகள் பிறிதோரிடத்துக் கூறுதலானுமறிக . உணர்வு -பர ஞானமாகிய உண்மை உணர்வை . உணர்வாக்குதல் இரு வினைகளும் பாசமான வையும் ஆசையும் நீக்கப்பட்டமையால் தூய பளிங்கு போன்ற ஒளிவடிவினைக் கொடுத்தல் . தன் உயர்ந்த பரம் பெருங் கருணை என இறைவன் பேரருளினது உயர்வின் மிகுதியும் பெருமை யும் கூறப் ட்டது . ஆசை என்றது வாசனா மலமாகிய அவாவினை . அடியார் அடிக் கூட்டுதல் - மெய்யடியார்களுக்கு அடித் தொண்டனா கச் சேர்த்தல் . வாசனாமல நீக்கத்திற்கு அடியார் அடிக் கூட்டுதல் ஏதுவாகும் . ஆசை தீர்த்தடியார் அடிக்கூட்டிய என்றாராயினும் அடி யார் அடிக்கூட்டி ஆசை தீர்த்த என்பது கருத்தாகக் கொள்க . இதன் கண் ' வினையறுத்து உணர்வுதந்து ஒளியாக்கி பாசம் அறுத்து ஆசை தீர்த்து அடியரிற் கூட்டிய அற்புதம் என்பதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 575 பொச்சை யானவிப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல இச்சை யாயின ஏழையாக் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை இச்ச கத்தரி யயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே . 8