திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1214 திருவாசக ஆராய்ச்சியுரை செறியும் இப்பிறப் பிறப்பிவை நினையாது செறிகுழ லார் செய்யும் Zings கிறியும் கீழ்மையும் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி அறிவு தந்தெனை யாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. ப - ரை செறியும் இப்பிறப்பு இறப்பு இவை நினையாது- நெருங்கி வருகின்ற இந்தப் பிறப்பும் இறப்புமாகிய இவைகளை நீக்கும் வகை யினை எண்ணாமல், செறி குழலார் செய்யும் கிறியும் - நெருங்கிய கூந்தலை யுடைய மகளிர் செய்கின்ற பொய்ச் செயல்களையும், கீழ்மையும் - இழிவான தன்மைகளையும், கெண்டையம் கண்களும் உன்னியே கிடப் பேனை - கெண்டை மீன்போன்ற அழகிய கண்களையும் நினைத்துக் கொண்டு உண்மைப்பயனின்றிக் கிடக்கின்ற எனக்கு, இறை வன் எம்பிரான் - இறைவனாகிய எங்கள் பெருமான். எல்லை இல் லாத தன் மலர் கழல் இணை காட்டி - அளவில்லாத பெருமையை யுடைய தனது தாமரை மலர்போன்ற திருவடிகள் இரண்டினையும் எனக்குக் காட்டியருளி, அறிவு தந்து - மெய்யறிலினைத் தந்து, எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேன் - சிறியேனை ஆட்கொண் டருளிய அற்புதச் செயலை இத்தன்மைத்தென்று சொல்ல அறியேன். இந்தப் பிறப்பும் இறப்புமாகிய இவைகளை நீக்கும் வகையினை நினையாமல் நெருங்கிய கூந்தலையுடைய மகளிர் செய்கின்ற கிறியும். கீழ்மையும் கெண்டையங் கண்களும் ஆகிய இவற்றை நினைத்துக் கொண்டு பயனின்றிக் கிடக்கின்ற எனக்கு இறைவனாகிய எம்பெரு மான் எல்லையில்லாத பெருமையை புடைய தனது திருவடிகள் இரண் டினையும் எனக்குக் காட்டியருளி மெய்யறிவினைத் தந்து என்னை ஆட் கொண்டருளிய அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறி யேன் என்பதாம். ந செறிதல் - நெருங்குதல். என்றது மேலும் மேலும் வருதல், செறி குழல் - அடர்ந்த கூந்தல். கிறி - பொய்ச் சொல். கீழ்மை - உலகிய லில் ஈடுபடுதற்குரிய இழிவான தன்மைகள் கெண்டையங்கண் என்ற தனை 'கெண்டையந் தடங்கண் ணுமைநங்கை (சுந்.61-4) என அரு ளியமை காண்க. உன்னியே என்பதில் ஏகாரம். கிறியும் கீழ்மையும் கண்களும் எண்ணுதலேயன்றி பிறவிப் பயனைப் பெறுதற்குரிய நெறியை எண்ணாமையை உணர்த்தியது. எல்லையில்லாத இணைமலர்க் கழல் என்றது திருவடிகளின் உயர்வை உணர்த்தி நின்றது. 'பாதாள
1214 திருவாசக ஆராய்ச்சியுரை செறியும் இப்பிறப் பிறப்பிவை நினையாது செறிகுழ லார் செய்யும் Zings கிறியும் கீழ்மையும் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி அறிவு தந்தெனை யாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே . - ரை செறியும் இப்பிறப்பு இறப்பு இவை நினையாது- நெருங்கி வருகின்ற இந்தப் பிறப்பும் இறப்புமாகிய இவைகளை நீக்கும் வகை யினை எண்ணாமல் செறி குழலார் செய்யும் கிறியும் - நெருங்கிய கூந்தலை யுடைய மகளிர் செய்கின்ற பொய்ச் செயல்களையும் கீழ்மையும் - இழிவான தன்மைகளையும் கெண்டையம் கண்களும் உன்னியே கிடப் பேனை - கெண்டை மீன்போன்ற அழகிய கண்களையும் நினைத்துக் கொண்டு உண்மைப்பயனின்றிக் கிடக்கின்ற எனக்கு இறை வன் எம்பிரான் - இறைவனாகிய எங்கள் பெருமான் . எல்லை இல் லாத தன் மலர் கழல் இணை காட்டி - அளவில்லாத பெருமையை யுடைய தனது தாமரை மலர்போன்ற திருவடிகள் இரண்டினையும் எனக்குக் காட்டியருளி அறிவு தந்து - மெய்யறிலினைத் தந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேன் - சிறியேனை ஆட்கொண் டருளிய அற்புதச் செயலை இத்தன்மைத்தென்று சொல்ல அறியேன் . இந்தப் பிறப்பும் இறப்புமாகிய இவைகளை நீக்கும் வகையினை நினையாமல் நெருங்கிய கூந்தலையுடைய மகளிர் செய்கின்ற கிறியும் . கீழ்மையும் கெண்டையங் கண்களும் ஆகிய இவற்றை நினைத்துக் கொண்டு பயனின்றிக் கிடக்கின்ற எனக்கு இறைவனாகிய எம்பெரு மான் எல்லையில்லாத பெருமையை புடைய தனது திருவடிகள் இரண் டினையும் எனக்குக் காட்டியருளி மெய்யறிவினைத் தந்து என்னை ஆட் கொண்டருளிய அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறி யேன் என்பதாம் . செறிதல் - நெருங்குதல் . என்றது மேலும் மேலும் வருதல் செறி குழல் - அடர்ந்த கூந்தல் . கிறி - பொய்ச் சொல் . கீழ்மை - உலகிய லில் ஈடுபடுதற்குரிய இழிவான தன்மைகள் கெண்டையங்கண் என்ற தனை ' கெண்டையந் தடங்கண் ணுமைநங்கை ( சுந்.61-4 ) என அரு ளியமை காண்க . உன்னியே என்பதில் ஏகாரம் . கிறியும் கீழ்மையும் கண்களும் எண்ணுதலேயன்றி பிறவிப் பயனைப் பெறுதற்குரிய நெறியை எண்ணாமையை உணர்த்தியது . எல்லையில்லாத இணைமலர்க் கழல் என்றது திருவடிகளின் உயர்வை உணர்த்தி நின்றது . ' பாதாள