திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

சென்னிப்பத்து 1217 83017 யுடையவனது, தூய மாமலர் அடிக்கண்- பரிசுத்தமான பெருமை பொருந்திய தாமரைமலர் போன்ற செய்ய திருவடியின் கீழ்; நம் சென்னி மன்னி சுடரும் - எங்கள் தலைகள் நிலையாகப் பொருந்தி விளங்குதல் உறுதியாகும். தேவர்களுக்கெல்லாம் தேவனும் உண்மை வீரனும் திருப்பெருந் துறைத் தலைவனும், மூவராலும் அறிய முடியாத ஆனந்த மூர்த்தி யானும் தன்மெய்யடியாரல்லது பிறர் எவராயினும் அறிய முடி யாத ஒளிடையுடையவனுமாகிய சிவபெருமானது பரிசுத்தமான திருவடியின்கீழ் எங்கள் சென்னி நிலையாகப் பொருந்தி விளங்குதல் உறுதியாகும் என்பதாம். தேவதேவன் - தேவர்களுக்கெல்லாம் தேவன். "தேவர் கோ அறியாத தேவதேவன்" (சத: 30) 'மெய்த்தேவர் தேவுக்கே' (கோத் : 5) 'தேவர்தந் தேவே' (வாழா: 9) என அடிகள் பிறாண் டும் கூறுவன காண்க. மூவர்- பிரமா விஷ்ணு உருத்திரன் என் னும் மூவர். இவர்கள் பிரகிருதிதத்துவத்தில் உள்ளவராய் அத்தத் துவத்திற்குக் கீழ்ப்பட்ட படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய் யும் ஆன்ம வர்க்கத்தினராவர். இவர்கள் அதிகாரமலமுடைமை யால் இறைவனை அறியமாட்டாமையின் 'மூவராலுமறியொணா என்றார். "பூவேறு கோனும்...... மாவேறு தாமறியா' 'மூவரும் முப்பத்து மூவரும் அடிகள் பிற இடங்களிற் கூறியமையுங் காண்க. இம் மூவர் இறைவனின் அம்சமாயுள்ள பிரமா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மும் மூர்த்திகள் ஆகார் என்க. மும்மூர்த்திகள் இறைவனின் அம்ச மாயுள்ளார் என்பதனையும் பிரகிருதித்துவத்திலுள்ள பிரம விஷ் ணுக்கள் அல்லர் என்பதனையும், சோதியும் வானவருந் தேவருங் காணா என எனவும், "மூவுருவின் முதலுருவாய் இருநான்கான மூர்த்தியே'' "ஒருருவாயினை.... விண் முதற் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் தாவு 312-6 பிறவும் படைத்தழித்து அளிப்ப மும்மூர்த்திகளாயினை' "இருவரோடு ஒருவனாகி நின்றனை" எனவும் ஆளுடைய பிள்ளையார் திருவெழுகூற்றிருக்கையில் அருளிச் செய்யுமாற்றானறிக. யாவராயினும் - எத்துணை மேம்பாடுடைய ராயினும். உம்மை - உயர்வு சிறப்பு. அறியொணா இரண்டும் ஈறு கெட்ட பெயரெச்சங்கள். மூர்த்தியான் - வடிவினன். மலர்ச் சோதி- விரிவையுடைய ஒளி, மலர் என்னும் முதனிலை வினை மலர்தல் என் 307
சென்னிப்பத்து 1217 83017 யுடையவனது தூய மாமலர் அடிக்கண்- பரிசுத்தமான பெருமை பொருந்திய தாமரைமலர் போன்ற செய்ய திருவடியின் கீழ் ; நம் சென்னி மன்னி சுடரும் - எங்கள் தலைகள் நிலையாகப் பொருந்தி விளங்குதல் உறுதியாகும் . தேவர்களுக்கெல்லாம் தேவனும் உண்மை வீரனும் திருப்பெருந் துறைத் தலைவனும் மூவராலும் அறிய முடியாத ஆனந்த மூர்த்தி யானும் தன்மெய்யடியாரல்லது பிறர் எவராயினும் அறிய முடி யாத ஒளிடையுடையவனுமாகிய சிவபெருமானது பரிசுத்தமான திருவடியின்கீழ் எங்கள் சென்னி நிலையாகப் பொருந்தி விளங்குதல் உறுதியாகும் என்பதாம் . தேவதேவன் - தேவர்களுக்கெல்லாம் தேவன் . தேவர் கோ அறியாத தேவதேவன் ( சத : 30 ) ' மெய்த்தேவர் தேவுக்கே ' ( கோத் : 5 ) ' தேவர்தந் தேவே ' ( வாழா : 9 ) என அடிகள் பிறாண் டும் கூறுவன காண்க . மூவர்- பிரமா விஷ்ணு உருத்திரன் என் னும் மூவர் . இவர்கள் பிரகிருதிதத்துவத்தில் உள்ளவராய் அத்தத் துவத்திற்குக் கீழ்ப்பட்ட படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய் யும் ஆன்ம வர்க்கத்தினராவர் . இவர்கள் அதிகாரமலமுடைமை யால் இறைவனை அறியமாட்டாமையின் ' மூவராலுமறியொணா என்றார் . பூவேறு கோனும் ...... மாவேறு தாமறியா ' ' மூவரும் முப்பத்து மூவரும் அடிகள் பிற இடங்களிற் கூறியமையுங் காண்க . இம் மூவர் இறைவனின் அம்சமாயுள்ள பிரமா விஷ்ணு உருத்திரர் என்னும் மும் மூர்த்திகள் ஆகார் என்க . மும்மூர்த்திகள் இறைவனின் அம்ச மாயுள்ளார் என்பதனையும் பிரகிருதித்துவத்திலுள்ள பிரம விஷ் ணுக்கள் அல்லர் என்பதனையும் சோதியும் வானவருந் தேவருங் காணா என எனவும் மூவுருவின் முதலுருவாய் இருநான்கான மூர்த்தியே ' ' ஒருருவாயினை .... விண் முதற் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் தாவு 312-6 பிறவும் படைத்தழித்து அளிப்ப மும்மூர்த்திகளாயினை ' இருவரோடு ஒருவனாகி நின்றனை எனவும் ஆளுடைய பிள்ளையார் திருவெழுகூற்றிருக்கையில் அருளிச் செய்யுமாற்றானறிக . யாவராயினும் - எத்துணை மேம்பாடுடைய ராயினும் . உம்மை - உயர்வு சிறப்பு . அறியொணா இரண்டும் ஈறு கெட்ட பெயரெச்சங்கள் . மூர்த்தியான் - வடிவினன் . மலர்ச் சோதி விரிவையுடைய ஒளி மலர் என்னும் முதனிலை வினை மலர்தல் என் 307