திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1231 சென்னிப்பத்து பொன் மாமலர் - பொன்போன்ற சிறப்புடைய பெரிய தாமரை மலர். "தில்லைச் சிவன்றா. ளாம் பொற்றடமலர் சூடு மென்னாற்றல்'' (கோவை 21) என்புழி "பொற்றட மலர் - பொன்போற் சிறப் புடைய பெரிய தாமரைப்பூ" (பேர். உரை.) எனக் கூறப்பட்டமை காண்க. செம்பொன் அடி மாமலர்அடி சேவடி எனத் திருவடிக்கு மூன்று விசேடணங்கள் புணர்த்திக்கூறியது அதன் உயர்வினை விளக்கும் பொருட்டாகும். இதன்கண் " செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண் நஞ்சென்னி மன்னித்திகழும்" என்பதனால் சிவவிளைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 586. 9 பாசங்களினீங்கினவனை முத்த னைமுதற் சோதியை முக்க ணப்ப னைமுதல் வித்தினைச் சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம் பாடித் திரிதரும் பத்தர் காளிங்கே வம்மினீருங்கள் பாசந் தீரப் பணிமினோ சித்த மார்தருஞ் சேவடிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே. ப -ரை முத்தனை - இயல்பாகவே முதல் சோதியை - மற்றெல்லாச் சோதிகளுக்கும் மூலகாரணமாய் முதலிலுள்ள ஒளிவடிவினனை, முக்கண் அப்பனை - மூன்று திருக்கண் களையுடைய எங்கள் தந்தையை, முதல் வித்தினை - உலகத் தோற் றத்திற்கு மூலமாகிய வித்துப்போன்றவனை, சித்தனை - ஞானவடி வனை, சிவலோகனை -சிவலோகநாதனை, திருநாமம் பாடி திரிதரும் பத்தர்காள் - இறைவனது திருப்பெயர்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டு தலங்கள் தோறும் திரிகின்ற அன்பர்களே, இங்கே வம்மின் - நீங்கள் இங்கே வாருங்கள்; நீர் உங்கள் பாசம் தீர பணி மின் - நீங்கள் உங்களது மும்மலங்களும் நீங்கும் வண்ணம். எங்க ளுடன் சேர்ந்து அத்திரு வடிகளை வணங்குங்கள்; அங்ஙனம் வணங்கினால், சித்தம் ஆர் தரு சே அடிக்கண் - உள்ள நிறைவினைத் தருகின்ற அவனது சிவந்த திருவடியின் கீழ், சென்னி மன்னி திக ழும் - எங்கள் தலைகள் நிலையாகப் பொருந்தி விளங்குதல் உறுதி யாகும். D முத்தனை, முதற்சோதியை, முக்கண் அப்பனை, முதல் வித்தினை சித்தனைச் சிவலோகனை அவனுடைய திருநாமங்களைப் பாடிக்கொண்டு தலங்கள் தோறும் திரிகின்ற பத்தர்களே, இங்கே வாருங்கள்.
1231 சென்னிப்பத்து பொன் மாமலர் - பொன்போன்ற சிறப்புடைய பெரிய தாமரை மலர் . தில்லைச் சிவன்றா . ளாம் பொற்றடமலர் சூடு மென்னாற்றல் ' ' ( கோவை 21 ) என்புழி பொற்றட மலர் - பொன்போற் சிறப் புடைய பெரிய தாமரைப்பூ ( பேர் . உரை . ) எனக் கூறப்பட்டமை காண்க . செம்பொன் அடி மாமலர்அடி சேவடி எனத் திருவடிக்கு மூன்று விசேடணங்கள் புணர்த்திக்கூறியது அதன் உயர்வினை விளக்கும் பொருட்டாகும் . இதன்கண் செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண் நஞ்சென்னி மன்னித்திகழும் என்பதனால் சிவவிளைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 586 . 9 பாசங்களினீங்கினவனை முத்த னைமுதற் சோதியை முக்க ணப்ப னைமுதல் வித்தினைச் சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம் பாடித் திரிதரும் பத்தர் காளிங்கே வம்மினீருங்கள் பாசந் தீரப் பணிமினோ சித்த மார்தருஞ் சேவடிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே . -ரை முத்தனை - இயல்பாகவே முதல் சோதியை - மற்றெல்லாச் சோதிகளுக்கும் மூலகாரணமாய் முதலிலுள்ள ஒளிவடிவினனை முக்கண் அப்பனை - மூன்று திருக்கண் களையுடைய எங்கள் தந்தையை முதல் வித்தினை - உலகத் தோற் றத்திற்கு மூலமாகிய வித்துப்போன்றவனை சித்தனை - ஞானவடி வனை சிவலோகனை -சிவலோகநாதனை திருநாமம் பாடி திரிதரும் பத்தர்காள் - இறைவனது திருப்பெயர்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டு தலங்கள் தோறும் திரிகின்ற அன்பர்களே இங்கே வம்மின் - நீங்கள் இங்கே வாருங்கள் ; நீர் உங்கள் பாசம் தீர பணி மின் - நீங்கள் உங்களது மும்மலங்களும் நீங்கும் வண்ணம் . எங்க ளுடன் சேர்ந்து அத்திரு வடிகளை வணங்குங்கள் ; அங்ஙனம் வணங்கினால் சித்தம் ஆர் தரு சே அடிக்கண் - உள்ள நிறைவினைத் தருகின்ற அவனது சிவந்த திருவடியின் கீழ் சென்னி மன்னி திக ழும் - எங்கள் தலைகள் நிலையாகப் பொருந்தி விளங்குதல் உறுதி யாகும் . D முத்தனை முதற்சோதியை முக்கண் அப்பனை முதல் வித்தினை சித்தனைச் சிவலோகனை அவனுடைய திருநாமங்களைப் பாடிக்கொண்டு தலங்கள் தோறும் திரிகின்ற பத்தர்களே இங்கே வாருங்கள் .