திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

400- no 43. திருவார்த்தை அறிவித்தன்புறுதல் திருப்பெருந்துறையிலருளிச் செய்யப்பட்டது. இறைவன் தம்மை ஆட்கொண்ட செயல் முதலாக மற்றும் மற் றும் உயிர்களுக்கும் புரிந்த அருட் செயல்களின் உண்மைக்கருத்துக் களை அறிந்து இறைவன் அருள்வழி நின்று வழிபடுகின்றவர், அறிய வர்கள் எம்பிரானாவர் என உரைப்பது திருவார்த்தையாகும். எம் பிரானாவர் என்றது எமக்குத் தலைவராவர் எனவும் எம்மால் வழி படற்குரியராவர் எனவும் இறைவன் திருவருளுருவைப் பெற்றவரா வர் எனவும் பொருள்கொள்ளுமாறு அமைந்துள்ளது. இதன் உள்ளுறை அறிவித்து அன்புறுதல் என்பது. இறைவன் திருவருட் செயல்களைப் பிறர்க்கறிவித்து அவ்விறைவன் மாட்டு அன்பு பொருந்தப் பெறுதல் இஃது அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் என்னும் செய்யுள் வகையால் இயன்றது. 587. அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதில் பரங்கரு ணையடியார் குலாவுநீதி குணமாக நல்கும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந் தாதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வாரெம் பிரானாவாரே. ப . ரை : மாது இவர் பாகன்- உமை அமர்ந்த பாகத்தையுடையவன்; மறை பயின்ற வாசகன்-வேதங்கள் பொருந்தி வெளிப்பட்ட மொழியையுடையவன்; மா மலர் மேய சோதி - இருதய கமலத்தில் வீற்றிருக்கும் ஒளி வடிவினையுடையவன்; கோது இல் பரம் கருணை - குற்றமில்லாத மேலான அருளையுடை யவன்; அடியார் குலாவு நீதி - அடியார்கள் கொண்டாடுகின்ற நீதி வடிவினன்; மண்ணிடை இழிந்து வந்து - பரமாசாரியனாய் மண் ணுலகில் இறங்கி வலிய எழுந்தருளிவந்து, குணம் ஆக நல்கும் - தன் இறைமைக் குணங்கள் எனக்கும் உளதாகுமாறு அருள்செய் 108
400 no 43. திருவார்த்தை அறிவித்தன்புறுதல் திருப்பெருந்துறையிலருளிச் செய்யப்பட்டது . இறைவன் தம்மை ஆட்கொண்ட செயல் முதலாக மற்றும் மற் றும் உயிர்களுக்கும் புரிந்த அருட் செயல்களின் உண்மைக்கருத்துக் களை அறிந்து இறைவன் அருள்வழி நின்று வழிபடுகின்றவர் அறிய வர்கள் எம்பிரானாவர் என உரைப்பது திருவார்த்தையாகும் . எம் பிரானாவர் என்றது எமக்குத் தலைவராவர் எனவும் எம்மால் வழி படற்குரியராவர் எனவும் இறைவன் திருவருளுருவைப் பெற்றவரா வர் எனவும் பொருள்கொள்ளுமாறு அமைந்துள்ளது . இதன் உள்ளுறை அறிவித்து அன்புறுதல் என்பது . இறைவன் திருவருட் செயல்களைப் பிறர்க்கறிவித்து அவ்விறைவன் மாட்டு அன்பு பொருந்தப் பெறுதல் இஃது அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் என்னும் செய்யுள் வகையால் இயன்றது . 587 . அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதில் பரங்கரு ணையடியார் குலாவுநீதி குணமாக நல்கும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந் தாதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வாரெம் பிரானாவாரே . . ரை : மாது இவர் பாகன்- உமை அமர்ந்த பாகத்தையுடையவன் ; மறை பயின்ற வாசகன் - வேதங்கள் பொருந்தி வெளிப்பட்ட மொழியையுடையவன் ; மா மலர் மேய சோதி - இருதய கமலத்தில் வீற்றிருக்கும் ஒளி வடிவினையுடையவன் ; கோது இல் பரம் கருணை - குற்றமில்லாத மேலான அருளையுடை யவன் ; அடியார் குலாவு நீதி - அடியார்கள் கொண்டாடுகின்ற நீதி வடிவினன் ; மண்ணிடை இழிந்து வந்து - பரமாசாரியனாய் மண் ணுலகில் இறங்கி வலிய எழுந்தருளிவந்து குணம் ஆக நல்கும் - தன் இறைமைக் குணங்கள் எனக்கும் உளதாகுமாறு அருள்செய் 108