திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவார்த்தை அணிமுடி ஆதியும், தேவர்கோமானும், ஆனந்தக் கூத்தனும், அறுசமயத்தவர்களும் தன்னைப் பணியும்படி செய்து மண்ணும் விண் ணும் பரவி ஏத்த, அவர்களது பிறவிப்பிணி ஒழியும்படி அருள் செய்யும் திருப்பெருந்துறையையுடைய எங்கள் பேரருள் வள்ளலு மாகிய இறைவன் பெண்பாலுகந்து படவது ஏறி வலைகொண்டு மீன்விசிறும் வகையை அறியவல்லார் எங்கள் தலைவராவார் என் பதாம். முடி - சடைமுடி. "தேனார் சடைமுடியான்" "தெற்றார் சடை முடியான்" (உயிருண்ணி 2, 5) 'கற்றைச் சடைமுடியான்" (பொற் 14) என வருவன காண்க, ஆதி - முதல்வன். " ஆதியடியைப்பணிய " (ஞான 167 - 7) என வருதல்காண்க. ஆனந்தக் கூத்தன் - பேரின்பக் கூத்தன். ஆனந்தக் கூத்தனை. ''சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சொற்பத மாம் அந்தச் சுந்தரக் கூத்தனை பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யாரறிவாரே' (2723) பற்றி வாவனை எனத் திருமந்திரத்தும் வருவன காண்க. அறு சமயம் என்றது அகச் சமயங்கள் ஆறினை. அவை; வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் என்பன. பாரும் விண்ணும் பரவி யேத்தல் - மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் வழிபட்டுத் துதித்தல். 'பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே' (ஆசை 7) என அடிகள் பிறிதோரிடத்தும் அருளியமை காண்சு. பாரும் விண் ணும் ஆகுபெயராய் ஆங்காங்குள்ள பரிபக்குவமடைந்தோரை உணர்த்திநின்றன. பெண்பாலுகந்து என்றது வலைஞர் மகளாகச் சென்றிருந்த உமை யம்மையாகிய பெண்ணை மணஞ்செய்து கொள்ள விரும்பி என்றவாறு படவு - படகு; சிறிய ஓடம். இது தோணியின் வேறு என்பது "கிட்டுந் தோணியைப் படகினைக் கிழிபட விசைபோய்'' "படவு டைப்பவோர் தோணிமேற் பாய்ந்தும்'' எனத் திருவிளையாடற் புராணத்து வலை வீசின படலத்து வருவன காண்க. டடவதேறி வலைகொண்டு மீன் விசிறும் எனக் கூட்டுக. வான் மீன் - பெரிய கெளிற்று மீன். இறைவன் வலைகொண்டு வீசிய மீன் சுறவு எனத் திருவிளையாடற் புராணம் கூறுமாயினும் "கேவேட ராகிக் கெளிறது படுத்தும்'" (கீர்த்தி. 17) என அடிகள் கூறுதலின் இக்கூற்றே கொள்ளற் பாலதாமென்க. இறைவன் பெண்பால் உகந்து வலை கொண்டு மீன் விசிறியமை, Ra (34) (38)
திருவார்த்தை அணிமுடி ஆதியும் தேவர்கோமானும் ஆனந்தக் கூத்தனும் அறுசமயத்தவர்களும் தன்னைப் பணியும்படி செய்து மண்ணும் விண் ணும் பரவி ஏத்த அவர்களது பிறவிப்பிணி ஒழியும்படி அருள் செய்யும் திருப்பெருந்துறையையுடைய எங்கள் பேரருள் வள்ளலு மாகிய இறைவன் பெண்பாலுகந்து படவது ஏறி வலைகொண்டு மீன்விசிறும் வகையை அறியவல்லார் எங்கள் தலைவராவார் என் பதாம் . முடி - சடைமுடி . தேனார் சடைமுடியான் தெற்றார் சடை முடியான் ( உயிருண்ணி 2 5 ) ' கற்றைச் சடைமுடியான் ( பொற் 14 ) என வருவன காண்க ஆதி - முதல்வன் . ஆதியடியைப்பணிய ( ஞான 167 - 7 ) என வருதல்காண்க . ஆனந்தக் கூத்தன் - பேரின்பக் கூத்தன் . ஆனந்தக் கூத்தனை . ' ' சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சொற்பத மாம் அந்தச் சுந்தரக் கூத்தனை பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யாரறிவாரே ' ( 2723 ) பற்றி வாவனை எனத் திருமந்திரத்தும் வருவன காண்க . அறு சமயம் என்றது அகச் சமயங்கள் ஆறினை . அவை ; வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் பாசுபதம் சைவம் என்பன . பாரும் விண்ணும் பரவி யேத்தல் - மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் வழிபட்டுத் துதித்தல் . ' பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே ' ( ஆசை 7 ) என அடிகள் பிறிதோரிடத்தும் அருளியமை காண்சு . பாரும் விண் ணும் ஆகுபெயராய் ஆங்காங்குள்ள பரிபக்குவமடைந்தோரை உணர்த்திநின்றன . பெண்பாலுகந்து என்றது வலைஞர் மகளாகச் சென்றிருந்த உமை யம்மையாகிய பெண்ணை மணஞ்செய்து கொள்ள விரும்பி என்றவாறு படவு - படகு ; சிறிய ஓடம் . இது தோணியின் வேறு என்பது கிட்டுந் தோணியைப் படகினைக் கிழிபட விசைபோய் ' ' படவு டைப்பவோர் தோணிமேற் பாய்ந்தும் ' ' எனத் திருவிளையாடற் புராணத்து வலை வீசின படலத்து வருவன காண்க . டடவதேறி வலைகொண்டு மீன் விசிறும் எனக் கூட்டுக . வான் மீன் - பெரிய கெளிற்று மீன் . இறைவன் வலைகொண்டு வீசிய மீன் சுறவு எனத் திருவிளையாடற் புராணம் கூறுமாயினும் கேவேட ராகிக் கெளிறது படுத்தும் ' ( கீர்த்தி . 17 ) என அடிகள் கூறுதலின் இக்கூற்றே கொள்ளற் பாலதாமென்க . இறைவன் பெண்பால் உகந்து வலை கொண்டு மீன் விசிறியமை Ra ( 34 ) ( 38 )