திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1238 திருவாசக ஆராய்ச்சியுரை நெடுஞ் சடைக் கிடந்த குறும்பிறைக் கொழுந்துங் கருமுகில் வெளுத்த திருமிடற் றிருளு நுதன்மதி கிழித்த தழலவிர் நோக்கமு மறைத்தொரு சிறுகுடிப் பரதவ னாகிப் பொன்றலைப் புணர்வலை கொடுங்கர மாக்கி நெடுங்கடல் கலக்கு மொருமீன் படுத்த நிறையரு ணாயகன்" எனக் கல்லாடத்து வருதலானுமறிக. 590. இதன்கண் 'மீன் விசிறும் வகையறிவார் எம்பிரா னாவாரே" என் பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதரு தல் காண்க. 15: 23-9 வேடுரு வாகி மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்துதன்னைத் தேட இருந்த சிவபெருமான் 3 சிந்தனை செய்தடி யோங்களுய்ய ஆட லமர்ந்த பரிமாவேறி ஐயன் பெருந்துறை யாதியந்நாள் ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வாரெம் பிரானாவாரே. ப-ரை மிகு குறை வானவர் - மிகுந்த குறைகளையுடைய வான வர்; மகேந்திரத்து வந்து தன்னை தேட - மகேந்திரமலையில் வந்து தன்னைத் தேடும்படி, வேடு உருவாகி இருந்த சிவபெருமான்-வேட் டுவ வடிவங்கொண்டு எழுந்தருளியிருந்த சிவபெருமானும், அடி யோங்கள் உய்ய சிந்தனை செய்து - அடியோங்கள் உய்யும் வசையினைத் திருவுள்ளத்திற்கொண்டு, ஆடல் அமர்ந்த பரிமா ஏறி - வெற்றி பொருந்திய குதிரையாகிய மாவில் ஏறி வந்தவனும், ஐயன் - தலைவனும். பெருந்துறை ஆதி-திருப் பெருந்துறை முதல்லனுமாகிய இறைவன். அந்நாள் - அவ்வக்காலங் களில், ஏடர்களை எங்கும் ஆண்டு கொண்ட இயல்பு அறிவார் எம் பிரானாவாரே - தன்னை அடையும் அவாவுடையவர்களை எவ்விடங் களிலும் ஆட்கொண்டருளிய தன்மையை அறியவல்லார் எங்கள் தலைவராவர். வானவர் மசேந்திரமலையில் தன்னை வந்து தேடும்படி வேட்டுவ வடிவங்கொண்டு எழுந்தருளியிருந்த சிவபெருமானும், அடியேங்கள் உய்யக் குதிரைமீது ஏறி வந்தவனும், தலைவனும், திருப்பெருந்துறை யாதீயுமாகிய இறைவன் அவ்வக்காலங்களில் ஏடர்களை ஆட் கொண்ட தன்பையை அறியவல்லார் எங்கள் தலைவராவர் என்பதாம்.
1238 திருவாசக ஆராய்ச்சியுரை நெடுஞ் சடைக் கிடந்த குறும்பிறைக் கொழுந்துங் கருமுகில் வெளுத்த திருமிடற் றிருளு நுதன்மதி கிழித்த தழலவிர் நோக்கமு மறைத்தொரு சிறுகுடிப் பரதவ னாகிப் பொன்றலைப் புணர்வலை கொடுங்கர மாக்கி நெடுங்கடல் கலக்கு மொருமீன் படுத்த நிறையரு ணாயகன் எனக் கல்லாடத்து வருதலானுமறிக . 590 . இதன்கண் ' மீன் விசிறும் வகையறிவார் எம்பிரா னாவாரே என் பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதரு தல் காண்க . 15 : 23-9 வேடுரு வாகி மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்துதன்னைத் தேட இருந்த சிவபெருமான் 3 சிந்தனை செய்தடி யோங்களுய்ய ஆட லமர்ந்த பரிமாவேறி ஐயன் பெருந்துறை யாதியந்நாள் ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வாரெம் பிரானாவாரே . - ரை மிகு குறை வானவர் - மிகுந்த குறைகளையுடைய வான வர் ; மகேந்திரத்து வந்து தன்னை தேட - மகேந்திரமலையில் வந்து தன்னைத் தேடும்படி வேடு உருவாகி இருந்த சிவபெருமான் - வேட் டுவ வடிவங்கொண்டு எழுந்தருளியிருந்த சிவபெருமானும் அடி யோங்கள் உய்ய சிந்தனை செய்து - அடியோங்கள் உய்யும் வசையினைத் திருவுள்ளத்திற்கொண்டு ஆடல் அமர்ந்த பரிமா ஏறி - வெற்றி பொருந்திய குதிரையாகிய மாவில் ஏறி வந்தவனும் ஐயன் - தலைவனும் . பெருந்துறை ஆதி - திருப் பெருந்துறை முதல்லனுமாகிய இறைவன் . அந்நாள் - அவ்வக்காலங் களில் ஏடர்களை எங்கும் ஆண்டு கொண்ட இயல்பு அறிவார் எம் பிரானாவாரே - தன்னை அடையும் அவாவுடையவர்களை எவ்விடங் களிலும் ஆட்கொண்டருளிய தன்மையை அறியவல்லார் எங்கள் தலைவராவர் . வானவர் மசேந்திரமலையில் தன்னை வந்து தேடும்படி வேட்டுவ வடிவங்கொண்டு எழுந்தருளியிருந்த சிவபெருமானும் அடியேங்கள் உய்யக் குதிரைமீது ஏறி வந்தவனும் தலைவனும் திருப்பெருந்துறை யாதீயுமாகிய இறைவன் அவ்வக்காலங்களில் ஏடர்களை ஆட் கொண்ட தன்பையை அறியவல்லார் எங்கள் தலைவராவர் என்பதாம் .