திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவார்த்தை இறைவன் வேற்றுருக்கொண்ட வரலாற்றினைக் கந்தபுராணம் ததீசியுத்தரப்படலத்துட் காண்க. அவ்வேற்றுருவே வேடுருவாக இங்குக் கூறப்பட்டது. கந்தபுராணத்துட் திருக்கயிலாயமும் இங்கு மகேந்திரமும் கூறப்படுகின்றன. மகேந்திரம் பொதிகைமலைக்குத் தெற்கேயுள்ளதெனச் சிவதருமோத்திரம் கூறும். சுராசுரர்களுக்கு யுத்தம் மூண்டபோது பரப்பிரமம் சுரர்பக்கம் இருந்து அவர்களுக்கு வெற்றியுண்டாகுமாறு செய்தது. அதனை உண ராத சுரர் தாம்தாமே தனித்தனி அசுரரை வென்றதாகக் கூறி செருக்குற்றனர். அப்போது பரப்பிரமம் அவர்கள் மத்தியில் இயக்க வடிவங்கொண்டு தோன்றி ஒரு துரும்பினைக் கொண்டு அக்கினியையும் வாயுவையும் வெற்றி கொள்ளுதலும் அதனைக் கண்ட இந்திரன் இயக் கன் முன் சென்று நீ யார்? என வினவினன். உடனே இயக்கராகிய பரப்பிரமம் அவர்கள் காண மறைந்தது. அப்போது ஆகாயத்திலே சர்வாபரண பூசிதையராய் கோடி சூரியப்பிரகாசராய் ஐம்மவதியார் தோன்றியருளி, அது பிரம்மம் : அதன் சகாயத்தினாலேயே நீவிர் அசு ரரை வென்றனிர் என உபதேசித்தருளி மறைந்தருளினர் எனக் கேனோப கூறப்பட்டது. நிடத மந்திரப்பொருளை வாயுசங்கிதை, நிடதத்திற் இங்குக் மகளா இக்கேனோப கயிலாயசங்கிதை என்னும் புராணங்கள் எடுத்து விரித்துள்ளன. இவற்றால் கூறப்பட்ட பிரமம் சிவம் என்பதும் ஐம்மவதி இமவான் கிய உமையம்மையென்பதும் இனிது புலப்படும். இழிவான வேடத் துடன் இறைவன் இயக்க வடிவாய்த் தோன்றினன். என கயிலாய சங்கிதை கூறுகின்றது. அதனாலேயே அடிகள் இத் திருப்பாட்டில் 'வேடுருவாகி' என அருளிச் செய்வாராயினர். கைலாயத்திற்சொன்ன ஆகமங்களை 'மன்னுமாமலை மகேந்திர மதனிற்சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும' (கீர்த்தி 9-10) என அடிகள் கூறுமாற்றால் அடிகள் கருத்தில் மகேந்திரம் கயிலாயத்தோடொத்த சிறப்புடைய தாகக் கொள்ளப்பட்டமையின் 'மகேந்திரத்து மிகு குறைவானவர் வந்து தன்னைத் தேட' என அடிகள் அருளிச் செய்வாராயினர். இத் திருப்பாட்டின் முதலிரண்டு அடிகளிலும் கூறப்பட்ட பொருள் கேனோப நிடத மந்திரப் பொருளேயாம் என்பது இனிது விளங்கும். அடியோங்கள் உய்யச் சிந்தனை செய்து என மாறிக் கூட்டுக. சிந் தனை - கருதுதல் ''சிற்றப் பலம் சிந்தை செய்பவரின்” (கோவை 368) ஆடல் - வெற்றி, 'ஊனைப் பூசலோ டாடல் கண்டு வந்தும்" (பெருங் (1) 55-65). பரிமா - குதிரையாகிய மா. "அரிமாவும் பரிமாவுங் களிறுங் கராமும்'" ( கலி 1 03-18) என்புழி. ''பரிமாவும் - குதிரை யாகிய மாவும்" என நச்சினார்க்கினியா உரைத்தவாறுங் காண்சு. இறைவன் பரிமா ஏறிவந்த வரலாற்றைத் திருவிளையாடற்புராணம நரிபரியாக்கிய படலத்திற் காண்க.
திருவார்த்தை இறைவன் வேற்றுருக்கொண்ட வரலாற்றினைக் கந்தபுராணம் ததீசியுத்தரப்படலத்துட் காண்க . அவ்வேற்றுருவே வேடுருவாக இங்குக் கூறப்பட்டது . கந்தபுராணத்துட் திருக்கயிலாயமும் இங்கு மகேந்திரமும் கூறப்படுகின்றன . மகேந்திரம் பொதிகைமலைக்குத் தெற்கேயுள்ளதெனச் சிவதருமோத்திரம் கூறும் . சுராசுரர்களுக்கு யுத்தம் மூண்டபோது பரப்பிரமம் சுரர்பக்கம் இருந்து அவர்களுக்கு வெற்றியுண்டாகுமாறு செய்தது . அதனை உண ராத சுரர் தாம்தாமே தனித்தனி அசுரரை வென்றதாகக் கூறி செருக்குற்றனர் . அப்போது பரப்பிரமம் அவர்கள் மத்தியில் இயக்க வடிவங்கொண்டு தோன்றி ஒரு துரும்பினைக் கொண்டு அக்கினியையும் வாயுவையும் வெற்றி கொள்ளுதலும் அதனைக் கண்ட இந்திரன் இயக் கன் முன் சென்று நீ யார் ? என வினவினன் . உடனே இயக்கராகிய பரப்பிரமம் அவர்கள் காண மறைந்தது . அப்போது ஆகாயத்திலே சர்வாபரண பூசிதையராய் கோடி சூரியப்பிரகாசராய் ஐம்மவதியார் தோன்றியருளி அது பிரம்மம் : அதன் சகாயத்தினாலேயே நீவிர் அசு ரரை வென்றனிர் என உபதேசித்தருளி மறைந்தருளினர் எனக் கேனோப கூறப்பட்டது . நிடத மந்திரப்பொருளை வாயுசங்கிதை நிடதத்திற் இங்குக் மகளா இக்கேனோப கயிலாயசங்கிதை என்னும் புராணங்கள் எடுத்து விரித்துள்ளன . இவற்றால் கூறப்பட்ட பிரமம் சிவம் என்பதும் ஐம்மவதி இமவான் கிய உமையம்மையென்பதும் இனிது புலப்படும் . இழிவான வேடத் துடன் இறைவன் இயக்க வடிவாய்த் தோன்றினன் . என கயிலாய சங்கிதை கூறுகின்றது . அதனாலேயே அடிகள் இத் திருப்பாட்டில் ' வேடுருவாகி ' என அருளிச் செய்வாராயினர் . கைலாயத்திற்சொன்ன ஆகமங்களை ' மன்னுமாமலை மகேந்திர மதனிற்சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும ' ( கீர்த்தி 9-10 ) என அடிகள் கூறுமாற்றால் அடிகள் கருத்தில் மகேந்திரம் கயிலாயத்தோடொத்த சிறப்புடைய தாகக் கொள்ளப்பட்டமையின் ' மகேந்திரத்து மிகு குறைவானவர் வந்து தன்னைத் தேட ' என அடிகள் அருளிச் செய்வாராயினர் . இத் திருப்பாட்டின் முதலிரண்டு அடிகளிலும் கூறப்பட்ட பொருள் கேனோப நிடத மந்திரப் பொருளேயாம் என்பது இனிது விளங்கும் . அடியோங்கள் உய்யச் சிந்தனை செய்து என மாறிக் கூட்டுக . சிந் தனை - கருதுதல் ' ' சிற்றப் பலம் சிந்தை செய்பவரின் ( கோவை 368 ) ஆடல் - வெற்றி ' ஊனைப் பூசலோ டாடல் கண்டு வந்தும் ( பெருங் ( 1 ) 55-65 ) . பரிமா - குதிரையாகிய மா . அரிமாவும் பரிமாவுங் களிறுங் கராமும் ' ( கலி 1 03-18 ) என்புழி . ' ' பரிமாவும் - குதிரை யாகிய மாவும் என நச்சினார்க்கினியா உரைத்தவாறுங் காண்சு . இறைவன் பரிமா ஏறிவந்த வரலாற்றைத் திருவிளையாடற்புராணம நரிபரியாக்கிய படலத்திற் காண்க .