திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

166 திருவெம்பாவை ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந் தீர்த்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங் கூத்தனில் வானுங் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழன் மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந் டையான் பொற்பாதம் ஏத்தி யிருஞ்சுனைநீர் ஆடேலோ ரெம்பாவாய். 529 ளவன், ப-ரை. ஆர்த்த பிறவி துயர்கெட - நம்மைப்பந்தித்துள்ள பிறவித்துன்பங்கள் நீங்கும் வண்ணம், நாம் ஆர்த்து ஆடும் தீர்த் தன் - நாம் மகிழ்ச்சியால் ஆரவாரித்து முழுகும் தூய நீராயுள்ளவன், நல் தில்லை சிற்றம்பலத்து தீ ஆடும் கூத்தன் - நல்ல தில்லைச் சிற்றம் பலத்தின் கண் அங்கையில் அனல் ஏந்தி ஆடுகின்ற கூத்தப்பிரானாயுள் இவ்வானும் குவலயமும் எல்லோமும் - இவ்விண்ணுலகத் தையும் மண்ணுலகத்தையும் உயிர்கள் எல்லோமையும், படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடி - உண்டாக்கியும் பாதுகாத்தும் ஒடுக் கியும் விளையாடுபவன் (இத்தன்மையுடையவனது), வார்த்தையும் பேசி - திருவைந்தெழுத்து மந்திரத்தையும் ஓதி, வளை சிலம்ப - கையி லணிந்த வளையல்கள் ஒலிக்கவும், வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய- இடையிலணிந்த நீண்ட மேகலைகள் பேரொலி செய்யவும், அணி குழல் மேல் வண்டு ஆர்ப்ப - பூமாலை அணிந்த கூந்தலின் மேலுள்ள வண்டுகள் எழுந்து ஒலி செய்யவும், பூ திகழும் பொய்கை குடைந்து தாமரை முதலிய பூக்கள் விளங்கும் பொய்கையில் நீரைக்கைகளால் துழாவி, உடையான் பொன்பாதம் ஏத்தி - எம்மையுடைய இறை வனின் அழகிய திருவடிகளைப் புகழ்ந்து, இரும் சுனை நீர் ஆடு - பெரிய சுனைநீர் போலும் அப்பொய்கை நீரில் முழுகுவோமாக, வாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவீ! நீயும் நீராடி அருள்வாயாக (எனத்தாம் நீராடுமாறு கூறினர்] என்பதாம். எம்பா நம்மைப் பந்தித்துள்ள பிறவித் துன்பங்கள் நீங்கும் வண்ணம் நாம் ஆரவாரித்து ஆடும் தூய நீராடள்ளவன்; நல்ல தில்லைச்சிற்றம் பலத்தின் கண்ணே கையில் தீ ஏந்தி ஆடும் கூத்தப்பிரானாயுள்ளவன்; இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும், படைத்தும், கரந் தும் விளையாடுபவன்; இத்தன்மையுடைய இறைவனது திருவைந் தெழுத்து மந்திரத்தையும் ஓதி, வளை, சிலம்ப, வார்கலைகள் ஆர்ப் பரவஞ்செய்ய, அணிகுழல் மேல் வண்டார்ப்ப, தாமரை முதலிய பூக்கள் விளங்கும் பொய்கையில் நீரைக் கையால் குடைந்து இறை 64
166 திருவெம்பாவை ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந் தீர்த்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங் கூத்தனில் வானுங் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழன் மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந் டையான் பொற்பாதம் ஏத்தி யிருஞ்சுனைநீர் ஆடேலோ ரெம்பாவாய் . 529 ளவன் - ரை . ஆர்த்த பிறவி துயர்கெட - நம்மைப்பந்தித்துள்ள பிறவித்துன்பங்கள் நீங்கும் வண்ணம் நாம் ஆர்த்து ஆடும் தீர்த் தன் - நாம் மகிழ்ச்சியால் ஆரவாரித்து முழுகும் தூய நீராயுள்ளவன் நல் தில்லை சிற்றம்பலத்து தீ ஆடும் கூத்தன் - நல்ல தில்லைச் சிற்றம் பலத்தின் கண் அங்கையில் அனல் ஏந்தி ஆடுகின்ற கூத்தப்பிரானாயுள் இவ்வானும் குவலயமும் எல்லோமும் - இவ்விண்ணுலகத் தையும் மண்ணுலகத்தையும் உயிர்கள் எல்லோமையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடி - உண்டாக்கியும் பாதுகாத்தும் ஒடுக் கியும் விளையாடுபவன் ( இத்தன்மையுடையவனது ) வார்த்தையும் பேசி - திருவைந்தெழுத்து மந்திரத்தையும் ஓதி வளை சிலம்ப - கையி லணிந்த வளையல்கள் ஒலிக்கவும் வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய இடையிலணிந்த நீண்ட மேகலைகள் பேரொலி செய்யவும் அணி குழல் மேல் வண்டு ஆர்ப்ப - பூமாலை அணிந்த கூந்தலின் மேலுள்ள வண்டுகள் எழுந்து ஒலி செய்யவும் பூ திகழும் பொய்கை குடைந்து தாமரை முதலிய பூக்கள் விளங்கும் பொய்கையில் நீரைக்கைகளால் துழாவி உடையான் பொன்பாதம் ஏத்தி - எம்மையுடைய இறை வனின் அழகிய திருவடிகளைப் புகழ்ந்து இரும் சுனை நீர் ஆடு - பெரிய சுனைநீர் போலும் அப்பொய்கை நீரில் முழுகுவோமாக வாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவீ ! நீயும் நீராடி அருள்வாயாக ( எனத்தாம் நீராடுமாறு கூறினர் ] என்பதாம் . எம்பா நம்மைப் பந்தித்துள்ள பிறவித் துன்பங்கள் நீங்கும் வண்ணம் நாம் ஆரவாரித்து ஆடும் தூய நீராடள்ளவன் ; நல்ல தில்லைச்சிற்றம் பலத்தின் கண்ணே கையில் தீ ஏந்தி ஆடும் கூத்தப்பிரானாயுள்ளவன் ; இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந் தும் விளையாடுபவன் ; இத்தன்மையுடைய இறைவனது திருவைந் தெழுத்து மந்திரத்தையும் ஓதி வளை சிலம்ப வார்கலைகள் ஆர்ப் பரவஞ்செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப தாமரை முதலிய பூக்கள் விளங்கும் பொய்கையில் நீரைக் கையால் குடைந்து இறை 64