திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1244 594, திருவாசக ஆராய்ச்சியுரை பூவலர் கொன்றைய மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன் மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன் ஏதில் பெரும்புகழ் எங்களீசன் இருங்கடல் வாணற்குத் தீயிற்றோன்றும் ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வாரெம் பிரானாவாரே. திருமார்பையு வீரன் - போர்த் ப - ரை : கொன்றைய பூ அலர் மாலை மார்பன் - கொன்றை யினுடைய அழகிய பூக்களினாலாகிய மாலையணிந்த டையவனும், போர் உகிர் வன்புலி கொன்ற தொழிலுக்குரிய நகங்களையுடைய வலிய புலியினைக் கொன்ற வீர னும், மாது நல்லாள் உமை மங்கை பங்கன் - அழகிய நல்லியல்புகளை யுடைய உமையம்பையைப் பாகத்திலுடையவனும், வண்பொழில் சூழ் தென் பெருந்துறை கோன் - வளவிய சோலை சூழ்ந்த தெற்கின் கணுள்ள திருப்பெருந்துறைத் தலைவனும், ஏது இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் - குற்றமில்லாத டெரிய புகழையுடைய எங்கள் ஈசனு மாகிய இறைவன், இரு கடல் வாணற்கு தீயில் தோன்றும் - பெரிய சடலில் வாழ்வோனாகிய வருணனுக்கு நெருப்பினின்றும் தோன்றிய, ஓவிய மங்கையர் தோள் புணரும் உரு அறிவார் எம்பிரான் ஆவார். சித்திரம் போன்ற பெண்களது தோள்களைச் சேர்ந்தருளிய திருவுரு வத்தை அறிய வல்லவர் எமது தலைவராவர். கொன்றை மலர் மாலையைத் தரித்த திருமார்பை யுடையவனும் புலியைக் கொன்ற வீரனும், உமை மங்கை பங்கனும். திருப்பெருந் துறைத்தலைவனும், எங்கள் ஈசனுமாகிய இறைவன் வருணனுக்கு நெருப்பினின்றும் தோன்றிய மங்கையர்களுடைய தோள்களைப் புணர்ந்த திருவுருவத்தை அறியவல்லவர் எமது தலைவராவார் என் பதாம். பூ-பொலிவு எனினுமமையும், கொன்றைய அலர்மாலை மார் பன் என இயையும். கொன்றைய. அ ஆறாம் வேற்றுமையுருபு. உகிர் - நகம், வன்புலி - தாருகாவனத்து இருடிகளால் அவிசார வேள்வியினின்றும் தோற்றுவித்து விடப்பட்டபுலி. அதனைக் கொன்று அதன் தோலை உடையாகத் தரித்தனர் என்பது வரலாறு. ஏதில் பெரும் புகழ் - குற்றமில்லாத உண்மையினையுடைய புகழ். வாணன் -சடலில் வாழ்பவனாசிய வருணன். வாழ், நன் என்பது கடல்
1244 594 திருவாசக ஆராய்ச்சியுரை பூவலர் கொன்றைய மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன் மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன் ஏதில் பெரும்புகழ் எங்களீசன் இருங்கடல் வாணற்குத் தீயிற்றோன்றும் ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வாரெம் பிரானாவாரே . திருமார்பையு வீரன் - போர்த் - ரை : கொன்றைய பூ அலர் மாலை மார்பன் - கொன்றை யினுடைய அழகிய பூக்களினாலாகிய மாலையணிந்த டையவனும் போர் உகிர் வன்புலி கொன்ற தொழிலுக்குரிய நகங்களையுடைய வலிய புலியினைக் கொன்ற வீர னும் மாது நல்லாள் உமை மங்கை பங்கன் - அழகிய நல்லியல்புகளை யுடைய உமையம்பையைப் பாகத்திலுடையவனும் வண்பொழில் சூழ் தென் பெருந்துறை கோன் - வளவிய சோலை சூழ்ந்த தெற்கின் கணுள்ள திருப்பெருந்துறைத் தலைவனும் ஏது இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் - குற்றமில்லாத டெரிய புகழையுடைய எங்கள் ஈசனு மாகிய இறைவன் இரு கடல் வாணற்கு தீயில் தோன்றும் - பெரிய சடலில் வாழ்வோனாகிய வருணனுக்கு நெருப்பினின்றும் தோன்றிய ஓவிய மங்கையர் தோள் புணரும் உரு அறிவார் எம்பிரான் ஆவார் . சித்திரம் போன்ற பெண்களது தோள்களைச் சேர்ந்தருளிய திருவுரு வத்தை அறிய வல்லவர் எமது தலைவராவர் . கொன்றை மலர் மாலையைத் தரித்த திருமார்பை யுடையவனும் புலியைக் கொன்ற வீரனும் உமை மங்கை பங்கனும் . திருப்பெருந் துறைத்தலைவனும் எங்கள் ஈசனுமாகிய இறைவன் வருணனுக்கு நெருப்பினின்றும் தோன்றிய மங்கையர்களுடைய தோள்களைப் புணர்ந்த திருவுருவத்தை அறியவல்லவர் எமது தலைவராவார் என் பதாம் . பூ - பொலிவு எனினுமமையும் கொன்றைய அலர்மாலை மார் பன் என இயையும் . கொன்றைய . ஆறாம் வேற்றுமையுருபு . உகிர் - நகம் வன்புலி - தாருகாவனத்து இருடிகளால் அவிசார வேள்வியினின்றும் தோற்றுவித்து விடப்பட்டபுலி . அதனைக் கொன்று அதன் தோலை உடையாகத் தரித்தனர் என்பது வரலாறு . ஏதில் பெரும் புகழ் - குற்றமில்லாத உண்மையினையுடைய புகழ் . வாணன் -சடலில் வாழ்பவனாசிய வருணன் . வாழ் நன் என்பது கடல்