திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1246 595. திருவாசக ஆராய்ச்சியுரை தூவெள்ளை நீறணி யெம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து தேவர் தொழும்பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை யாளியன்று காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக் கேதங் கெடுத்தென்னை பாண்டருளும் கிடப்பறி வாரெம் பிரானாவாரே. அணி ப - ரை தூ வெள்ளை நீறு எம்பெருமான் - பரிசுத்த மாகிய திருவெண்ணீற்றினை அணிந்த எங்கள் பெருமானும், சோதி மகேந்திரநாதன் · ஒளியினையுடைய மகேந்திரமலைக்குத் தலைவனும், ஈசன் - உலகு உயிர்களை உடையவனும், தென்னன் - தென்னாடு டைய சிவனும், தேவர் தொழும்பதம் வைத்த திருப்பெருந்துறை ஆளி-தேவர்களும் வணங்கும் திருவடிகளை என் தலைமீது வைத்த திருப்பெருந்துறையை ஆள்பவனுமாகிய இறைவன், அன்று வந்து அந்நாளில் எழுந்தருளி வந்து, காதல் பெருந கருணை காட்டி - எனக்கு அன்பு பெருகும்படி அருள் காட்டி, தன் கழல் காட்டி தனது திருவடிகளைக் காட்டியருளி, கசிந்து உருக கேதம் கெடுத்து - மனம் கசிந்து உருகும் வண்ணம் துன்பத்தை நீக்கி, என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவார் - என்னை ஆட்கொண்டருளிய திருவுள்ளக் கிடக்கையை அறியவல்லார் எமது தலைவராவார். திருவெண்ணீற்றை அணிந்த எம்பெருமானும் மகேந்திர நாத னும் ஈசனும் தென்னனும் திருப்பெருந்துறையாளியுமாகிய இறை வன் அந்நாளில் வலிய எழுந்தருளி வந்து காதல் பெருகக் கருணை காட்டித் தன் திருவடியைக் காட்டியருளி என் மனங்கசிந்துருகும்படி துன்பத்தைக் கெடுத்து என்னை ஆண்டருளிய திருவுள்ளக்கருத்தை அறியவல்லார் எமக்குத் தலைவராவார் என்பதாம். நீறணி எம்பெருமான் - திருவெண்ணீற்றை அணிந்த எம்பெரு மான். "சுண்ணப் பொன் நீற்றற்கே" தோளுலா நீற்றன்" தோட் கொண்ட நீற்றனாய்" "நீற்றொடு தோற்ற வல்லோன்" கோத். 4 அச்சப். 6 3 108 அம்மானை அண்ட எனப் பிறாண்டும் அடிகள் கூறுவன காண்க. மகேந்திரம், கைலா யம் போன்று ஒளியுடைத்தாய் இறைவன் எழுந்தருளியிருக்கும் மலையாதலின் "சோதி மகேந்திரநாதன்" என்றார். ''தென்னாடு
1246 595 . திருவாசக ஆராய்ச்சியுரை தூவெள்ளை நீறணி யெம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து தேவர் தொழும்பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை யாளியன்று காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக் கேதங் கெடுத்தென்னை பாண்டருளும் கிடப்பறி வாரெம் பிரானாவாரே . அணி - ரை தூ வெள்ளை நீறு எம்பெருமான் - பரிசுத்த மாகிய திருவெண்ணீற்றினை அணிந்த எங்கள் பெருமானும் சோதி மகேந்திரநாதன் · ஒளியினையுடைய மகேந்திரமலைக்குத் தலைவனும் ஈசன் - உலகு உயிர்களை உடையவனும் தென்னன் - தென்னாடு டைய சிவனும் தேவர் தொழும்பதம் வைத்த திருப்பெருந்துறை ஆளி - தேவர்களும் வணங்கும் திருவடிகளை என் தலைமீது வைத்த திருப்பெருந்துறையை ஆள்பவனுமாகிய இறைவன் அன்று வந்து அந்நாளில் எழுந்தருளி வந்து காதல் பெருந கருணை காட்டி - எனக்கு அன்பு பெருகும்படி அருள் காட்டி தன் கழல் காட்டி தனது திருவடிகளைக் காட்டியருளி கசிந்து உருக கேதம் கெடுத்து - மனம் கசிந்து உருகும் வண்ணம் துன்பத்தை நீக்கி என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவார் - என்னை ஆட்கொண்டருளிய திருவுள்ளக் கிடக்கையை அறியவல்லார் எமது தலைவராவார் . திருவெண்ணீற்றை அணிந்த எம்பெருமானும் மகேந்திர நாத னும் ஈசனும் தென்னனும் திருப்பெருந்துறையாளியுமாகிய இறை வன் அந்நாளில் வலிய எழுந்தருளி வந்து காதல் பெருகக் கருணை காட்டித் தன் திருவடியைக் காட்டியருளி என் மனங்கசிந்துருகும்படி துன்பத்தைக் கெடுத்து என்னை ஆண்டருளிய திருவுள்ளக்கருத்தை அறியவல்லார் எமக்குத் தலைவராவார் என்பதாம் . நீறணி எம்பெருமான் - திருவெண்ணீற்றை அணிந்த எம்பெரு மான் . சுண்ணப் பொன் நீற்றற்கே தோளுலா நீற்றன் தோட் கொண்ட நீற்றனாய் நீற்றொடு தோற்ற வல்லோன் கோத் . 4 அச்சப் . 6 3 108 அம்மானை அண்ட எனப் பிறாண்டும் அடிகள் கூறுவன காண்க . மகேந்திரம் கைலா யம் போன்று ஒளியுடைத்தாய் இறைவன் எழுந்தருளியிருக்கும் மலையாதலின் சோதி மகேந்திரநாதன் என்றார் . ' ' தென்னாடு