திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அருள் நண்பு அருளாய் - நின்னருளைப் பெறாமையால் நான் நாண மடையாமல் நின் திருவருளின் நட்பினை எனக்கு அருள் செய்வா யாசு. என் என்பு உருகும் வண்ணம் நின் திருவருளைத் தந்து திருவடி யிணை காட்டி முன்பே என்னை ஆட்கொண்டருளிய முனிவனே, முனி வர் முழுமுதலே, இன்பத்தினைத் தந்தருளி உருகும்படி தலைவனே. என் செய்து எனது ஆன்மபோதத்தினை நுகருகின்ற உயிர்த்தலைவனே, யான் நின்னருளைப் பெறாமையால் நாணமடையா மல் நின் திருவருளின் நட்பினை எனக்கு அருள் செய்வாயாக என்ப தாம். 1254 என்னை என்புருகல் - பேரன்பு கூர்ந்த பாது உளதாகும் மெய்ப்பாடு உட லில் வன்பொருளாயுள்ள எலும்பும் உருக எனவே உடல் முழுவ தும் பரவசமாய் உருக என்பதாம். என்பே உருக நின் அடி அளித்து என்றதனால் அருள் அளித்தலாகிய சத்திநிபாதத்தால் என் புருகியமை கூறப்பட்டது. ஏ - அசைநிலை. அருள் அளித்து அடி காட்டி என இயையும். முன்பு என்றது இறைவன் குருவடிவில் வந்து அடிகளை ஆட்கொண்ட நாளைக் குறித்தது. இறைவனை முனி வன் என்றல் "பொற்பக வினாயகன் முனிவன் புத்திரன்" (நம்பி திருவிளை : காப்பு 2) என்புழியுங் காண்க. "தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே" (புறநா 13) என்பதும் ஈண்டறியற்பாலது. இன்பு - இன்பம். உயிர் உண்கின்ற என்றது எனது ஆன்ம போதத்தை நினதாக்கிக் கொள்கின்ற என்றவாறு, உண்ணுதல் மேற்கதி அருளும் பொருட்டென்க. நாணாமல் - நின் அருள் பெறா மையால் நாணமடையாமல். நின் அருள் நண்பே அருளாய் மாறிக் கூட்டுக. என இதன்கண், ''என்புருக அருள் அளித்து இணையடிகாட்டி ஆண்டு கொண்டு இன்பருளி எனை உருக்கி உயிருண்கின்ற எம்மானே நின் அருள் அளியாய்" என்பதனால் ஒழியாவின்பத்துவகை என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 3 600 பத்தில னேனும் பணிந்தில னேனுமுன் உயர்ந்த பைங் கழல்காணப் பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப் பாயெம் பெருமானே முத்தனை யானே மணியனை யானே முதல்வனே முறையோவென் றெத்தனை யானும் யான்றொடர்ந் துன்னை இனிப் பிரிந் தாற்றேனே.
திருவாசக ஆராய்ச்சியுரை அருள் நண்பு அருளாய் - நின்னருளைப் பெறாமையால் நான் நாண மடையாமல் நின் திருவருளின் நட்பினை எனக்கு அருள் செய்வா யாசு . என் என்பு உருகும் வண்ணம் நின் திருவருளைத் தந்து திருவடி யிணை காட்டி முன்பே என்னை ஆட்கொண்டருளிய முனிவனே முனி வர் முழுமுதலே இன்பத்தினைத் தந்தருளி உருகும்படி தலைவனே . என் செய்து எனது ஆன்மபோதத்தினை நுகருகின்ற உயிர்த்தலைவனே யான் நின்னருளைப் பெறாமையால் நாணமடையா மல் நின் திருவருளின் நட்பினை எனக்கு அருள் செய்வாயாக என்ப தாம் . 1254 என்னை என்புருகல் - பேரன்பு கூர்ந்த பாது உளதாகும் மெய்ப்பாடு உட லில் வன்பொருளாயுள்ள எலும்பும் உருக எனவே உடல் முழுவ தும் பரவசமாய் உருக என்பதாம் . என்பே உருக நின் அடி அளித்து என்றதனால் அருள் அளித்தலாகிய சத்திநிபாதத்தால் என் புருகியமை கூறப்பட்டது . - அசைநிலை . அருள் அளித்து அடி காட்டி என இயையும் . முன்பு என்றது இறைவன் குருவடிவில் வந்து அடிகளை ஆட்கொண்ட நாளைக் குறித்தது . இறைவனை முனி வன் என்றல் பொற்பக வினாயகன் முனிவன் புத்திரன் ( நம்பி திருவிளை : காப்பு 2 ) என்புழியுங் காண்க . தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே ( புறநா 13 ) என்பதும் ஈண்டறியற்பாலது . இன்பு - இன்பம் . உயிர் உண்கின்ற என்றது எனது ஆன்ம போதத்தை நினதாக்கிக் கொள்கின்ற என்றவாறு உண்ணுதல் மேற்கதி அருளும் பொருட்டென்க . நாணாமல் - நின் அருள் பெறா மையால் நாணமடையாமல் . நின் அருள் நண்பே அருளாய் மாறிக் கூட்டுக . என இதன்கண் ' ' என்புருக அருள் அளித்து இணையடிகாட்டி ஆண்டு கொண்டு இன்பருளி எனை உருக்கி உயிருண்கின்ற எம்மானே நின் அருள் அளியாய் என்பதனால் ஒழியாவின்பத்துவகை என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 3 600 பத்தில னேனும் பணிந்தில னேனுமுன் உயர்ந்த பைங் கழல்காணப் பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப் பாயெம் பெருமானே முத்தனை யானே மணியனை யானே முதல்வனே முறையோவென் றெத்தனை யானும் யான்றொடர்ந் துன்னை இனிப் பிரிந் தாற்றேனே .