திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1255 எண்ணப்பதிகம் ப-ரை: எம்பெருமானே - எங்கள் தலைவனே, பத்து இலனேனும்- அடியேன் உன்னிடத்து அன்பில்லாதேனாயினும், பணிந்திலனேனும். உன்னை வழிபட்டிலேனாயினும், உன் உயர்ந்த பைகழல் காண பித்து இலனேனும் - நினது உயர்வாகிய பசிய பொன்னாலாகிய வீரக்கழ லணிந்த திருவடிகளைக் காண்பதற்கு ஆசைப்படும் பித்து இல்லாதே னாயினும், பிதற்றிலனேனும்-நின் புகழ்களை ஓயாதுரைத்திலேனாயினும், பிறப்பு அறுப்பாய் - எனது பிறவித் துன்பத்தை நீக்கியருளவேண்டும். முத்து அனையானே-முத்துப் போன்றவனே, மணி அனையானே- மாணிக்கம் போன்றவனே, முதல்வனே - முதன்மையானவனே. முறையோ என்று - என்னைக் கைவிடுவது முறையாகுமோ என்று, எத்தனையானும் உன்னை யான் தொடர்ந்து - எத்துணைச் சிறிய அளவி லாவது உன்னை யான் தொடர்ந்து பற்றிக்கொள்வதல்லாமல், இனி பிரிந்து ஆற்றேன் - இனி நின்னை விட்டுப் பிரிந்து அப்பிரிவைப் பொறுத்துக்கொள்ளமாட்டேன் எம்பெருமானே. பத்தியிலேனாயினும் உன்னைப் பணிந்திலேனா யினும் நின் திருவடியைக் காணவேண்டுமென்னும் பித்திலேனாயினும் உன் புகழ்களைப் பிதற்றிலேனாயினும் என் பிறப்பை அறுத்தருள வேண்டும். முத்தனையானே, மணியனையானே, முதல்வனே, என்னைக் கைவிடுவது முறையாகுமோ என்று எத்தனையானும் உன்னை யான் தொடர்ந்து பற்றிக்கொள்வதல்லாமல் இனி நின்னை விட்டுப்பிரிந்து அப்பிரிவைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்பதாம். 45 பத்து - பற்று; அன்பு "பத்துடை யடியவர்க் கெளியவன்" எனத் திருவாய் மொழியில் வருவன காண்க. இறைவனிடத்தில் செய்யும் பற் றும், அவனை வழிபடுதலும் திருவடியைக் காணும் ஆசையும் அதனால் துதித்தலும் பிறப்பறுத்தலுக்குச் சாதனங்களாகும். பைங்கழல்-மாற் றுயர்ந்த பசிய பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல். அது திரு வடிகளுக்கு ஆகுபெயர். பித்து ஒரு பொருளை மேலும் மேலும் வேண்டி நிற்கும் நிலை. பிறப்பு துன்பமாதலின் “பிறப்பறுப்பாய்" என்றார். பிதற்றுதல் - ஓயாது கூறுதல், பால்வெண்ணீறு பூசப்பெற்றமையால் திருமேனி வெண்மையாகத் திகழ்தலின் 'முத்தனையான்' செம்மேனியனாதலின் 'மணியனையானே' என்றார். எல்லாவுலகங்கட் கும் எல்லாவுயிர்களுக்கும் முதன்மையானவன் இறைவனாதலின் 'முதல் வனே' என்றார். முறையோ என்றல் என்னைக் கைவிடுதல்த குமோ என்றல். எத்தனையானும் - எத்துணைச் சிறிய அளவிலாவது. தனை - அளவு. யான் தொடர்ந்து என்னும் எச்சத்தினைப் பற்றிக்கொள்வ தல்லாமல் என ஒருசொல் வருவித்து முடிக்க. என்றார். இதன்கண்,முறையோ என்று எத்தனையானும் யான் தொடர்ந்து பற்றிக்கொள்வதல்லாமல் நின்னைப் பிரிந்தாற்றேன் ஆதலால் பிறப்
1255 எண்ணப்பதிகம் - ரை : எம்பெருமானே - எங்கள் தலைவனே பத்து இலனேனும் அடியேன் உன்னிடத்து அன்பில்லாதேனாயினும் பணிந்திலனேனும் . உன்னை வழிபட்டிலேனாயினும் உன் உயர்ந்த பைகழல் காண பித்து இலனேனும் - நினது உயர்வாகிய பசிய பொன்னாலாகிய வீரக்கழ லணிந்த திருவடிகளைக் காண்பதற்கு ஆசைப்படும் பித்து இல்லாதே னாயினும் பிதற்றிலனேனும் - நின் புகழ்களை ஓயாதுரைத்திலேனாயினும் பிறப்பு அறுப்பாய் - எனது பிறவித் துன்பத்தை நீக்கியருளவேண்டும் . முத்து அனையானே - முத்துப் போன்றவனே மணி அனையானே மாணிக்கம் போன்றவனே முதல்வனே - முதன்மையானவனே . முறையோ என்று - என்னைக் கைவிடுவது முறையாகுமோ என்று எத்தனையானும் உன்னை யான் தொடர்ந்து - எத்துணைச் சிறிய அளவி லாவது உன்னை யான் தொடர்ந்து பற்றிக்கொள்வதல்லாமல் இனி பிரிந்து ஆற்றேன் - இனி நின்னை விட்டுப் பிரிந்து அப்பிரிவைப் பொறுத்துக்கொள்ளமாட்டேன் எம்பெருமானே . பத்தியிலேனாயினும் உன்னைப் பணிந்திலேனா யினும் நின் திருவடியைக் காணவேண்டுமென்னும் பித்திலேனாயினும் உன் புகழ்களைப் பிதற்றிலேனாயினும் என் பிறப்பை அறுத்தருள வேண்டும் . முத்தனையானே மணியனையானே முதல்வனே என்னைக் கைவிடுவது முறையாகுமோ என்று எத்தனையானும் உன்னை யான் தொடர்ந்து பற்றிக்கொள்வதல்லாமல் இனி நின்னை விட்டுப்பிரிந்து அப்பிரிவைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்பதாம் . 45 பத்து - பற்று ; அன்பு பத்துடை யடியவர்க் கெளியவன் எனத் திருவாய் மொழியில் வருவன காண்க . இறைவனிடத்தில் செய்யும் பற் றும் அவனை வழிபடுதலும் திருவடியைக் காணும் ஆசையும் அதனால் துதித்தலும் பிறப்பறுத்தலுக்குச் சாதனங்களாகும் . பைங்கழல் - மாற் றுயர்ந்த பசிய பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் . அது திரு வடிகளுக்கு ஆகுபெயர் . பித்து ஒரு பொருளை மேலும் மேலும் வேண்டி நிற்கும் நிலை . பிறப்பு துன்பமாதலின் பிறப்பறுப்பாய் என்றார் . பிதற்றுதல் - ஓயாது கூறுதல் பால்வெண்ணீறு பூசப்பெற்றமையால் திருமேனி வெண்மையாகத் திகழ்தலின் ' முத்தனையான் ' செம்மேனியனாதலின் ' மணியனையானே ' என்றார் . எல்லாவுலகங்கட் கும் எல்லாவுயிர்களுக்கும் முதன்மையானவன் இறைவனாதலின் ' முதல் வனே ' என்றார் . முறையோ என்றல் என்னைக் கைவிடுதல்த குமோ என்றல் . எத்தனையானும் - எத்துணைச் சிறிய அளவிலாவது . தனை - அளவு . யான் தொடர்ந்து என்னும் எச்சத்தினைப் பற்றிக்கொள்வ தல்லாமல் என ஒருசொல் வருவித்து முடிக்க . என்றார் . இதன்கண் முறையோ என்று எத்தனையானும் யான் தொடர்ந்து பற்றிக்கொள்வதல்லாமல் நின்னைப் பிரிந்தாற்றேன் ஆதலால் பிறப்