திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பாம்பை அணிந்த பெருமானுமாகிய இறைவன், சிறியோமை ஓவாது உள்ளம் கலந்து - சிறியோங்களாகிய எங்களை விட்டு ஒழி யாது உள்ளத்தில் வெளிப்பட்டு, உணர்வாய் உருக்கும் வெள்ளம் கருணையினால் - எங்கள் அறிவில் அத்துவிதமாய் ஒன்றுபட்டு எம்மை உருக்குகின்ற அருட்பெருக்கினால், ஆ ஆ என்னப்பட்டு -ஆவாவென்று இரங்கி ஏற்றுக்கொள்ளப்பட்டு, அன்பாய் ஆட்பட்டீர் - அன்புடை யீராய் அவ்விறைவனுக்கு ஆட்பட்டவர்களே, பொய் விட்டு உடை யான் கழல் புக - நிலையற்ற உலக வாழ்வை விட்டு எம்மை உடை யவனது திருவடியை அடைதற்கு, காலம் வந்தது போவோம் உரிய காலம் வந்து விட்டது ஆதலாற் போய்ச்சேர்வோம், வந்து ஒருப்படுமின் - எல்லீரும் மனம் ஒன்றுபட்டு வந்து சேருங்கள். 1260 பூக்கள் நிறைந்த சென்னியையுடைய தலைவனும் எங்கள் புயங் கப் பெருமானுமாகிய இறைவன், சிறியோங்களாகிய எங்களை விட்டு ஒழியாது உள்ளத்தில் வெளிப்பட்டு எங்கள் அறிவில் அத்து விதமாய் ஒன்றுபட்டு நம்மை உருக்குகின்ற அருட்பெருக்கினால் ஆவாவென்று இரங்கி ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்பாய் ஆட்பட் டவர்களே. நிலையற்ற உலக வாழ்வை விட்டு எம்மையுடையவனது திருவடியை அடைதற்கு உரிய காலம் வந்து விட்டது ஆதலாற் போய்ச்சேர்வோம். எல்லீரும் மனம் ஒன்றுபட்டு வந்து சேருங்கள் என்பதாம். பூவார் சென்னி - ''பூவார்ந்த சென்னிப் புனிதாபோற்றி" (நாவு 245.9) என, அணுக்கன் தொண்டர்களால் அணியப்பெற்ற பூக் கள் நிறைந்த சடைமுடி. பூ -கொன்றைமலர் முதலியன. புயங்கம். பாம்பு. ''அரவு கட்செவி யங்கதம் வியாளம்...... புயங்கம் பாந் தள்... அனைத்தும் பாம்பே' என்பது பிங்கலந்தை (8-291). இறை வன் பெருமையை நோக்கித் தம்மையும் மற்றைய அடியார்களை யும் உளப்படுத்திச் சிறியோமை என்றார். ஓவாது ஒழியாது: விட்டு நீங்காது. 'ஓவாது கூஉ நின்னுடற்றியோர் நாடே" (புற 4-19) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. உள்ளம் கலத்தல்- உள்ளத் தில் வெளிப்படுதல். உணர்வாதல் இறைவன் உயிர் உணர்வில் அத் துவிதமாய் ஒன்றுபடுதல். கருணையினால் ஆவா என்னப்பட்டு என்க. உடையான் கழல் புகக் காலம் வந்தது போவோம் வந்து ஒருப்படு மின் எனக் கூட்டுக. காண் முன்னிலையசை. இதன்கண், உடையான் கழல் புகக் காலம் வந்தது போவோம் ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின் என்பதனால் அனுபவாதீதமுரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 1
திருவாசக ஆராய்ச்சியுரை பாம்பை அணிந்த பெருமானுமாகிய இறைவன் சிறியோமை ஓவாது உள்ளம் கலந்து - சிறியோங்களாகிய எங்களை விட்டு ஒழி யாது உள்ளத்தில் வெளிப்பட்டு உணர்வாய் உருக்கும் வெள்ளம் கருணையினால் - எங்கள் அறிவில் அத்துவிதமாய் ஒன்றுபட்டு எம்மை உருக்குகின்ற அருட்பெருக்கினால் என்னப்பட்டு -ஆவாவென்று இரங்கி ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்பாய் ஆட்பட்டீர் - அன்புடை யீராய் அவ்விறைவனுக்கு ஆட்பட்டவர்களே பொய் விட்டு உடை யான் கழல் புக - நிலையற்ற உலக வாழ்வை விட்டு எம்மை உடை யவனது திருவடியை அடைதற்கு காலம் வந்தது போவோம் உரிய காலம் வந்து விட்டது ஆதலாற் போய்ச்சேர்வோம் வந்து ஒருப்படுமின் - எல்லீரும் மனம் ஒன்றுபட்டு வந்து சேருங்கள் . 1260 பூக்கள் நிறைந்த சென்னியையுடைய தலைவனும் எங்கள் புயங் கப் பெருமானுமாகிய இறைவன் சிறியோங்களாகிய எங்களை விட்டு ஒழியாது உள்ளத்தில் வெளிப்பட்டு எங்கள் அறிவில் அத்து விதமாய் ஒன்றுபட்டு நம்மை உருக்குகின்ற அருட்பெருக்கினால் ஆவாவென்று இரங்கி ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்பாய் ஆட்பட் டவர்களே . நிலையற்ற உலக வாழ்வை விட்டு எம்மையுடையவனது திருவடியை அடைதற்கு உரிய காலம் வந்து விட்டது ஆதலாற் போய்ச்சேர்வோம் . எல்லீரும் மனம் ஒன்றுபட்டு வந்து சேருங்கள் என்பதாம் . பூவார் சென்னி - ' ' பூவார்ந்த சென்னிப் புனிதாபோற்றி ( நாவு 245.9 ) என அணுக்கன் தொண்டர்களால் அணியப்பெற்ற பூக் கள் நிறைந்த சடைமுடி . பூ -கொன்றைமலர் முதலியன . புயங்கம் . பாம்பு . ' ' அரவு கட்செவி யங்கதம் வியாளம் ...... புயங்கம் பாந் தள் ... அனைத்தும் பாம்பே ' என்பது பிங்கலந்தை ( 8-291 ) . இறை வன் பெருமையை நோக்கித் தம்மையும் மற்றைய அடியார்களை யும் உளப்படுத்திச் சிறியோமை என்றார் . ஓவாது ஒழியாது : விட்டு நீங்காது . ' ஓவாது கூஉ நின்னுடற்றியோர் நாடே ( புற 4-19 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . உள்ளம் கலத்தல்- உள்ளத் தில் வெளிப்படுதல் . உணர்வாதல் இறைவன் உயிர் உணர்வில் அத் துவிதமாய் ஒன்றுபடுதல் . கருணையினால் ஆவா என்னப்பட்டு என்க . உடையான் கழல் புகக் காலம் வந்தது போவோம் வந்து ஒருப்படு மின் எனக் கூட்டுக . காண் முன்னிலையசை . இதன்கண் உடையான் கழல் புகக் காலம் வந்தது போவோம் ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின் என்பதனால் அனுபவாதீதமுரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 1