திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1264 606. திருவாசக ஆராய்ச்சியுரை அடியா ரானீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக் கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச் செடிசே ருடலைச் செலநீக்கிச் சிவலோ கத்தே நமைவைப்பான் பொடிசேர் மேனிப் புயங்கன்றன் பூவார் கழற்கே புகவிடுமே. ப - ரை : அடியார் ஆனீர் எல்லீரும் - சிவபெருமானுக்கு அடி யாராகிய நீவிர் எல்லீரும், விளையாட்டை அகல விடுமின் - புவன போகங்களை அநுபவித்துத் திரிகின்ற உலக விளையாட்டைத் தூர த்தே விட்டொழியுங்கள்; கடி சேர் அடியே வந்து அடைந்து - நறு மணம் பொருந்திய மலர்போலும் திருவடிகளையே இடைவிடாது தியானித்து, திருக்குறிப்பை கடைக்கொண்டு இருமின் - இறைவனது திருவுள்ளக் குறிப்பைக் கடைப்பிடித்து இருங்கள்; அங்ஙனம் இருந் தால், பொடிசேர் மேனி புயங்கப் பெருமான் திருவெண்ணீறு அணிந்த திருமேனியையுடைய புயங்கப் ருெமான், செடிசேர் உடலை செலநீக்கி - குற்றம் பொருந்திய இவ்வுடலை ஒழியக் களைந்து, சிவலோகத்தே நமை வைப்பான் - சிவலோகத்திலே நம்மை வைத் தருளுவான்; அன்றியும், தன் பூ ஆர் கழற்கே புகவிடும் - தனது தாமரை மலர் திருவடிகவினிடத்தே அடையுமாறும் செய்தருளுவான். போன்ற விளை சிவபெருமானுக்கு அடியாராகிய நீவிர் எல்லீரும் உலக யாட்டைத் தூரத்தே விட்டொழியுங்கள்; இறைவனது திருவடிக ளையே இடைவிடாது தியானித்து அவனது திருவுள்ளக் குறிப்பைக் கடைப்பிடித்து இருங்கள்: அங்ஙனம் இருந்தால், திருவெண்ணீறு அணிந்த திருமேனியையு ை-ய புயங்கப்பொமான் குற்றம் பொருந் திய இவ்வுடலை நீக்கிச் சிவலோகத்தே நம்மை வைத்தருளுவான்; அன்றியும் தனது திருவடிகளிடத்தே அடையுமாறும் செய்தருளு வான் என்பதாம். விளையாட்டு என்றது புவன போகங்களை அனுபவித்துத் திரிகின்ற செயலை.கடி-வாசனை.கடிசேர் அடி - நமக்குக் காப்பாகவுள்ள திரு டியெனினுமாம். பின்னே 'கழற்கே புகவிடுமே என்றலின். வந் வடி தியானித்தலை தடைந்து என்பது இடைவிடாது உணர்த்தியது. கடைக்கொண்டிருத்தல்-கடைப்பிடித்திருத்தல். செடி- குற்றம்; நாற் றம்; பாவம் என்ற பொருள்களும் அமையும். ''பாவங் குணமின்மை நாற்றம் புதல் செடி" என்பது பிங்கலந்தை (10-536). உடல் செடி யுடைமை,
1264 606 . திருவாசக ஆராய்ச்சியுரை அடியா ரானீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக் கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச் செடிசே ருடலைச் செலநீக்கிச் சிவலோ கத்தே நமைவைப்பான் பொடிசேர் மேனிப் புயங்கன்றன் பூவார் கழற்கே புகவிடுமே . - ரை : அடியார் ஆனீர் எல்லீரும் - சிவபெருமானுக்கு அடி யாராகிய நீவிர் எல்லீரும் விளையாட்டை அகல விடுமின் - புவன போகங்களை அநுபவித்துத் திரிகின்ற உலக விளையாட்டைத் தூர த்தே விட்டொழியுங்கள் ; கடி சேர் அடியே வந்து அடைந்து - நறு மணம் பொருந்திய மலர்போலும் திருவடிகளையே இடைவிடாது தியானித்து திருக்குறிப்பை கடைக்கொண்டு இருமின் - இறைவனது திருவுள்ளக் குறிப்பைக் கடைப்பிடித்து இருங்கள் ; அங்ஙனம் இருந் தால் பொடிசேர் மேனி புயங்கப் பெருமான் திருவெண்ணீறு அணிந்த திருமேனியையுடைய புயங்கப் ருெமான் செடிசேர் உடலை செலநீக்கி - குற்றம் பொருந்திய இவ்வுடலை ஒழியக் களைந்து சிவலோகத்தே நமை வைப்பான் - சிவலோகத்திலே நம்மை வைத் தருளுவான் ; அன்றியும் தன் பூ ஆர் கழற்கே புகவிடும் - தனது தாமரை மலர் திருவடிகவினிடத்தே அடையுமாறும் செய்தருளுவான் . போன்ற விளை சிவபெருமானுக்கு அடியாராகிய நீவிர் எல்லீரும் உலக யாட்டைத் தூரத்தே விட்டொழியுங்கள் ; இறைவனது திருவடிக ளையே இடைவிடாது தியானித்து அவனது திருவுள்ளக் குறிப்பைக் கடைப்பிடித்து இருங்கள் : அங்ஙனம் இருந்தால் திருவெண்ணீறு அணிந்த திருமேனியையு - புயங்கப்பொமான் குற்றம் பொருந் திய இவ்வுடலை நீக்கிச் சிவலோகத்தே நம்மை வைத்தருளுவான் ; அன்றியும் தனது திருவடிகளிடத்தே அடையுமாறும் செய்தருளு வான் என்பதாம் . விளையாட்டு என்றது புவன போகங்களை அனுபவித்துத் திரிகின்ற செயலை.கடி - வாசனை.கடிசேர் அடி - நமக்குக் காப்பாகவுள்ள திரு டியெனினுமாம் . பின்னே ' கழற்கே புகவிடுமே என்றலின் . வந் வடி தியானித்தலை தடைந்து என்பது இடைவிடாது உணர்த்தியது . கடைக்கொண்டிருத்தல் - கடைப்பிடித்திருத்தல் . செடி- குற்றம் ; நாற் றம் ; பாவம் என்ற பொருள்களும் அமையும் . ' ' பாவங் குணமின்மை நாற்றம் புதல் செடி என்பது பிங்கலந்தை ( 10-536 ) . உடல் செடி யுடைமை