திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

608 பைது யாத்திரைப்பத்து புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தாளே புந்திவைத்திட் டிகழ்மின் எல்லா அல்லலையும் இனியோ ரிடையூ றடையாமே திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்றாள் வணங்கிநாம் நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. Len ப- ரை புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு -அரவாபரணனாகிய இறைவனது திருவடிகளையே உள்ளத்தில் இடைவிடாது தியானித்து, புகழ்மின் - அத்திருவடிகளையே புகழ்ந்து பாடுங்கள், தொழுமின், வணங்குங்கள்; பூ புனைமின் - மலர்களைச் சூட்டுங்கள்: எல்லா அல் லலையும் இகழ்மின் - அதனால் உலகில் நமக்குளதாகும் எல்லாத் துன் பங்களையும் இகழ்ந்து நீக்குங்கள்: இனி ஓர் இடையூறு அடையமே. இனிமேல் நமக்கு ஒருவகையான இடையூறுகளும் உண்டாகா வண் ணம், நாம் திகழும் சீர் ஆர் சிவபுரத்து சென்று - நாமெல்லோ மும் விளங்குகின்ற புகழ் நிறைந்த சிவபுரத்தின்கட் சென்று, சிவன் தாள் வணங்கி -சிவபெருமான் திருவடிகளை வணங்கி. நிகழும் அடி யார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போம் - அங்கு வாழும் அணுக்கன் தொண்டர் முன்னிலையிற் சென்று மனமுருகி நிற்போம். 1267 புயங்கப் பெருமான் திருவடிகளையே மனத்தில் வைத்திட்டு அத் திருவடிகளையே புகழ்மின்; தொழுமின்; பூப்புனைமின்; அதனால் எல் லாத்துன்பங்களையும் இகழ்ந்து நீக்குங்கள், இனி ஓர் இடையூறு அடையாமே நாம் சிவபுரத்துச் சென்று சிவன் தாள் வணங்கி அவன் அடியார் முன் சென்று மனமுருகி நிற்போம் என்பதாம். 6.49 உள்ளம். புகழ்மின் - புகழ்ந்து பாடுங்கள். புனைமின் - சூட்டுங்கள். புந்தி- இறைவனை, 'புகழ்மின் தொழுமின் பூப்புனை மின் புயங் கன் தாளே புந்தி வைத்திட்டு" என்றார். "நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத் துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ் சென்று வெளிப்படுந் தேவர் பிரானே" எனத் திருமந்திரத்திலும் (1500) வருவது காண்க. இகழ்மின் - வெறுத்து நீக்குங்கள். அல்லல் - இவ்வுலகத்தில் ஆன் மிகம், தைவிகம், பெளதிகம் என்னும் மூவகையால் வரும் துன் பங்கள்: இவ்வுலகில் இருப்பின் யாதும் இடையூறு நம்மை வந்த
608 பைது யாத்திரைப்பத்து புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தாளே புந்திவைத்திட் டிகழ்மின் எல்லா அல்லலையும் இனியோ ரிடையூ றடையாமே திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்றாள் வணங்கிநாம் நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே . Len ப- ரை புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு -அரவாபரணனாகிய இறைவனது திருவடிகளையே உள்ளத்தில் இடைவிடாது தியானித்து புகழ்மின் - அத்திருவடிகளையே புகழ்ந்து பாடுங்கள் தொழுமின் வணங்குங்கள் ; பூ புனைமின் - மலர்களைச் சூட்டுங்கள் : எல்லா அல் லலையும் இகழ்மின் - அதனால் உலகில் நமக்குளதாகும் எல்லாத் துன் பங்களையும் இகழ்ந்து நீக்குங்கள் : இனி ஓர் இடையூறு அடையமே . இனிமேல் நமக்கு ஒருவகையான இடையூறுகளும் உண்டாகா வண் ணம் நாம் திகழும் சீர் ஆர் சிவபுரத்து சென்று - நாமெல்லோ மும் விளங்குகின்ற புகழ் நிறைந்த சிவபுரத்தின்கட் சென்று சிவன் தாள் வணங்கி -சிவபெருமான் திருவடிகளை வணங்கி . நிகழும் அடி யார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போம் - அங்கு வாழும் அணுக்கன் தொண்டர் முன்னிலையிற் சென்று மனமுருகி நிற்போம் . 1267 புயங்கப் பெருமான் திருவடிகளையே மனத்தில் வைத்திட்டு அத் திருவடிகளையே புகழ்மின் ; தொழுமின் ; பூப்புனைமின் ; அதனால் எல் லாத்துன்பங்களையும் இகழ்ந்து நீக்குங்கள் இனி ஓர் இடையூறு அடையாமே நாம் சிவபுரத்துச் சென்று சிவன் தாள் வணங்கி அவன் அடியார் முன் சென்று மனமுருகி நிற்போம் என்பதாம் . 6.49 உள்ளம் . புகழ்மின் - புகழ்ந்து பாடுங்கள் . புனைமின் - சூட்டுங்கள் . புந்தி இறைவனை ' புகழ்மின் தொழுமின் பூப்புனை மின் புயங் கன் தாளே புந்தி வைத்திட்டு என்றார் . நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத் துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ் சென்று வெளிப்படுந் தேவர் பிரானே எனத் திருமந்திரத்திலும் ( 1500 ) வருவது காண்க . இகழ்மின் - வெறுத்து நீக்குங்கள் . அல்லல் - இவ்வுலகத்தில் ஆன் மிகம் தைவிகம் பெளதிகம் என்னும் மூவகையால் வரும் துன் பங்கள் : இவ்வுலகில் இருப்பின் யாதும் இடையூறு நம்மை வந்த