திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை டைதல் கூடும். அங்ஙனம் வந்து அடையாவண்ணம் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கி அடியார் முன்னிலையிற் சென்று மன முருகி நிற்போம் என்றார். திகழ்தல் - விளங்குதல். 'திகழொளி முத்தம் அரும்பாகத் தை இ" (கலி 80-4) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க. சீர் - புகழ். "சீர் நிரந்தேந்திய குன்றொடு" என் னும் பரிபாடலுரையில் (18-6) சீர் என்பதற்கு அழகு எனப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. ஆகவே அழகு எனினுமமையும். நிகழ் தல் - வாழ்தல், நிகழும் அடியார் - விளங்கும் அடியார் எனினுமாம். 1268 இதன்கண், இனியோர் இடையூறு அடையாமே சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கி அடியார் முன் சென்று நெஞ்சமுருகி நிற்போம், என்பதனால் அனுபவாதீத முரைத்தல் என்னும் பதிகப் பொருள் புலனாதல் காண்க. 6 609 நிற்பார் நிற்க நில்லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்க னாள்வான் பொன்னடிக்கே நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே யொருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற் கரியன் பெருமானே. ப- ரை நில்லா உலகில் நிற்பார் நிற்க - நிலையில்லாத இவ்வுலகத் திலே நிற்கவிரும்புவார் நிற்பாராக; இனி நாம் நில்லோம் - இனி நாம் இவ்வுலகில் நிற்கமாட்டோம்; பொற்பால் ஒப்பாம் திருமேனி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே செல்வோம் - அழகினால் தனக் குத் தானே ஒப்பாகிய திருமேனியையுடைய அரவாபரணனும் ஆட்கொள்பவனுமாகிய இறைவனது பொன்போலும் திருவடிக ளுக்கே நாம் சென்று சேர்வோம்; ஆதலால், நிற்பீர் எல்லாம் தாழாது நிற்கும் பரிசே ஒருப்படுமின் - இறைவன் திருவடியை அடைதற்கு விருப்புற்று நிற்பீர் எல்லீரும் தாமதிக்காமல் நீங்கள் நிற்கின்ற நிலையிலேயே மனம் ஒருவழிப்படுங்கள்; பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெருமான் பெறுதற்கு அரியன் - ஒருப்படாமல் பிற் பட்டு நின்று காலந்தாழ்த்தால் எம் பெருமான் நாம் பெறுதற்கு அரியவனாவான். are நில்லாவுலகில் நிற்க விரும்புவார் நிற்பாராக; இனி நாம் இவ் வுலகில் நில்லோம். ஆதலால், இறைவன் திருவடியை அடைதற்கு விருப்புற்று நிற்பீர் எல்லீரும் தாழாது நிற்கின்ற நிலையிலேயே மனம் ஒருவழிப்படுங்கள். அப்படி ஒருப்படாமல் பிற்பட்டு நின்று காலந் தாழ்த்தால் எம்பெருமான் நாம்பெறுதற்கரியவனாவான் என்பதாம்.
திருவாசக ஆராய்ச்சியுரை டைதல் கூடும் . அங்ஙனம் வந்து அடையாவண்ணம் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கி அடியார் முன்னிலையிற் சென்று மன முருகி நிற்போம் என்றார் . திகழ்தல் - விளங்குதல் . ' திகழொளி முத்தம் அரும்பாகத் தை ( கலி 80-4 ) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க . சீர் - புகழ் . சீர் நிரந்தேந்திய குன்றொடு என் னும் பரிபாடலுரையில் ( 18-6 ) சீர் என்பதற்கு அழகு எனப் பரிமேலழகர் உரைத்தமை காண்க . ஆகவே அழகு எனினுமமையும் . நிகழ் தல் - வாழ்தல் நிகழும் அடியார் - விளங்கும் அடியார் எனினுமாம் . 1268 இதன்கண் இனியோர் இடையூறு அடையாமே சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கி அடியார் முன் சென்று நெஞ்சமுருகி நிற்போம் என்பதனால் அனுபவாதீத முரைத்தல் என்னும் பதிகப் பொருள் புலனாதல் காண்க . 6 609 நிற்பார் நிற்க நில்லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்க னாள்வான் பொன்னடிக்கே நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே யொருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற் கரியன் பெருமானே . ப- ரை நில்லா உலகில் நிற்பார் நிற்க - நிலையில்லாத இவ்வுலகத் திலே நிற்கவிரும்புவார் நிற்பாராக ; இனி நாம் நில்லோம் - இனி நாம் இவ்வுலகில் நிற்கமாட்டோம் ; பொற்பால் ஒப்பாம் திருமேனி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே செல்வோம் - அழகினால் தனக் குத் தானே ஒப்பாகிய திருமேனியையுடைய அரவாபரணனும் ஆட்கொள்பவனுமாகிய இறைவனது பொன்போலும் திருவடிக ளுக்கே நாம் சென்று சேர்வோம் ; ஆதலால் நிற்பீர் எல்லாம் தாழாது நிற்கும் பரிசே ஒருப்படுமின் - இறைவன் திருவடியை அடைதற்கு விருப்புற்று நிற்பீர் எல்லீரும் தாமதிக்காமல் நீங்கள் நிற்கின்ற நிலையிலேயே மனம் ஒருவழிப்படுங்கள் ; பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெருமான் பெறுதற்கு அரியன் - ஒருப்படாமல் பிற் பட்டு நின்று காலந்தாழ்த்தால் எம் பெருமான் நாம் பெறுதற்கு அரியவனாவான் . are நில்லாவுலகில் நிற்க விரும்புவார் நிற்பாராக ; இனி நாம் இவ் வுலகில் நில்லோம் . ஆதலால் இறைவன் திருவடியை அடைதற்கு விருப்புற்று நிற்பீர் எல்லீரும் தாழாது நிற்கின்ற நிலையிலேயே மனம் ஒருவழிப்படுங்கள் . அப்படி ஒருப்படாமல் பிற்பட்டு நின்று காலந் தாழ்த்தால் எம்பெருமான் நாம்பெறுதற்கரியவனாவான் என்பதாம் .