திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

யாத்திரைப்பத்து 1271 இதன்கண், அருமாலுற்று நீர் அரற்றாதே சிவபுரத்துத் திருக்கத வம் திறந்தபோதே திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோம், என்பதனால் அனுபவாதீதமுரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 611. சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின் போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம் ஆரப் பருகி ஆராத ஆர்வங் கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன் கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 8 ப-ரை. சேர கருதி சிந்தனையை திருந்த வைத்து சிந்திமின்- சிவபுரத்தை அடையக்கருதி உள்ளத்தினைத் திருத்தமாக அமைத்து இறைவனது திருவடியை இடைவிடாது நினையுங்கள். போரில் பொலி யும் வேல் கண்ணாள் பங்கன் - அங்ஙனம் நினைந்தால் போரில் விளங் குகின்ற வேல்போன்ற கண்களையுடைய உமையம்மையை ஒரு கூற் றிலுடையவனும், புயங்கன் - அரவாபரணனுமாகிய இறைவனது. அருள் அமுதம் ஆர பருகி - திருவருளாகிய அமிர்தத்தினை நிரம்ப உட் கொண்டு, ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர் - தெவிட்டாத அன்பு மிகப் பேரின்பத்தில் அழுந்துவீர்கள்; ஆதலால், பொய்யில் கிடந்து புரளாது - நிலையில்லாத உலகவாழ்விற் கிடந்து புரண்டு வருந்தா மல், சிவன் கழற்கே போர புரிமின் - சிவபெருமானது திருவடிக ளுக்கே போய்ச்சேர விரும்புங்கள். சிவலோகத்தை அடையக்கருதி உங்கள் சிந்தனையைத் திருத்த மாக அமைத்து இறைவனது திருவடியை இடைவிடாது நினையுங் கள், அங்ஙனம் நினத்தால் உமையம்மை பங்கனும் புயங்கனுமா கிய இறைவனது திருவருளாகிய அமிர்தத்தினை நிரம்பப் பருகி ஆராத ஆர்வம் மிகப் பேரின்பத்தில் அழுந்துவீர்கள் ஆதலால் நிலையில்லாத உலகவாழ்விற் கிடந்து புரண்டு வருந்தாமல் சிவபெ ருமானது அதிருவடிகளுக்க போய்ச்சேர விரும்புங்கள் என்பதாம். சேரக்கருதி என்பதற்குச் சிவபுரத்தைச் சேரக்கருதி எனப் பொருள் கொள்க. சிந்தனையைத் திருந்த வைத்து என்றது உள்ளத் தினைத் தூய்தாக வைத்து என்பதாம். சிந்தியுமின் என்பது சிந்தி மின் என நின்றது. சிந்திமின்; சிந்தித்தால்; ஆரப் பருகி அழுந்து என இயையும். போரில் பொலியும் வேல் என்சு வேற்கண்
யாத்திரைப்பத்து 1271 இதன்கண் அருமாலுற்று நீர் அரற்றாதே சிவபுரத்துத் திருக்கத வம் திறந்தபோதே திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோம் என்பதனால் அனுபவாதீதமுரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 611 . சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின் போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம் ஆரப் பருகி ஆராத ஆர்வங் கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன் கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே . 8 - ரை . சேர கருதி சிந்தனையை திருந்த வைத்து சிந்திமின் சிவபுரத்தை அடையக்கருதி உள்ளத்தினைத் திருத்தமாக அமைத்து இறைவனது திருவடியை இடைவிடாது நினையுங்கள் . போரில் பொலி யும் வேல் கண்ணாள் பங்கன் - அங்ஙனம் நினைந்தால் போரில் விளங் குகின்ற வேல்போன்ற கண்களையுடைய உமையம்மையை ஒரு கூற் றிலுடையவனும் புயங்கன் - அரவாபரணனுமாகிய இறைவனது . அருள் அமுதம் ஆர பருகி - திருவருளாகிய அமிர்தத்தினை நிரம்ப உட் கொண்டு ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர் - தெவிட்டாத அன்பு மிகப் பேரின்பத்தில் அழுந்துவீர்கள் ; ஆதலால் பொய்யில் கிடந்து புரளாது - நிலையில்லாத உலகவாழ்விற் கிடந்து புரண்டு வருந்தா மல் சிவன் கழற்கே போர புரிமின் - சிவபெருமானது திருவடிக ளுக்கே போய்ச்சேர விரும்புங்கள் . சிவலோகத்தை அடையக்கருதி உங்கள் சிந்தனையைத் திருத்த மாக அமைத்து இறைவனது திருவடியை இடைவிடாது நினையுங் கள் அங்ஙனம் நினத்தால் உமையம்மை பங்கனும் புயங்கனுமா கிய இறைவனது திருவருளாகிய அமிர்தத்தினை நிரம்பப் பருகி ஆராத ஆர்வம் மிகப் பேரின்பத்தில் அழுந்துவீர்கள் ஆதலால் நிலையில்லாத உலகவாழ்விற் கிடந்து புரண்டு வருந்தாமல் சிவபெ ருமானது அதிருவடிகளுக்க போய்ச்சேர விரும்புங்கள் என்பதாம் . சேரக்கருதி என்பதற்குச் சிவபுரத்தைச் சேரக்கருதி எனப் பொருள் கொள்க . சிந்தனையைத் திருந்த வைத்து என்றது உள்ளத் தினைத் தூய்தாக வைத்து என்பதாம் . சிந்தியுமின் என்பது சிந்தி மின் என நின்றது . சிந்திமின் ; சிந்தித்தால் ; ஆரப் பருகி அழுந்து என இயையும் . போரில் பொலியும் வேல் என்சு வேற்கண்