திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

46. திருப்படையெழுச்சி பிரபஞ்சப்போர் திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது. இதன் உட்பொருள் உலகமாயையை வெல்வதற்கு ஞானவாள் முதலியவற்றைத் தாங்கிப் போருக்கெழுங்கள்; அதனை வென்று வீட்டு லகினை அடைவோம் என்பது: இதனைத் திருவாசகச் சிறப்புடையார். EL "அல்லாத துர்க்குண மாயப்படைகள் விளையாமல் அருள்வாள் ஏந்தி உலம்பதட்க நல்லோர்கள் யாரும் எம்மோடு எய்துமெனப் படையெழுச்சி நவிறலாகும்" என்பர். இதன் உள்ளுறை பிரபஞ்சப் போர் என்பது. இது கலிவிருத்தம் என்னும் செய்யுள்வகையாலானது. இது இருபாடல்களால் மாத்திரம் அமைந்தது; 613: கலிவிருத்தம் திருச்சிற்றம்பலம் ஞானவாள் ஏந்துமையர் நாதப் பறையறைமின் மானமா ஏறுமையர் மதிவெண் குடைகவிமின் ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே. ப-ரை ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின் சிவஞானமாகிய வாட்படையைக் கையில் நாங்குகின்ற எமது தலை வரது நாததத்துவமாகிய போர் முரசினை முழக்குங்கள்; மானம் மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின் - பெருமை பொருந் திய குதிரையில் ஏறிய தலைவரை அறியும் அனுபவஞானமாகிய வெண்கொற்றக் குடையினைப் பிடியுங்கள். ஆன நீற்று கவசம் அடைய புகுமின்கள் - காவலான திருவெண்ணீறாகிய சட்டையினை எல்லீரும் அணிந்து கொள்ளுங்கள். நாம் மாயப்படை வாராமே வான ஊர் கொள்வோம் - நாம் மயக்கத்தின் காரியமாகிய சேனைகள் வந்து நம்மைத் தாக்குதற்கு முன்னே அருள்வெளியாகிய சிதாகா யத்திலுள்ள வீட்டுலகினைக் கைப்பற்றுவோமாக.
46. திருப்படையெழுச்சி பிரபஞ்சப்போர் திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது . இதன் உட்பொருள் உலகமாயையை வெல்வதற்கு ஞானவாள் முதலியவற்றைத் தாங்கிப் போருக்கெழுங்கள் ; அதனை வென்று வீட்டு லகினை அடைவோம் என்பது : இதனைத் திருவாசகச் சிறப்புடையார் . EL அல்லாத துர்க்குண மாயப்படைகள் விளையாமல் அருள்வாள் ஏந்தி உலம்பதட்க நல்லோர்கள் யாரும் எம்மோடு எய்துமெனப் படையெழுச்சி நவிறலாகும் என்பர் . இதன் உள்ளுறை பிரபஞ்சப் போர் என்பது . இது கலிவிருத்தம் என்னும் செய்யுள்வகையாலானது . இது இருபாடல்களால் மாத்திரம் அமைந்தது ; 613 : கலிவிருத்தம் திருச்சிற்றம்பலம் ஞானவாள் ஏந்துமையர் நாதப் பறையறைமின் மானமா ஏறுமையர் மதிவெண் குடைகவிமின் ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே . - ரை ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின் சிவஞானமாகிய வாட்படையைக் கையில் நாங்குகின்ற எமது தலை வரது நாததத்துவமாகிய போர் முரசினை முழக்குங்கள் ; மானம் மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின் - பெருமை பொருந் திய குதிரையில் ஏறிய தலைவரை அறியும் அனுபவஞானமாகிய வெண்கொற்றக் குடையினைப் பிடியுங்கள் . ஆன நீற்று கவசம் அடைய புகுமின்கள் - காவலான திருவெண்ணீறாகிய சட்டையினை எல்லீரும் அணிந்து கொள்ளுங்கள் . நாம் மாயப்படை வாராமே வான ஊர் கொள்வோம் - நாம் மயக்கத்தின் காரியமாகிய சேனைகள் வந்து நம்மைத் தாக்குதற்கு முன்னே அருள்வெளியாகிய சிதாகா யத்திலுள்ள வீட்டுலகினைக் கைப்பற்றுவோமாக .