திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்படையெழுச்சி 1277 கோடலும் அருவுருவாதலும் பிறவும் செய்ய வல்லராதலின் ஒண் டிறல் யோகிகள்" என்றார் "யோகக் கலைத்துறை நீந்திய ஒண்டிறல் யோகர்" (ஞானாமிர் 62.9-10) என வருதல் காண்க "ஒண்டிறல் யோகர்'' - அழகிய வலியினையுடைய யோகிகள் (ஷை பழையவுரை); திண்டிறற் சித்தர் என்றது எந்நிலைமைபிலும் கலக்கமடையாத திண்ணிய சிவஞானமுடைமைபற்றியாகும். அல்லற்படையொடு பொரும் போரில் சரியையாளர் முன்ன ணியாகிய கொடிப்படையிலும் கிரியையாளர் பக்கப்படையிலும் யோகிகள் பேரணிப்படையாகிய நடுப்படையிலும், ஞானிகள் பின் னணிப் படையாகிய கூழையிலும் அமைந்து செல்லும் படைவகுப்பு முறை அழகாகக் கூறப்பட்டுள்ளது கூழை அணிவகுப்பில் பின்னிடம். பண்டைக்காலத்தில் போர்க்குப் படைகளை அணிவகுக்கும் போது பொதுவான வீரர்களை முன்னணி பாகிய கொடிப்படையிலும், அவர்களிலும் வலியோரைப் பக்கப்படையிலும், அவர்களிலும் வலி யோரை பேரணியாகிய நடுப்படையிலும், அவரினும் வலியோரைக் கடைக்கூழையாகிய பின்னணிப்படையிலும் அமைத்துப் படை வகுத்துக் கொள்ளும் முறைமை இங்குக் கூறப்பட்டது. தூசி முதலி யன படையின் உறுப்புக்களாதல். "தூசியுங் கூழையு நெற்றியுங் கையு மணியு மென்ப தப்படைக்குறுப்பே" எனப்பிங்கலந்தையானுமறிக. (6-403) அண்டர் - தேவர் "அண்ட முதல்வ ராதித்தர் சுவர்க்கர் பொன் னுலகுடையோர் தேவர் பொதுப்பெயர்" என்பது பிங்கலந்தை (2-85); அண்டர்நாடு எனப்பொதுவகையாற் கூறினும் வானநாடு என்பதே கருத்தாகக்கொள்க. அண்டர்நாடு-வான நாடு; சிதாகாயம் இத்திருப்பாட்டின் கண் சிவாச்சிரமங்களாகிய சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நாற்பாதங்களில் நிற்பவர்கள் இறை வரது சிவலோகத்தை அடைவரென்பது குறிக்கப்பட்டது. ஆயினும் சரியையாளர் சாலோகத்தையும் கிரியையாளர் சாமீபத்தையும் யோகிகள் சாரூபத்தையும் ஞானிகள் சாயுச்சியத்தையும் அடைவ ரென்பது கருத்தாகக்கொள்க. இதன்கண், அல்லற் படையொடு செய்யும் போருக்கு அணி வகுப்புக்கள் கூறப்பட்டமையால் பிரபஞ்சப்போர் என்னும் பதிகநுத பொருள் போதருதல் காண்க; 2:
திருப்படையெழுச்சி 1277 கோடலும் அருவுருவாதலும் பிறவும் செய்ய வல்லராதலின் ஒண் டிறல் யோகிகள் என்றார் யோகக் கலைத்துறை நீந்திய ஒண்டிறல் யோகர் ( ஞானாமிர் 62.9-10 ) என வருதல் காண்க ஒண்டிறல் யோகர் ' ' - அழகிய வலியினையுடைய யோகிகள் ( ஷை பழையவுரை ) ; திண்டிறற் சித்தர் என்றது எந்நிலைமைபிலும் கலக்கமடையாத திண்ணிய சிவஞானமுடைமைபற்றியாகும் . அல்லற்படையொடு பொரும் போரில் சரியையாளர் முன்ன ணியாகிய கொடிப்படையிலும் கிரியையாளர் பக்கப்படையிலும் யோகிகள் பேரணிப்படையாகிய நடுப்படையிலும் ஞானிகள் பின் னணிப் படையாகிய கூழையிலும் அமைந்து செல்லும் படைவகுப்பு முறை அழகாகக் கூறப்பட்டுள்ளது கூழை அணிவகுப்பில் பின்னிடம் . பண்டைக்காலத்தில் போர்க்குப் படைகளை அணிவகுக்கும் போது பொதுவான வீரர்களை முன்னணி பாகிய கொடிப்படையிலும் அவர்களிலும் வலியோரைப் பக்கப்படையிலும் அவர்களிலும் வலி யோரை பேரணியாகிய நடுப்படையிலும் அவரினும் வலியோரைக் கடைக்கூழையாகிய பின்னணிப்படையிலும் அமைத்துப் படை வகுத்துக் கொள்ளும் முறைமை இங்குக் கூறப்பட்டது . தூசி முதலி யன படையின் உறுப்புக்களாதல் . தூசியுங் கூழையு நெற்றியுங் கையு மணியு மென்ப தப்படைக்குறுப்பே எனப்பிங்கலந்தையானுமறிக . ( 6-403 ) அண்டர் - தேவர் அண்ட முதல்வ ராதித்தர் சுவர்க்கர் பொன் னுலகுடையோர் தேவர் பொதுப்பெயர் என்பது பிங்கலந்தை ( 2-85 ) ; அண்டர்நாடு எனப்பொதுவகையாற் கூறினும் வானநாடு என்பதே கருத்தாகக்கொள்க . அண்டர்நாடு - வான நாடு ; சிதாகாயம் இத்திருப்பாட்டின் கண் சிவாச்சிரமங்களாகிய சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நாற்பாதங்களில் நிற்பவர்கள் இறை வரது சிவலோகத்தை அடைவரென்பது குறிக்கப்பட்டது . ஆயினும் சரியையாளர் சாலோகத்தையும் கிரியையாளர் சாமீபத்தையும் யோகிகள் சாரூபத்தையும் ஞானிகள் சாயுச்சியத்தையும் அடைவ ரென்பது கருத்தாகக்கொள்க . இதன்கண் அல்லற் படையொடு செய்யும் போருக்கு அணி வகுப்புக்கள் கூறப்பட்டமையால் பிரபஞ்சப்போர் என்னும் பதிகநுத பொருள் போதருதல் காண்க ; 2 :