திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

47. பெருங் திருவெண்பா அனுயா 615 BILE அணைந்தோர் தன்மை பனப திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது. இப்பதிகம் வெண்பாவாலானமையால் திருவெண்பா என்னும் பெயருடைத்தாயிற்று. இப்பதிகத்தினாற் சொல்லப்படுவது பெருந் துறை மேயபிரான் பந்தித்துள்ள மலத்தை வலிகெடச்செய்து இன் பம்மிகும் வண்ணம் செய்து என் மனத்தினையே ஊராகக்கொண் டான் என்பது. இதன் உள்ளுறை அணைந்தோர் தன்மை என்பது; மலச்சார்பை நீக்கி இறைவன் சார்பை அடைந்தவர்களுடைய தன்மை இத்தன்மையாகும் என்பது இதன் பொருள், திருவாச கச் சிறப்புடையார் இதனை, ''தொந்தமா மலமெறுத்துச் சுகம் பெருக்கிப் பெருந்துறைவாழ் சோதியென்றன் சிந்தனையே யூராகக் கொண்டிருந்தார் என்று உரைத்தல் திருவெண்பாவாம்'' எனக் கூறுவர். இப்பதிகம் பதினொரு வெண்பாக்களையுடையது. நேரிசை வெண்பா agj திருச்சிற்றம்பலம் வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன் - செய்ய திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ மருவா திருந்தேன் மனத்து. ப-ரை செய்ய திரு ஆர் பெருந்துறையான் - செவ்விய அழகு பொருந்திய திருப்பெருந்துறையையுடைய பரமாசாரியனது, தேன் உந்து செந்தீ-தேன்போலும் இன்பத்தைத் தருகின்ற சிவந்த ஒளி வடிவம்; மனத்து மருவாது இருந்தேன் - மனத்தின்கண் பொருந்தப் பெறாது இருந்தவனாகிய பான், அதனால், வெய்பவினை இரண்டும் வெந்து அகல - கொடிய இரு வினைகளும் எரிந்து ஒழிந்து போகுமாறு, மெய் உருகி பொய்யு பொடியாகாது என் செய்வேன் - உடம்பும் உருகிப் பொய்யாகிய உலக வாழ்வும் நீறாகாதிருக்கின்றது. இதற்கு யாது செய்வேன்.
47 . பெருங் திருவெண்பா அனுயா 615 BILE அணைந்தோர் தன்மை பனப திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது . இப்பதிகம் வெண்பாவாலானமையால் திருவெண்பா என்னும் பெயருடைத்தாயிற்று . இப்பதிகத்தினாற் சொல்லப்படுவது பெருந் துறை மேயபிரான் பந்தித்துள்ள மலத்தை வலிகெடச்செய்து இன் பம்மிகும் வண்ணம் செய்து என் மனத்தினையே ஊராகக்கொண் டான் என்பது . இதன் உள்ளுறை அணைந்தோர் தன்மை என்பது ; மலச்சார்பை நீக்கி இறைவன் சார்பை அடைந்தவர்களுடைய தன்மை இத்தன்மையாகும் என்பது இதன் பொருள் திருவாச கச் சிறப்புடையார் இதனை ' ' தொந்தமா மலமெறுத்துச் சுகம் பெருக்கிப் பெருந்துறைவாழ் சோதியென்றன் சிந்தனையே யூராகக் கொண்டிருந்தார் என்று உரைத்தல் திருவெண்பாவாம் ' ' எனக் கூறுவர் . இப்பதிகம் பதினொரு வெண்பாக்களையுடையது . நேரிசை வெண்பா agj திருச்சிற்றம்பலம் வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன் - செய்ய திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ மருவா திருந்தேன் மனத்து . - ரை செய்ய திரு ஆர் பெருந்துறையான் - செவ்விய அழகு பொருந்திய திருப்பெருந்துறையையுடைய பரமாசாரியனது தேன் உந்து செந்தீ - தேன்போலும் இன்பத்தைத் தருகின்ற சிவந்த ஒளி வடிவம் ; மனத்து மருவாது இருந்தேன் - மனத்தின்கண் பொருந்தப் பெறாது இருந்தவனாகிய பான் அதனால் வெய்பவினை இரண்டும் வெந்து அகல - கொடிய இரு வினைகளும் எரிந்து ஒழிந்து போகுமாறு மெய் உருகி பொய்யு பொடியாகாது என் செய்வேன் - உடம்பும் உருகிப் பொய்யாகிய உலக வாழ்வும் நீறாகாதிருக்கின்றது . இதற்கு யாது செய்வேன் .