திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பரம்பரனே, நின்னை வணங்கி, எனக்குப் பேரின் ப மயக்கத்தினை மிகுவிக்கின்ற தந்தை பெருந்துறையையுடைய நீ தான் என்று என் னிடம் கூறுபவர் எவர் ஒருவர் இங்கே உளர்; துணையான மெய்யடி யார் ஒருவருமிலரே; யான் ஒருவனுமேயிருந்து ஆரவாரிப்பேனோ. அரற்றுவேனோ,ஆடுவேனோ, பாடுவேனோ, நின்னைத் தரிசிப்பேனோ யாது செய்வேன் என்பதாம். MO Peo 1280 erst ஆர்க்கு அரற்றுக்கு ஆடுகு பாடுகு பார்க்கு என்னும் தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்றுக்கள் கழிவிரக்கப்பொருளில் வந்த ஓகாரவிடைச்சொற்கள் பெற்று வந்தன. தாம் ஆர்த்தல் முதலி யவற்றால் எய்தும் இன்பத்தினை உடன் அனுபவிப்பார் பிறரின்றி வருந்தினமையின் ஓகாரங்கள் கழிவிரக்கப்பொருளில் வந்தன. பரம் பரன் - பரத்துக்குப் பரமானவன். சுத்தமாபைக்கு மேற்பட்டவன் என்பது கருத்து அத்தன் பெருந்துறையான் தான் என்பதற்கு அத்தனும் பெருந்துறையானும் நீதான் என்றுரைப்பினுமமையும். தான் என்னும் பொதுப் பெயர் பெருந்துறையான் என்பதனோடு இயைந்து பெருந்துறையானாகிய நீ தான் என்னும் பொருள்பட நின்றது. X-G அடிகளோடு இருந்த மெய்படியார்கள் யாவரும் பிரிந்த பின் னர், நீங்குதற்கரிய பேரின்பமயக்கத்தினைத் தரும் தந்தையும் பெருந் துறையானும் நீதான் என்று தம்மிடம் கூறும் மெய்யடியார் ஒரு வருமின்றி வருந்தியமையும், தாம் இறைவனை வணங்கி ஆர்த்து அரற்றி ஆடிப்பாடி பார்த்து மகிழுங்கால் உடன் துணையாவார் இன்மைபற்றி வருந்தினமையும் இத்திருப்பாட்டின்கண் கூறப்பட்டன. இதன்கண், என் செய்கேன் என்பதாலும் தான் என்பார் ஆரொ ருவர் என்பதாலும் அணைந்தோர் தன்மை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 617 செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் - வையத் திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே நேத்தான் பெருந்துறையில் மேய பிரான். 2: ப-ரை. பெருந்துறையில் மேய பிரான் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன், வையத்து இருந்து - பூவுலகத்தே பரமாசாரியனாய் வலியவந்து எழுந்தருளியிருந்து, உறையுள் வேல் என் சிந்தனைக்கே கோத்து மடுத்தான்-தனது உறையுள் இருந்த வேலை என் உள்ளத்துக்கே இலக்காகச் சென்று பொருந்தும்படி தொடுத்துச் செலுத்தி அழுத்தமாகப் பதியச் செய்தான்; செய்த
திருவாசக ஆராய்ச்சியுரை பரம்பரனே நின்னை வணங்கி எனக்குப் பேரின் மயக்கத்தினை மிகுவிக்கின்ற தந்தை பெருந்துறையையுடைய நீ தான் என்று என் னிடம் கூறுபவர் எவர் ஒருவர் இங்கே உளர் ; துணையான மெய்யடி யார் ஒருவருமிலரே ; யான் ஒருவனுமேயிருந்து ஆரவாரிப்பேனோ . அரற்றுவேனோ ஆடுவேனோ பாடுவேனோ நின்னைத் தரிசிப்பேனோ யாது செய்வேன் என்பதாம் . MO Peo 1280 erst ஆர்க்கு அரற்றுக்கு ஆடுகு பாடுகு பார்க்கு என்னும் தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்றுக்கள் கழிவிரக்கப்பொருளில் வந்த ஓகாரவிடைச்சொற்கள் பெற்று வந்தன . தாம் ஆர்த்தல் முதலி யவற்றால் எய்தும் இன்பத்தினை உடன் அனுபவிப்பார் பிறரின்றி வருந்தினமையின் ஓகாரங்கள் கழிவிரக்கப்பொருளில் வந்தன . பரம் பரன் - பரத்துக்குப் பரமானவன் . சுத்தமாபைக்கு மேற்பட்டவன் என்பது கருத்து அத்தன் பெருந்துறையான் தான் என்பதற்கு அத்தனும் பெருந்துறையானும் நீதான் என்றுரைப்பினுமமையும் . தான் என்னும் பொதுப் பெயர் பெருந்துறையான் என்பதனோடு இயைந்து பெருந்துறையானாகிய நீ தான் என்னும் பொருள்பட நின்றது . X - G அடிகளோடு இருந்த மெய்படியார்கள் யாவரும் பிரிந்த பின் னர் நீங்குதற்கரிய பேரின்பமயக்கத்தினைத் தரும் தந்தையும் பெருந் துறையானும் நீதான் என்று தம்மிடம் கூறும் மெய்யடியார் ஒரு வருமின்றி வருந்தியமையும் தாம் இறைவனை வணங்கி ஆர்த்து அரற்றி ஆடிப்பாடி பார்த்து மகிழுங்கால் உடன் துணையாவார் இன்மைபற்றி வருந்தினமையும் இத்திருப்பாட்டின்கண் கூறப்பட்டன . இதன்கண் என் செய்கேன் என்பதாலும் தான் என்பார் ஆரொ ருவர் என்பதாலும் அணைந்தோர் தன்மை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 617 செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் - வையத் திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே நேத்தான் பெருந்துறையில் மேய பிரான் . 2 : - ரை . பெருந்துறையில் மேய பிரான் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன் வையத்து இருந்து - பூவுலகத்தே பரமாசாரியனாய் வலியவந்து எழுந்தருளியிருந்து உறையுள் வேல் என் சிந்தனைக்கே கோத்து மடுத்தான் - தனது உறையுள் இருந்த வேலை என் உள்ளத்துக்கே இலக்காகச் சென்று பொருந்தும்படி தொடுத்துச் செலுத்தி அழுத்தமாகப் பதியச் செய்தான் ; செய்த