திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெண்பா கருணையாளன் - கருணையை ஆள்பவன். வருந்துயரம் ஆகாமிய கன்மத்தால் இனி வரக்கடவ துன்பம். அதனை நீக்குகின்ற அருண் மருந்துடையானை மருந்து எனக் கூறியது உபசாரம். 'புந்தி சேரருள் வருவினை போக்கும்" எனத் திருவாத வூரர் புராணத்துங்காண்க. சஞ் சித கன்மநீக்கமும் இனி வரும் பிறப்பின்மையும் ஆகாமிய கன்ம நீக்கமும் கூறப்பட்டமையின் பிராரத்த கன்மம் உடலுடன் ஒழியு மென்பது தானே போதரும். இதன்கண், சஞ்சித நீக்கமும், வரும்பிறப்பு நீக்கமும், ஆகா மிய நீக்கமும் கூறப்பட்டமையின் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 619. 1283 அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற மறையோனும் மாலுமால் கொள்ளும்-- இறையோன் பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா திருந்துறையும் என்னெஞ்சத் தின்று. 4 ப-ரை : அனைத்து உலகும் ஈன்ற மறையோனும் மாலும்-பிர மாண்டத்திலுள்ள எல்லா உலகங்களையும் படைத்த வேதியனாகிய பிரமனும் திருமாலும், மால் கொள்ளும் இறையோன் - முடியும் அடியும் அறியாது மயக்கங்கொள்ளுதற்கு ஏதுவாகிய அருமை பெருமைகளையுடைய இறைவன், பெருந்துறையுள் மேய பெருமான்- திருப்பெருந்துறையில் ஞானாசாரியனாய் வீற்றிருந்த பெருமானே. இன்று என் நெஞ்சத்து பிரியாது இருந்து உறையும் - இப்போது எனது உள்ளத்தின் கண்ணே நீங்காது தங்குவான், அறிவார்க்கு அறையோ - பல்லோருங்காண நிகழ்ந்த இதனை அறியலுறுவார்க்கு அறிவு அற்றுவிட்டதோ. பிரமனும் திருமாலும் முடி அடி அறியாது மயக்கங் கொள் ளுதற்கு ஏதுவாகிய அருமை பெருமைகளையுடைய இறைவன் திருப் பெருந்துறையில் வீற்றிருந்த ஞானாசாரியனாய் இப்போது என் நெஞ் சத்து நீங்காது தங்குவான். பல்லோருங்காண நிகழ்ந்த இதனை அறி யலுறுவார்க்கு அறிவு அற்றுவிட்டதோ என்பதாம்.மற்க அறைபோகும் காண்க: அறையோ - அற்றுவிட்டதோ; அறை - அறுதல். ''அறை போகு நெஞ்சுடை யார்க்கு" (கலி 67 -21) என்புழி அற்றுச் செல்லும். என நச்சினார்க்கினியர் உரைத்தமை ''சிவனெனும் ஓசையல்ல தறையோ' (நாவு8-1) என அப்பரடி கள் கூறியமையுங் காண்க: பிரம விட்டுணுக்களுக்கும் அரிய இறை வன் திருப்பெருந்துறைக்கண் எழுந்தருளிப் பல்லோருங் காண எந்
திருவெண்பா கருணையாளன் - கருணையை ஆள்பவன் . வருந்துயரம் ஆகாமிய கன்மத்தால் இனி வரக்கடவ துன்பம் . அதனை நீக்குகின்ற அருண் மருந்துடையானை மருந்து எனக் கூறியது உபசாரம் . ' புந்தி சேரருள் வருவினை போக்கும் எனத் திருவாத வூரர் புராணத்துங்காண்க . சஞ் சித கன்மநீக்கமும் இனி வரும் பிறப்பின்மையும் ஆகாமிய கன்ம நீக்கமும் கூறப்பட்டமையின் பிராரத்த கன்மம் உடலுடன் ஒழியு மென்பது தானே போதரும் . இதன்கண் சஞ்சித நீக்கமும் வரும்பிறப்பு நீக்கமும் ஆகா மிய நீக்கமும் கூறப்பட்டமையின் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 619 . 1283 அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற மறையோனும் மாலுமால் கொள்ளும்-- இறையோன் பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா திருந்துறையும் என்னெஞ்சத் தின்று . 4 - ரை : அனைத்து உலகும் ஈன்ற மறையோனும் மாலும் - பிர மாண்டத்திலுள்ள எல்லா உலகங்களையும் படைத்த வேதியனாகிய பிரமனும் திருமாலும் மால் கொள்ளும் இறையோன் - முடியும் அடியும் அறியாது மயக்கங்கொள்ளுதற்கு ஏதுவாகிய அருமை பெருமைகளையுடைய இறைவன் பெருந்துறையுள் மேய பெருமான் திருப்பெருந்துறையில் ஞானாசாரியனாய் வீற்றிருந்த பெருமானே . இன்று என் நெஞ்சத்து பிரியாது இருந்து உறையும் - இப்போது எனது உள்ளத்தின் கண்ணே நீங்காது தங்குவான் அறிவார்க்கு அறையோ - பல்லோருங்காண நிகழ்ந்த இதனை அறியலுறுவார்க்கு அறிவு அற்றுவிட்டதோ . பிரமனும் திருமாலும் முடி அடி அறியாது மயக்கங் கொள் ளுதற்கு ஏதுவாகிய அருமை பெருமைகளையுடைய இறைவன் திருப் பெருந்துறையில் வீற்றிருந்த ஞானாசாரியனாய் இப்போது என் நெஞ் சத்து நீங்காது தங்குவான் . பல்லோருங்காண நிகழ்ந்த இதனை அறி யலுறுவார்க்கு அறிவு அற்றுவிட்டதோ என்பதாம்.மற்க அறைபோகும் காண்க : அறையோ - அற்றுவிட்டதோ ; அறை - அறுதல் . ' ' அறை போகு நெஞ்சுடை யார்க்கு ( கலி 67 -21 ) என்புழி அற்றுச் செல்லும் . என நச்சினார்க்கினியர் உரைத்தமை ' ' சிவனெனும் ஓசையல்ல தறையோ ' ( நாவு8-1 ) என அப்பரடி கள் கூறியமையுங் காண்க : பிரம விட்டுணுக்களுக்கும் அரிய இறை வன் திருப்பெருந்துறைக்கண் எழுந்தருளிப் பல்லோருங் காண எந்