திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெண்பா யாவர்க்கும் மேலாகிய எல்லையற்ற சிறப்பினையுடையவனே, என்னுடைய எம்பெருமானே, எல்லார்க்கும் கீழ்ப்பட்ட அடியேனை எவரும் பெற்று அனுபவித்தறியப் பெறாத பேரின்பத்தினுள் வைத் தருளிய உனக்குக் கைம்மாறாகச் செய்யும் வகை பிறிதொன்றனை யும் அறியேன் என்பதாம். 1287 சீருடையான் எம்பெருமான் என்பன அண்மை விளிகள். இறை வன் எல்லையில்லாத சிறப்பினையுடையனாதலின் 'யாவர்க்கும் மேலா மளவிலாச் சீருடையான்' என்றார். "எண்ணிறந்தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்" (24-5) எனச் சிவபுராணத்தும் அடிகள் அருளியவாறு காண்க. யாவ ர்க்கும் என்றது எவ்வகை மேம்பாட்டினர்க்கும் என்றவாறு. யாவர்க் கும் மேலாம் சீருடையான், அளவிலாச் சீருடையான் எனத் தனித் தனி இயையும். 'யாவர்க்கு மேலர்க்கு' எனத் திருக்கோவையில் வருதல் காண்க (கோவை 143). அளவு - எல்லை. "பேரள வெய் திய பெரும் பெயர்ப் பாண்டில்" (நெடுநல் 123) என்புழிப்போல. யாவர்க்கும் மேலாம் என்புழி உம்மை உயர்வு சிறப்பிலும், யாவர் க்கும் கீழாம் என்புழி உம்மை இழிவு சிறப்பிலும் வந்தன. எவ்வகைக் கீழ்ப்பட்டவர்க்கும் தாம் கீழானவர் என்பார், 'யாவர்க் கும் கீழா மடியேனை' என்றார். 'என்னேரனையேன்' (ஆனந்தமாலை) எனக் கூறுதலுங் காண்க யாவரும் - எவரும். எப்பெற்றிப்பட்ட வரும் எனினுமாம். பெற்று அறியா இன்பம் - கிடைக்கப் பெற்று அனுபவித்தறியப் பெறாத பேரின்பம். வைத்தாய்க்கு -வைத்த உனக்கு எனவும் உரைக்கலாம். என் என்றது பெருமான் தம்மை ஆட்கொண்டருளிய உரிமைபற்றியாகும். மற்று என்பது பிறிது என்னும் பொருளில் வந்தது. செய்யும்வகை என்பதனால் கைம்மாறு என்பது போதரும். இதன்கண், அடியேனை யாவரும் பெற்றறியா இன்பத்துள் வைத்தாய் நினக்குச் செய்யும் வகை மற்றறியேன் என்பதனால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 623. மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவரும் காணாச் சிவபெருமான் - மாவேறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க மெய்யகத்தே யின்பம் மிகும். 8
திருவெண்பா யாவர்க்கும் மேலாகிய எல்லையற்ற சிறப்பினையுடையவனே என்னுடைய எம்பெருமானே எல்லார்க்கும் கீழ்ப்பட்ட அடியேனை எவரும் பெற்று அனுபவித்தறியப் பெறாத பேரின்பத்தினுள் வைத் தருளிய உனக்குக் கைம்மாறாகச் செய்யும் வகை பிறிதொன்றனை யும் அறியேன் என்பதாம் . 1287 சீருடையான் எம்பெருமான் என்பன அண்மை விளிகள் . இறை வன் எல்லையில்லாத சிறப்பினையுடையனாதலின் ' யாவர்க்கும் மேலா மளவிலாச் சீருடையான் ' என்றார் . எண்ணிறந்தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் ( 24-5 ) எனச் சிவபுராணத்தும் அடிகள் அருளியவாறு காண்க . யாவ ர்க்கும் என்றது எவ்வகை மேம்பாட்டினர்க்கும் என்றவாறு . யாவர்க் கும் மேலாம் சீருடையான் அளவிலாச் சீருடையான் எனத் தனித் தனி இயையும் . ' யாவர்க்கு மேலர்க்கு ' எனத் திருக்கோவையில் வருதல் காண்க ( கோவை 143 ) . அளவு - எல்லை . பேரள வெய் திய பெரும் பெயர்ப் பாண்டில் ( நெடுநல் 123 ) என்புழிப்போல . யாவர்க்கும் மேலாம் என்புழி உம்மை உயர்வு சிறப்பிலும் யாவர் க்கும் கீழாம் என்புழி உம்மை இழிவு சிறப்பிலும் வந்தன . எவ்வகைக் கீழ்ப்பட்டவர்க்கும் தாம் கீழானவர் என்பார் ' யாவர்க் கும் கீழா மடியேனை ' என்றார் . ' என்னேரனையேன் ' ( ஆனந்தமாலை ) எனக் கூறுதலுங் காண்க யாவரும் - எவரும் . எப்பெற்றிப்பட்ட வரும் எனினுமாம் . பெற்று அறியா இன்பம் - கிடைக்கப் பெற்று அனுபவித்தறியப் பெறாத பேரின்பம் . வைத்தாய்க்கு -வைத்த உனக்கு எனவும் உரைக்கலாம் . என் என்றது பெருமான் தம்மை ஆட்கொண்டருளிய உரிமைபற்றியாகும் . மற்று என்பது பிறிது என்னும் பொருளில் வந்தது . செய்யும்வகை என்பதனால் கைம்மாறு என்பது போதரும் . இதன்கண் அடியேனை யாவரும் பெற்றறியா இன்பத்துள் வைத்தாய் நினக்குச் செய்யும் வகை மற்றறியேன் என்பதனால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 623 . மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவரும் காணாச் சிவபெருமான் - மாவேறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க மெய்யகத்தே யின்பம் மிகும் . 8