திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெண்பா வார்கழல்கள் என முதல்வினை சினையொடு முடிந்தது: வந்திக்க வணங்க. "மற்றுன்று மாமலரிட்டுன்னை வாழ்த்தி வந்தித்தலன்றி" 'கண்பனிப்ப, வஞ்சங் கடிந்துன்னை வந்தித்திலேன்" கோவை 178 624. 1289 11ந் திருமுறை கோயில் திருப்பண்ணி, 12 என வருவன காண்க. இதன்கண், சிவபெருமான் மாவேறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க மெய்யகத்தே இன்பம் மிகும் என்பதனால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 9: இருந்தென்னை யாண்டான் இணையடியே சிந்தித் திருந்திரந்து கொள்நெஞ்சே யெல்லாம் -- தருங்காண் பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன் மருந்து ருவாய் என்மனத்தே வந்து ப-ரை. பெருந்துறையில் மேய பெருங் கருணையாளன் - திருப் பெருந்துறையில் எழுந்தருளிய பேரருளையுடைய இறைவன், மருந்து உருவாய் என் மனத்தே வந்து இருந்து - அமுத வடிவமாய் என் உள்ளத்திலே வந்து இருந்து, என்னை ஆண்டான் - என்னை ஆட் கொண்டருளினன், நெஞ்சே - மனமே, இணை அடியே சிந்தித்து இருந்து - அவ்விறைவனது இரண்டு திருவடிகளையுமே இடைவிடாது தியானித்துக் கொண்டிருந்து, இரந்து கொள் - உனக்கு வேண்டிய வற்றை யாசித்துப் பெற்றுக்கொள். எல்லாம் தரும் -அவன் வேண் டியவற்றையெல்லாம் தந்தருள்வான். Tone2 திருப்பெருந்துறையில் எழுந்தருளிய பெருங்கருணையாளனாகிய இறைவன் மருந்துருவாய் என் மனத்திலே வந்திருந்து என்னை ஆட் கொண்டருளினன். நெஞ்சே அவ்விறைவனது திருவடிகளைச் சிந்தித் திருந்து உனக்கு வேண்டியவற்றை இரந்து பெற்றுக்கொள்' அவன் உனக்கு வேண்டியவற்றையெல்லாம் தந்தருள்வான் என்பதாம். என் மனத்தே வந்து இருந்து என்னை ஆண்டான் என இயைத்து மனத்திலே வெளிப்பட்டுத்தோன்றி ஆண்டான் எனக்கொள்க: 'அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு' (பிடித்த 6) எனவும், ''சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு' (சென்னி 6) எனவும், அடிகள் அருளியவாறுங் காண்க. இரத்தல்-யாசித்தல்.
திருவெண்பா வார்கழல்கள் என முதல்வினை சினையொடு முடிந்தது : வந்திக்க வணங்க . மற்றுன்று மாமலரிட்டுன்னை வாழ்த்தி வந்தித்தலன்றி ' கண்பனிப்ப வஞ்சங் கடிந்துன்னை வந்தித்திலேன் கோவை 178 624 . 1289 11 ந் திருமுறை கோயில் திருப்பண்ணி 12 என வருவன காண்க . இதன்கண் சிவபெருமான் மாவேறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க மெய்யகத்தே இன்பம் மிகும் என்பதனால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 9 : இருந்தென்னை யாண்டான் இணையடியே சிந்தித் திருந்திரந்து கொள்நெஞ்சே யெல்லாம் -- தருங்காண் பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன் மருந்து ருவாய் என்மனத்தே வந்து - ரை . பெருந்துறையில் மேய பெருங் கருணையாளன் - திருப் பெருந்துறையில் எழுந்தருளிய பேரருளையுடைய இறைவன் மருந்து உருவாய் என் மனத்தே வந்து இருந்து - அமுத வடிவமாய் என் உள்ளத்திலே வந்து இருந்து என்னை ஆண்டான் - என்னை ஆட் கொண்டருளினன் நெஞ்சே - மனமே இணை அடியே சிந்தித்து இருந்து - அவ்விறைவனது இரண்டு திருவடிகளையுமே இடைவிடாது தியானித்துக் கொண்டிருந்து இரந்து கொள் - உனக்கு வேண்டிய வற்றை யாசித்துப் பெற்றுக்கொள் . எல்லாம் தரும் -அவன் வேண் டியவற்றையெல்லாம் தந்தருள்வான் . Tone2 திருப்பெருந்துறையில் எழுந்தருளிய பெருங்கருணையாளனாகிய இறைவன் மருந்துருவாய் என் மனத்திலே வந்திருந்து என்னை ஆட் கொண்டருளினன் . நெஞ்சே அவ்விறைவனது திருவடிகளைச் சிந்தித் திருந்து உனக்கு வேண்டியவற்றை இரந்து பெற்றுக்கொள் ' அவன் உனக்கு வேண்டியவற்றையெல்லாம் தந்தருள்வான் என்பதாம் . என் மனத்தே வந்து இருந்து என்னை ஆண்டான் என இயைத்து மனத்திலே வெளிப்பட்டுத்தோன்றி ஆண்டான் எனக்கொள்க : ' அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு ' ( பிடித்த 6 ) எனவும் ' ' சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு ' ( சென்னி 6 ) எனவும் அடிகள் அருளியவாறுங் காண்க . இரத்தல் - யாசித்தல் .