திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தரும் - செய்யுமென்னும் முற்று. காண் - முன்னிலையசை. இறைவன் எல்லாம் தருவான் என்பது வேண்ட முழுதும் தருவோய் நீ" (குழைத்த பத்து 6) என்பதனாலுமறிக. மருந்து - அமுதம். மருந் துருவாய் என்றார், இன்பஞ் செய்தலின். இது மனத்திற்குக் கூறியது. 1290 இதன்கண், 'பெருங்கருணையாளன் மருந்துருவாய் என் மனத்தே வந்து இருந்து ஆண்டான் அவன் இணையடியே சிந்தித்து இருந்து இரந்து கொள்' என்பதனால் அணைந்தோர்தன்மை என்னும் பதி கப் பொருள் புலப்படுமாறு காண்க. 10. 625. இன்பம் பெருக்கி இருளகற்றி யெஞ்ஞான்றும் துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் -- அன்பமைத்துச் சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவத்து. ப - ரை. சீர் ஆர் பெருந்துறையான் - சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையையுடைய இறைவன், இன்பம் பெருக்கி - பேரின் பத்தினைப் பெருகச் செய்து, இருள் அகற்றி - ஆணவ இருளை நீக்கி, துன்பம் தொடர்வு அறுத்து - பிறவித்துன்பத்தின் தொடர்ச்சியை நீக்கி, சோதியாய் - மனத்தில் அருள் ஒளிவடிவமாய், அன்பு அமைத்து - அன்பினை உண்டாக்கி, எஞ்ஞான்றும் சிந்தை ஊராக உவந்து கொண்டான் - எப்பொழுதும் என் உள்ளத்தைத் தனது பதியாக விரும்பிக்கொண்டருளினன். என் திருப்பெருந்துறையையுடைய இறைவன் எனக்கு இன்பத்தைப் பெருகச் செய்து ஆணவ இருளை நீக்கிப் பிறவித்துன்பத்தின் தொடர்ச்சியை அறுத்து அருளொளி வடிவமாய் அன்பினை டாக்கி எஞ்ஞான்றும் என் மனத்தையே தனக்கு ஊராக விரும்பிக் கொண்டருளினன் என்பதாம். உண் இருள் ஆணவ இருள். இறைவன் இருள் அகற்றியமை, "இருள்கடிந் தருளிய இன்பவூர்தி" கீர்த்தி 123 "இருள்கெட அருளும் இறைவா போற்றி" போற்றி 169 **பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே' கோயிற் 3 கோயிற் 7 சமும் நக் "இன்றெனக் கருளி பிருள் கடிந் துள்ளத்து" 'போரே றேநின் பொன்னகர்வாய் நீ போந்தருளி யிருணீக்கி'' சதகம் 53
திருவாசக ஆராய்ச்சியுரை தரும் - செய்யுமென்னும் முற்று . காண் - முன்னிலையசை . இறைவன் எல்லாம் தருவான் என்பது வேண்ட முழுதும் தருவோய் நீ ( குழைத்த பத்து 6 ) என்பதனாலுமறிக . மருந்து - அமுதம் . மருந் துருவாய் என்றார் இன்பஞ் செய்தலின் . இது மனத்திற்குக் கூறியது . 1290 இதன்கண் ' பெருங்கருணையாளன் மருந்துருவாய் என் மனத்தே வந்து இருந்து ஆண்டான் அவன் இணையடியே சிந்தித்து இருந்து இரந்து கொள் ' என்பதனால் அணைந்தோர்தன்மை என்னும் பதி கப் பொருள் புலப்படுமாறு காண்க . 10 . 625. இன்பம் பெருக்கி இருளகற்றி யெஞ்ஞான்றும் துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் -- அன்பமைத்துச் சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவத்து . - ரை . சீர் ஆர் பெருந்துறையான் - சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையையுடைய இறைவன் இன்பம் பெருக்கி - பேரின் பத்தினைப் பெருகச் செய்து இருள் அகற்றி - ஆணவ இருளை நீக்கி துன்பம் தொடர்வு அறுத்து - பிறவித்துன்பத்தின் தொடர்ச்சியை நீக்கி சோதியாய் - மனத்தில் அருள் ஒளிவடிவமாய் அன்பு அமைத்து - அன்பினை உண்டாக்கி எஞ்ஞான்றும் சிந்தை ஊராக உவந்து கொண்டான் - எப்பொழுதும் என் உள்ளத்தைத் தனது பதியாக விரும்பிக்கொண்டருளினன் . என் திருப்பெருந்துறையையுடைய இறைவன் எனக்கு இன்பத்தைப் பெருகச் செய்து ஆணவ இருளை நீக்கிப் பிறவித்துன்பத்தின் தொடர்ச்சியை அறுத்து அருளொளி வடிவமாய் அன்பினை டாக்கி எஞ்ஞான்றும் என் மனத்தையே தனக்கு ஊராக விரும்பிக் கொண்டருளினன் என்பதாம் . உண் இருள் ஆணவ இருள் . இறைவன் இருள் அகற்றியமை இருள்கடிந் தருளிய இன்பவூர்தி கீர்த்தி 123 இருள்கெட அருளும் இறைவா போற்றி போற்றி 169 ** பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே ' கோயிற் 3 கோயிற் 7 சமும் நக் இன்றெனக் கருளி பிருள் கடிந் துள்ளத்து ' போரே றேநின் பொன்னகர்வாய் நீ போந்தருளி யிருணீக்கி ' ' சதகம் 53