திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1298 6 31: திருவாசக ஆராய்ச்சியுரை காணுங் ஈரணங்கள்' எல்லாம்யே ரின்பமெனப் பேணும் அடியார் பிறப்பகலக் காணும் பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியானை வாயாரப் பேசு. ப-ரை: காணும் கரணங்கள் எல்லாம் - தாம் அறிவைப் பெறு தற்குரிய கருவிகள் எல்லாவற்றிலும், பேரின்பம் என பேணும் அடி யார் - பேரின்ப வடிவாகக் கண்டு வழிபடும் அடியவர்கள். பிறப்பு அகல காணும் பெரியானை - தமது பிறவித் துன்பம் நீங்கும்படி தரிசித்து வணங்கும் பெருமையுடையவனும், பெருந்துறையில் என் றும் பிரியானை - திருப்பெருந்துறையில் எப்போதும் நீங்காது எழுந் தருளியிருப்பவனுமாகிய இறைவனை, நெஞ்சே வாயார பேசு -மனமே வாயாரப் புகழ்ந்து பேசுவாயாக. காணும் கரணங்களெல்லாவற்றும் பேரின்பவடிவாகக் கண்டு போற்றும் அடியவர்கள். தமது பிறவித் துன்பம் நீங்கும்படி தரிசித்து வணங்கும் பெருமையுடையவனும், திருப்பெருந்துறையில் எப்பொழு தும் நீங்காது எழுந்தருளியிருப்பவனுமாகிய இறைவனை, மனமே. வாயாரப் புகழ்ந்து பேசுவாயாக என்பதாம். காணுங் கரணங்கள் - அறிதற்குரிய கருவிகள் அவை மனம். புத்தி சித்தம் என்னும் அகக் கருவிகளும், மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக் கருவிகளுமாகும். இறைவன் திருவருளைப் பெற்றவழிக் கருவிகளால் இறைவனை அறிய முடியுமாதலின் காணுங் கரணங்களெல்லாம் பேரின்பமெனப் பேணும் அடியார்' என்றார். 'மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் வாயாரத் தன் னடியே பாடுந் தொண்டர்" எனத் தேவாரத்தும் வருவன காண்க. பேணுதல் - வழிபடுதல். 'அமரர்ப் பேணியும்" (பட்டினப் பாலை 270) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. பேரின்பமெனப் பேணும் பேரின்ப வடிவாகக்கண்டு வழிபடும். "அடியார் பிறப்பகலக் காணும் பெரியானை" என்றதனால் மனமே நீயும் பிறப்பதல வாயாரப் பேசு என்றார். இதன்கண், ''பேரின்பமெனப் பேணும் அடியார் பிறப்பகலக் காணும் பெரியானை" என்றதனால் அனுபவத்துக் கையமின்மையுாரத் தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 632. பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப் பெருந்துறையே யென்று பிறப்பறுத்தேன் நல்ல மருந்தினடி யென்மனத்தே வைத்து. 6 ப -ரை. நல்ல மருந்தின் அடி என் மனத்தே வைத்து - பிற வித் துன்பத்தை நீக்குதற்குச் சிறந்த மருந்தாகிய இறைவனது திரு வடிகளை என் மனத்தில் இருத்தி, பேசும் பொருளுக்கு இலக்கித
1298 6 31 : திருவாசக ஆராய்ச்சியுரை காணுங் ஈரணங்கள் ' எல்லாம்யே ரின்பமெனப் பேணும் அடியார் பிறப்பகலக் காணும் பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியானை வாயாரப் பேசு . - ரை : காணும் கரணங்கள் எல்லாம் - தாம் அறிவைப் பெறு தற்குரிய கருவிகள் எல்லாவற்றிலும் பேரின்பம் என பேணும் அடி யார் - பேரின்ப வடிவாகக் கண்டு வழிபடும் அடியவர்கள் . பிறப்பு அகல காணும் பெரியானை - தமது பிறவித் துன்பம் நீங்கும்படி தரிசித்து வணங்கும் பெருமையுடையவனும் பெருந்துறையில் என் றும் பிரியானை - திருப்பெருந்துறையில் எப்போதும் நீங்காது எழுந் தருளியிருப்பவனுமாகிய இறைவனை நெஞ்சே வாயார பேசு -மனமே வாயாரப் புகழ்ந்து பேசுவாயாக . காணும் கரணங்களெல்லாவற்றும் பேரின்பவடிவாகக் கண்டு போற்றும் அடியவர்கள் . தமது பிறவித் துன்பம் நீங்கும்படி தரிசித்து வணங்கும் பெருமையுடையவனும் திருப்பெருந்துறையில் எப்பொழு தும் நீங்காது எழுந்தருளியிருப்பவனுமாகிய இறைவனை மனமே . வாயாரப் புகழ்ந்து பேசுவாயாக என்பதாம் . காணுங் கரணங்கள் - அறிதற்குரிய கருவிகள் அவை மனம் . புத்தி சித்தம் என்னும் அகக் கருவிகளும் மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக் கருவிகளுமாகும் . இறைவன் திருவருளைப் பெற்றவழிக் கருவிகளால் இறைவனை அறிய முடியுமாதலின் காணுங் கரணங்களெல்லாம் பேரின்பமெனப் பேணும் அடியார் ' என்றார் . ' மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் வாயாரத் தன் னடியே பாடுந் தொண்டர் எனத் தேவாரத்தும் வருவன காண்க . பேணுதல் - வழிபடுதல் . ' அமரர்ப் பேணியும் ( பட்டினப் பாலை 270 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . பேரின்பமெனப் பேணும் பேரின்ப வடிவாகக்கண்டு வழிபடும் . அடியார் பிறப்பகலக் காணும் பெரியானை என்றதனால் மனமே நீயும் பிறப்பதல வாயாரப் பேசு என்றார் . இதன்கண் ' ' பேரின்பமெனப் பேணும் அடியார் பிறப்பகலக் காணும் பெரியானை என்றதனால் அனுபவத்துக் கையமின்மையுாரத் தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 632. பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப் பெருந்துறையே யென்று பிறப்பறுத்தேன் நல்ல மருந்தினடி யென்மனத்தே வைத்து . 6 -ரை . நல்ல மருந்தின் அடி என் மனத்தே வைத்து - பிற வித் துன்பத்தை நீக்குதற்குச் சிறந்த மருந்தாகிய இறைவனது திரு வடிகளை என் மனத்தில் இருத்தி பேசும் பொருளுக்கு இலக்கித