திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 535 குருகு என்பது கைவளையின் பெயராதல் "கொல்லுலை மூக்குங் குருக்கத்தி மரமும்....... கோழியுங் கையின் வளையுங் குருகெனல் என்னும் பிங்கலந்தையானும் (10-371) அறிக. மடுவுக்கு, அம் கம் குருகு இனம் அழகிய நீர்ப்பறவைகளின் கூட்டமாகும். குருகினம் சொற்சிலேடை. பின்னும் என்பதற்கு மேலும் எனினுமமையும். அரவம் பாம்பு; ஒலியுமாம். அரவம் - ஆரவாரம் (திருக்கோவை. உரை-160) இப்பொருளில் அரவம் என்பது சொற்சிலேடையா கும். அரவம் என்பது இறைவற்கன்றி சடைநாகம் என்னும் பூணு டைமையால் இறைவிக்கும். பொருந்தும். தங்கள் மலங் கழுவுவார் என்றது தம்முடைய ஆணவம், கன் மம், மாயை என்னும் மும்மலங்களை நீக்கும் பக்குவமுடையார். வந்து சேர்தலினால் என இறைவிக்கும் இறைவனுக்கும்; தங்களுடைய உடலழுக்கை நீக்கும் பொருட்டு முழுக வருபவர்கள் வந்து சேர்த லினால் என மடுவுக்கும் ஒப்புமையை விரித்து அமைபக் காண்க. கழுவுவார் எனப் பிரித்து மடுவினிடத் தும் உடலழுக்கைக் கழுவுவார் வந்து சேர்தலினாலும் இறைவியிடத் தும் இறைவனிடத்தும் உயிரழுக்காகிய ஆணவம், கன்மம், மாயை யாகிய மும்மலங்களை நீக்கிக்கொள்ளும் பக்குவமுடையார் வந்து சேர்தலினாலும் எனவும் பொருள் உரைக்கலாம். இனி, தங்கண் மலம் குவளைக்கார்மலர் முதலியவற்றையுடைமையால் எங்கள் பிராட் டியும் எங்கோனும் போன்றியைந்த மடு என்க. சீவகரணங்கள் சிவகரணங்களாக மாறப்பெற்ற அடிகளார்க்கு மடு எம்பிராட்டி யும் எங்கோனும்போலத் தோன்றுவதாயிற்று. ஆனாயநாயனார் தாம் சார்ந்த கொன்றையினை இறைவனாகக் கண்டமையை, 'சென்றணைந்த வானாயர் செய்தவிரைத் தாமமென மன்றன்மலர்த் துணர்தூக்கி மருங்குதாழ் சடையார்போ னின்றநறுங் கொன்றையினை நேர்நோக்கி நின்றுருகி யொன்றிய சிந்தையிலக்பை யுடையவர்பான் மடைதிறந்தார்" (ஆனாய்.-21 ) எனப் பெரியபுராணத்தும் கூறுதல் ஈண்டு அறியற்பாலது. எங்கள் பிராட்டியும் எங்கோனும் என இறைவியை முற்கூறி யது திருவருட்சத்தி பதிந்த பக்கு வநிலைக்கண் சிவனருட்பேறு கிடைக் கும் முறைமைபற்றியாகும். மடு - படித்துறை கட்டப்படாத இயற்கை நீர்நிலை. ''மடுவுநீர் நிலையுமடுவென வகுப்பர் (பிங்கல.-10-884) பொங்குமடு -பலரும் பாய்ந்து விளையாடி ஆடுதலால் மேலே கிளருகின்ற நீரை
திருவெம்பாவை 535 குருகு என்பது கைவளையின் பெயராதல் கொல்லுலை மூக்குங் குருக்கத்தி மரமும் ....... கோழியுங் கையின் வளையுங் குருகெனல் என்னும் பிங்கலந்தையானும் ( 10-371 ) அறிக . மடுவுக்கு அம் கம் குருகு இனம் அழகிய நீர்ப்பறவைகளின் கூட்டமாகும் . குருகினம் சொற்சிலேடை . பின்னும் என்பதற்கு மேலும் எனினுமமையும் . அரவம் பாம்பு ; ஒலியுமாம் . அரவம் - ஆரவாரம் ( திருக்கோவை . உரை -160 ) இப்பொருளில் அரவம் என்பது சொற்சிலேடையா கும் . அரவம் என்பது இறைவற்கன்றி சடைநாகம் என்னும் பூணு டைமையால் இறைவிக்கும் . பொருந்தும் . தங்கள் மலங் கழுவுவார் என்றது தம்முடைய ஆணவம் கன் மம் மாயை என்னும் மும்மலங்களை நீக்கும் பக்குவமுடையார் . வந்து சேர்தலினால் என இறைவிக்கும் இறைவனுக்கும் ; தங்களுடைய உடலழுக்கை நீக்கும் பொருட்டு முழுக வருபவர்கள் வந்து சேர்த லினால் என மடுவுக்கும் ஒப்புமையை விரித்து அமைபக் காண்க . கழுவுவார் எனப் பிரித்து மடுவினிடத் தும் உடலழுக்கைக் கழுவுவார் வந்து சேர்தலினாலும் இறைவியிடத் தும் இறைவனிடத்தும் உயிரழுக்காகிய ஆணவம் கன்மம் மாயை யாகிய மும்மலங்களை நீக்கிக்கொள்ளும் பக்குவமுடையார் வந்து சேர்தலினாலும் எனவும் பொருள் உரைக்கலாம் . இனி தங்கண் மலம் குவளைக்கார்மலர் முதலியவற்றையுடைமையால் எங்கள் பிராட் டியும் எங்கோனும் போன்றியைந்த மடு என்க . சீவகரணங்கள் சிவகரணங்களாக மாறப்பெற்ற அடிகளார்க்கு மடு எம்பிராட்டி யும் எங்கோனும்போலத் தோன்றுவதாயிற்று . ஆனாயநாயனார் தாம் சார்ந்த கொன்றையினை இறைவனாகக் கண்டமையை ' சென்றணைந்த வானாயர் செய்தவிரைத் தாமமென மன்றன்மலர்த் துணர்தூக்கி மருங்குதாழ் சடையார்போ னின்றநறுங் கொன்றையினை நேர்நோக்கி நின்றுருகி யொன்றிய சிந்தையிலக்பை யுடையவர்பான் மடைதிறந்தார் ( ஆனாய் . - 21 ) எனப் பெரியபுராணத்தும் கூறுதல் ஈண்டு அறியற்பாலது . எங்கள் பிராட்டியும் எங்கோனும் என இறைவியை முற்கூறி யது திருவருட்சத்தி பதிந்த பக்கு வநிலைக்கண் சிவனருட்பேறு கிடைக் கும் முறைமைபற்றியாகும் . மடு - படித்துறை கட்டப்படாத இயற்கை நீர்நிலை . ' ' மடுவுநீர் நிலையுமடுவென வகுப்பர் ( பிங்கல . - 10-884 ) பொங்குமடு -பலரும் பாய்ந்து விளையாடி ஆடுதலால் மேலே கிளருகின்ற நீரை