திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1304 திருவாசக ஆராய்ச்சியுரை டினால் நல்லனவும் அல்லனவுமாகிய பலவகைச் சீவச் செயல்களும் நிகழா என உரைசெய்தலே இயைபுடைத்தாகும். ஆகாதே என்ப தில் ஏகாரத்தை வினாவாகவோ மறையாகவோ கொண்டு எனப் பொருள் கொள்ளின், இறைவன் ஆகும் என்னுள் எழுந்தருளப் பெற்றபின் கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிக்கும் காரிகை யார்கள் தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் என்பன முதலிய சீவச் செயல்களெல்லாம் உளவாம் என உரைத்தல் சீவோபாதி ஒழி தல் என்பதனோடு முரணுறுதலன்றி இறைவனது வெளிப்பாட்டினால் எய்தும் பயனும் இலதாகும். இன்னும்,ஆகாதே என்பதற்கு ஆகும் என்பதே பொருளென அடிகள் கருதியிருப்பின் அதனை எதிர்மறை முகத்தாற் கூறாது ஆகுமே எனக் கூறியிருப்பர். அங்ஙனம் கூறியரு ளாமையானும் ஆகாதே என்பதில் ஏகாரத்தை அசைநிலையாக்கி ஆகாது எனப் பொருள் கொள்ளுவதே ஈண்டு இயைபுடைத்தாம் என்க. இனித் திருப்பெருந்துறைப் புராணமுடையார், "வாகுதிருப் பெருந்துறையா ரெழுந்தருளப் பெறிலெல்லா வளங்கண் முற்று மாகுமெமக் கல்லாத தாகாதென் றியம்பல்படை யாட்சியாகும்" " எனக் கூறுகின்றார். அதன்படி நல்லன ஆகுமென்றும் அல்லன ஆகா வென்றும் பொருள்கொள்ளவேண்டியதாகின்றது. ஒரு பாடலிலேயே ஆகாதே என்பதற்கு ஆகும் எனவும் ஆகாது, எனவும் பொருளு ரைத்தல் அநவத்தை என்னும் குற்றமாகும், ஆதலால், ஆகாது என்பதே எல்லா இடத்தும் பொருந்தத்தக்கதெனக் கொள்ளப்படும். இறையருள் வாழ்வின்கண் இம்மைக்கண் அடையும் உயர்ந்தநிலை சீவன்முத்த நிலையாகும். இருவினையொப்புமலபரிபா கம் எய்திய உயிர், இறைவன் அருள் இன்பமொன்றையே நாடி மற்று உலகியல் வாழ்வுகளை வெறுத்து நிற்கும் நிலைக்கண், திருவருட் சத்தி பதிதலாகிய சத்திநிபாதம் உண்டாகும். அந்நிலையில் தீவிரதர சத்தி நிபாதம்உண்டாயபோது இறைவன் நேரிலோ ஆசாரிய மூர்த்தியை அதிட்டித்தோ நின்று தீக்கை செய்தருளுவர். அத்தீக்கையினாலே சஞ்சித ஆகாமிய கன்மங்கள் ஒழிந்துபோக பிராரத்த கன்மம் மட்டும் உடம்புள்ள வரையும் உளதாகும். அப்போது ஆன்மாவின் செயல் யாதுமின்றி கருவிகரணங்கள் எல்லாம் சிவகரணமாய் மாற சிவா னந்த அனுபவத்தையே அனுபவித்து நிற்கும். இறைவனுக்குரிய சர்வ வியாபகம் முதலிய எண்குணங்களும் உளவாயிலும் அவற்றைத்தா னுணராது தன்னுணர்ச்சியின்றிசிவானுபவத்தில் ஈடுபடும். இதனையே அடிகள் திருப்படையாட்சிக்கண் இறைவன் எழுந்தருளப்பெறில் நல் லனவும் அல்லனவுமாகிய சீவ உபாதிகள் ஒன்றும் நிகழாது என ப.பு
1304 திருவாசக ஆராய்ச்சியுரை டினால் நல்லனவும் அல்லனவுமாகிய பலவகைச் சீவச் செயல்களும் நிகழா என உரைசெய்தலே இயைபுடைத்தாகும் . ஆகாதே என்ப தில் ஏகாரத்தை வினாவாகவோ மறையாகவோ கொண்டு எனப் பொருள் கொள்ளின் இறைவன் ஆகும் என்னுள் எழுந்தருளப் பெற்றபின் கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிக்கும் காரிகை யார்கள் தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் என்பன முதலிய சீவச் செயல்களெல்லாம் உளவாம் என உரைத்தல் சீவோபாதி ஒழி தல் என்பதனோடு முரணுறுதலன்றி இறைவனது வெளிப்பாட்டினால் எய்தும் பயனும் இலதாகும் . இன்னும் ஆகாதே என்பதற்கு ஆகும் என்பதே பொருளென அடிகள் கருதியிருப்பின் அதனை எதிர்மறை முகத்தாற் கூறாது ஆகுமே எனக் கூறியிருப்பர் . அங்ஙனம் கூறியரு ளாமையானும் ஆகாதே என்பதில் ஏகாரத்தை அசைநிலையாக்கி ஆகாது எனப் பொருள் கொள்ளுவதே ஈண்டு இயைபுடைத்தாம் என்க . இனித் திருப்பெருந்துறைப் புராணமுடையார் வாகுதிருப் பெருந்துறையா ரெழுந்தருளப் பெறிலெல்லா வளங்கண் முற்று மாகுமெமக் கல்லாத தாகாதென் றியம்பல்படை யாட்சியாகும் எனக் கூறுகின்றார் . அதன்படி நல்லன ஆகுமென்றும் அல்லன ஆகா வென்றும் பொருள்கொள்ளவேண்டியதாகின்றது . ஒரு பாடலிலேயே ஆகாதே என்பதற்கு ஆகும் எனவும் ஆகாது எனவும் பொருளு ரைத்தல் அநவத்தை என்னும் குற்றமாகும் ஆதலால் ஆகாது என்பதே எல்லா இடத்தும் பொருந்தத்தக்கதெனக் கொள்ளப்படும் . இறையருள் வாழ்வின்கண் இம்மைக்கண் அடையும் உயர்ந்தநிலை சீவன்முத்த நிலையாகும் . இருவினையொப்புமலபரிபா கம் எய்திய உயிர் இறைவன் அருள் இன்பமொன்றையே நாடி மற்று உலகியல் வாழ்வுகளை வெறுத்து நிற்கும் நிலைக்கண் திருவருட் சத்தி பதிதலாகிய சத்திநிபாதம் உண்டாகும் . அந்நிலையில் தீவிரதர சத்தி நிபாதம்உண்டாயபோது இறைவன் நேரிலோ ஆசாரிய மூர்த்தியை அதிட்டித்தோ நின்று தீக்கை செய்தருளுவர் . அத்தீக்கையினாலே சஞ்சித ஆகாமிய கன்மங்கள் ஒழிந்துபோக பிராரத்த கன்மம் மட்டும் உடம்புள்ள வரையும் உளதாகும் . அப்போது ஆன்மாவின் செயல் யாதுமின்றி கருவிகரணங்கள் எல்லாம் சிவகரணமாய் மாற சிவா னந்த அனுபவத்தையே அனுபவித்து நிற்கும் . இறைவனுக்குரிய சர்வ வியாபகம் முதலிய எண்குணங்களும் உளவாயிலும் அவற்றைத்தா னுணராது தன்னுணர்ச்சியின்றிசிவானுபவத்தில் ஈடுபடும் . இதனையே அடிகள் திருப்படையாட்சிக்கண் இறைவன் எழுந்தருளப்பெறில் நல் லனவும் அல்லனவுமாகிய சீவ உபாதிகள் ஒன்றும் நிகழாது என ப.பு