திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்படையாட்சி 1305 படவிரித்து அருளிச்செய்திருக்கின்றனர். நல்லனவாகிய செயல் களும் நிகழா என அடிகள் அருளிச் செய்தமை, அவைகள் கீழ்நிலைக் கண் சாதனமாய் அமைவனவன்றி சாத்தியமாகிய சீவன்முத்தநிலைக் கண் அவை மீட்டும் நிகழவேண்டாமைபற்றியாகும். அதனை உணராது நல்லன ஆகும் அல்லன ஆகா எனப்பொருள் கொள்வது, ஆகாதே எனப் பதிகம் முழுவதிலும் தொடர்ந்து வந்த அச்சொல்லுக்கு ஒரு கால் ஆகாதே என வினாப்பொருள் கொண்டு அதனை எதிர்மறையாக்கி ஆகும் என உடன்பாட்டுப்பொருளும் மற்றொருகால் ஏ அசைநிலை யாக்கி ஆகாது என எதிர்மறைப்பொருளும் கொள்வது இடர்ப்பாடும் சொற்பொருள்மயக்கமுமாகும். இதன்கண், மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படுமாயிடில் நல்லவும் அல்லவுமாகிய செயல்கள் நிகழாமை கூறப்படுதலின் சீவோ பாதியொழிதல் என்னும் பதிகநுதலியபொருள் புலப்படுமாறு காண்க, இவ்வாறே ஏனைய திருப்பாடல்களிலுங் கொள்க. 6:4. ஒன்றினொ டொன்றுமோர் ஐந்தினொ டைந்தும் உயிர்ப்பறு மாகாதே உன்னடி யாரடி யாரடி யோமென உய்ந்தன வாகாதே கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே காரண மாகும னாதி குணங்கள் கருத்துறு மாகாதே நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே நாமுமெ லாமடி யாருட னேசெல் நண்ணுறு மாகாதே என்றுமெ னன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே ஏறுடை யானெனை யாளுடை நாயகன் என்னுள் புகுந்திடிவே; ப - ரை: ஏறுடையான் எனை ஆள் உடை நாயகன் என்னுள் புகுந்திடில் - இடபவாகனத்தையுடையவனும் என்னை ஆளாகவுடை யவனுமாகிய இறைவன் என் அறிவில் வெளிப்பட்டு நிலைபெறப் பெற்றால், ஒன்றினொடு ஒன்றும் ஓர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்ப றும் ஆகாது - உயிரினோடு உடம்பும் ஐம்பொறிகளோடு ஐம்புலன்க ளும் கலந்து தோன்றும் பிறப்பு இறைவனால் நீக்கப்படுதலும் நிகழாது; உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாது - உன் அடி
திருப்படையாட்சி 1305 படவிரித்து அருளிச்செய்திருக்கின்றனர் . நல்லனவாகிய செயல் களும் நிகழா என அடிகள் அருளிச் செய்தமை அவைகள் கீழ்நிலைக் கண் சாதனமாய் அமைவனவன்றி சாத்தியமாகிய சீவன்முத்தநிலைக் கண் அவை மீட்டும் நிகழவேண்டாமைபற்றியாகும் . அதனை உணராது நல்லன ஆகும் அல்லன ஆகா எனப்பொருள் கொள்வது ஆகாதே எனப் பதிகம் முழுவதிலும் தொடர்ந்து வந்த அச்சொல்லுக்கு ஒரு கால் ஆகாதே என வினாப்பொருள் கொண்டு அதனை எதிர்மறையாக்கி ஆகும் என உடன்பாட்டுப்பொருளும் மற்றொருகால் அசைநிலை யாக்கி ஆகாது என எதிர்மறைப்பொருளும் கொள்வது இடர்ப்பாடும் சொற்பொருள்மயக்கமுமாகும் . இதன்கண் மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படுமாயிடில் நல்லவும் அல்லவுமாகிய செயல்கள் நிகழாமை கூறப்படுதலின் சீவோ பாதியொழிதல் என்னும் பதிகநுதலியபொருள் புலப்படுமாறு காண்க இவ்வாறே ஏனைய திருப்பாடல்களிலுங் கொள்க . 6 : 4 . ஒன்றினொ டொன்றுமோர் ஐந்தினொ டைந்தும் உயிர்ப்பறு மாகாதே உன்னடி யாரடி யாரடி யோமென உய்ந்தன வாகாதே கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே காரண மாகும னாதி குணங்கள் கருத்துறு மாகாதே நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே நாமுமெ லாமடி யாருட னேசெல் நண்ணுறு மாகாதே என்றுமெ னன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே ஏறுடை யானெனை யாளுடை நாயகன் என்னுள் புகுந்திடிவே ; - ரை : ஏறுடையான் எனை ஆள் உடை நாயகன் என்னுள் புகுந்திடில் - இடபவாகனத்தையுடையவனும் என்னை ஆளாகவுடை யவனுமாகிய இறைவன் என் அறிவில் வெளிப்பட்டு நிலைபெறப் பெற்றால் ஒன்றினொடு ஒன்றும் ஓர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்ப றும் ஆகாது - உயிரினோடு உடம்பும் ஐம்பொறிகளோடு ஐம்புலன்க ளும் கலந்து தோன்றும் பிறப்பு இறைவனால் நீக்கப்படுதலும் நிகழாது ; உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாது - உன் அடி