திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்படையாட்சி தாம். அடியார்க்குச் செய்யும் தொண்டு உண்டிகொடுத்தல், உறை யுள் கொடுத்தல், குற்றேவல் செய்தல் முதலியனவாகப் பலவகைப் படுதலின் 'உய்ந்தன' என்றார். 1307 தன் கன்றை நினைந்தெழு தாயென அடிகளை ஆட்கொள்ள வேண்டி இறைவன் பரமாசாரியனாய் வலிய எழுந்தருளி வந்தமை மாற்சரிய சம்பந்தமாகும். இதனை, மன்று நிறைந்தது மாபர மாயது நின்று நிறைந்தது நேர்தரு நந்தியுங் கன்று நினைந்தெழு தாயென வந்தபின் குன்று நிறைந்த குணவிளக் காமே'' (2446) எனத் திருமூலநாயனாரும் அருளியமை காண்க. இறைவன் வந்து ஆட் கொள்ளுதல் சீவன்முத்த நிலைக்கண் நிகழாமையின் 'கன்றை நினைந் தெழு தாயென வந்த கணக்கது வாகாதே' என்றார். சாத்வீக ராசத தாமதம் என்னும் மூக்குணங்களும் உயிரோடு இயல்பாகவுள்ளமையின் அவற்றை 'அநாதி குணங்கள்' என்றார். முக்குணங்கள் மனமுதலியவற்றைத் தொழிற்படுத்துவதற்கு ஏதுவா யுள்ளமையின் 'காரணமாகு மநாதி குணங்கள்' என்றார். சீவன் முத்த நிலைக்கண் மனம் இறைவனையன்றிப் பிறிதொன்றையும் பற்றா மையின் "அநாதி குணங்கள் கருத்தின்கண் உறுதல் ஆகாதே" என்றார். நடுக்கம் தடுமாற்றம். இத அகிதங்களைப் பகுத்துணரும் உணர்வு சீவன்முத்தநிலைக்கண் நிகழாமையின் 'நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே' என்றார். மும் இறையருள் வழிப்பட்டுச் சென்ற அடியார்களொடு நாம் எல்லோ செல்லமுற்படுதல் சீவன்முத்த நிலைக்கண் உளதாகாமையின் நாமுமெலாமடியாருடன் செல்ல நண்ணுதும் ஆகாது' என்றார். பரவமுது பராவமுது என நீட்டல் விகாரம் பெற்றது. அன்பு நிறைந்த அமுது - அன்பில் நிறைந்துள்ள அமுதம். 'அன்பினில் விளைந்த வாரமுதே' (பிடித்த பத்து 3) என வருதல் காண்க, அன்பி னில் நிறைந்த இறையருள் அமுதத்தை அனுபவித்தலாகிய பேதநிலை அத்துவிதமாகிய சீவன் முத்தநிலைக்கண் நிகழாமையின் 'அன்பு நிறைந்த பராவமுது எய்துவதாகாதே' என்றார். இத்திருப்பாட்டில், உயிர்ப்பறும் உய்ந்தன கணக்கது கருத்துறும் நடந்தன நண்ணுதும் எய்துவது என்னும் பலவகை முற்றுக்களும் தொழிற்பெயர்ப் பொருளில் வந்தன.
திருப்படையாட்சி தாம் . அடியார்க்குச் செய்யும் தொண்டு உண்டிகொடுத்தல் உறை யுள் கொடுத்தல் குற்றேவல் செய்தல் முதலியனவாகப் பலவகைப் படுதலின் ' உய்ந்தன ' என்றார் . 1307 தன் கன்றை நினைந்தெழு தாயென அடிகளை ஆட்கொள்ள வேண்டி இறைவன் பரமாசாரியனாய் வலிய எழுந்தருளி வந்தமை மாற்சரிய சம்பந்தமாகும் . இதனை மன்று நிறைந்தது மாபர மாயது நின்று நிறைந்தது நேர்தரு நந்தியுங் கன்று நினைந்தெழு தாயென வந்தபின் குன்று நிறைந்த குணவிளக் காமே ' ' ( 2446 ) எனத் திருமூலநாயனாரும் அருளியமை காண்க . இறைவன் வந்து ஆட் கொள்ளுதல் சீவன்முத்த நிலைக்கண் நிகழாமையின் ' கன்றை நினைந் தெழு தாயென வந்த கணக்கது வாகாதே ' என்றார் . சாத்வீக ராசத தாமதம் என்னும் மூக்குணங்களும் உயிரோடு இயல்பாகவுள்ளமையின் அவற்றை ' அநாதி குணங்கள் ' என்றார் . முக்குணங்கள் மனமுதலியவற்றைத் தொழிற்படுத்துவதற்கு ஏதுவா யுள்ளமையின் ' காரணமாகு மநாதி குணங்கள் ' என்றார் . சீவன் முத்த நிலைக்கண் மனம் இறைவனையன்றிப் பிறிதொன்றையும் பற்றா மையின் அநாதி குணங்கள் கருத்தின்கண் உறுதல் ஆகாதே என்றார் . நடுக்கம் தடுமாற்றம் . இத அகிதங்களைப் பகுத்துணரும் உணர்வு சீவன்முத்தநிலைக்கண் நிகழாமையின் ' நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே ' என்றார் . மும் இறையருள் வழிப்பட்டுச் சென்ற அடியார்களொடு நாம் எல்லோ செல்லமுற்படுதல் சீவன்முத்த நிலைக்கண் உளதாகாமையின் நாமுமெலாமடியாருடன் செல்ல நண்ணுதும் ஆகாது ' என்றார் . பரவமுது பராவமுது என நீட்டல் விகாரம் பெற்றது . அன்பு நிறைந்த அமுது - அன்பில் நிறைந்துள்ள அமுதம் . ' அன்பினில் விளைந்த வாரமுதே ' ( பிடித்த பத்து 3 ) என வருதல் காண்க அன்பி னில் நிறைந்த இறையருள் அமுதத்தை அனுபவித்தலாகிய பேதநிலை அத்துவிதமாகிய சீவன் முத்தநிலைக்கண் நிகழாமையின் ' அன்பு நிறைந்த பராவமுது எய்துவதாகாதே ' என்றார் . இத்திருப்பாட்டில் உயிர்ப்பறும் உய்ந்தன கணக்கது கருத்துறும் நடந்தன நண்ணுதும் எய்துவது என்னும் பலவகை முற்றுக்களும் தொழிற்பெயர்ப் பொருளில் வந்தன .