திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்படையாட்சி மாமறை யும்மறி பாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே இன்னியல் செங்கழு நீர்மலர் என்றலை எய்துவ தாகாதே என்னையு டைப்பெரு மானருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே. ப - ரை: என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறில் - என்னை அடிமையாகவுடைய பெருமானும் அருளையுடைய ஈசனுமாகிய இறைவன் என் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப் பெற்றால் அதன்மேல், என் அணி ஆர்முலை ஆகம் அணைந்து உடன் இன்புறும் ஆகாது - என்னுடைய ஆபரணங்கள் நிறைந்த தனங்கள் அவ்விறைவனது திருமார்பைத் தழுவி ஒன்றுபட்டு இன்பமடைதல் உண்டாகாது; எல்லை இல் மாகருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாது - அளவு இல்லாத பெரிய அருட்கடலில் இப்பொழுது போல இனிதாக முழுகுதலும் உளதாகாது. நன் மணி நாதம் முழங்கி என் உள் உற நண்ணுதும் ஆகாது - நல்ல மணியோசை போன்ற நாத மானது முழங்கிக்கொண்டு என் உள்ளேயுள்ள சுழுமுனை நாடியில் மிகுதியாகப் பொருந்துவதும் உளதாகாது; நாதன் அணி திருநீற் றினை நித்தலும் நண்ணுவது ஆகாது. இறைவனது அழகிய திருவெண் ணீற்றினை எப்பொழுதும் அணிந்து கொள்ளுதல் உளதாகாது; மன் னிய அன்பரில் முந்துற என்பணி வைகுவது ஆகாது - நிலைபெற்ற மெய்யடியார்களின் முன்னிலைக்கண் அவர்களுக்கு யான் செய்யும் தொண்டு பொருந்துவது நிகழாது; மா மறையும் அறியா மலர்ப்பா தம் வணங்குவது ஆகாது - பெரிய மறைநூல்களும் இத் தன்மைத் தென அறிய முடியாத தாமரை மலர்போன்ற திருவடிகளை வணங் குதல் உளதாகாது; இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்து வது ஆகாது - இனிய இயல்பையுடைய செங்கழுநீர் மலர்போன்ற திரு வடிகள் என் தலையிற் பொருந்துவது உளதாகாது. 1311 இறைவன் என் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப் பெற்றால் அதன்மேல் எனது தனங்கள் அவ்விறைவனது திருமார்பைத் தழுவி ஒன்றுபட்டு இன்பமடைதலும், அளவில்லாத பெரிய கருணைக்கட லில் இப்பொழுதுபோல் இனிதாக முழுகுதலும், நல்ல மணியோசை போன்ற நாதமானது முழங்கிக்கொண்டு என் உள்ளேயுள்ள சுழுமுனை நாடியில் மிகுதியாகப் பொருந்துவதும், இறைவனது அழகிய திரு வெண்ணீற்றினை எப்பொழுதும் அணிந்துகொள்ளுதலும், மெய்யடி யார்களின் முன்னிலைக்கண் அவர்களுக்கு யான் செய்யும் தொண்டு பொருந்துவதும், மறைநூல்களும் அறியமுடியாத திருவடிகளை வணங் குதலும், செங்கழுநீர்மலர் போன்ற திருவடிகள் என் தலையிற் பொருந்துவதும் உளவாகா என்பதாம்.
திருப்படையாட்சி மாமறை யும்மறி பாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே இன்னியல் செங்கழு நீர்மலர் என்றலை எய்துவ தாகாதே என்னையு டைப்பெரு மானருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே . - ரை : என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறில் - என்னை அடிமையாகவுடைய பெருமானும் அருளையுடைய ஈசனுமாகிய இறைவன் என் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப் பெற்றால் அதன்மேல் என் அணி ஆர்முலை ஆகம் அணைந்து உடன் இன்புறும் ஆகாது - என்னுடைய ஆபரணங்கள் நிறைந்த தனங்கள் அவ்விறைவனது திருமார்பைத் தழுவி ஒன்றுபட்டு இன்பமடைதல் உண்டாகாது ; எல்லை இல் மாகருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாது - அளவு இல்லாத பெரிய அருட்கடலில் இப்பொழுது போல இனிதாக முழுகுதலும் உளதாகாது . நன் மணி நாதம் முழங்கி என் உள் உற நண்ணுதும் ஆகாது - நல்ல மணியோசை போன்ற நாத மானது முழங்கிக்கொண்டு என் உள்ளேயுள்ள சுழுமுனை நாடியில் மிகுதியாகப் பொருந்துவதும் உளதாகாது ; நாதன் அணி திருநீற் றினை நித்தலும் நண்ணுவது ஆகாது . இறைவனது அழகிய திருவெண் ணீற்றினை எப்பொழுதும் அணிந்து கொள்ளுதல் உளதாகாது ; மன் னிய அன்பரில் முந்துற என்பணி வைகுவது ஆகாது - நிலைபெற்ற மெய்யடியார்களின் முன்னிலைக்கண் அவர்களுக்கு யான் செய்யும் தொண்டு பொருந்துவது நிகழாது ; மா மறையும் அறியா மலர்ப்பா தம் வணங்குவது ஆகாது - பெரிய மறைநூல்களும் இத் தன்மைத் தென அறிய முடியாத தாமரை மலர்போன்ற திருவடிகளை வணங் குதல் உளதாகாது ; இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்து வது ஆகாது - இனிய இயல்பையுடைய செங்கழுநீர் மலர்போன்ற திரு வடிகள் என் தலையிற் பொருந்துவது உளதாகாது . 1311 இறைவன் என் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப் பெற்றால் அதன்மேல் எனது தனங்கள் அவ்விறைவனது திருமார்பைத் தழுவி ஒன்றுபட்டு இன்பமடைதலும் அளவில்லாத பெரிய கருணைக்கட லில் இப்பொழுதுபோல் இனிதாக முழுகுதலும் நல்ல மணியோசை போன்ற நாதமானது முழங்கிக்கொண்டு என் உள்ளேயுள்ள சுழுமுனை நாடியில் மிகுதியாகப் பொருந்துவதும் இறைவனது அழகிய திரு வெண்ணீற்றினை எப்பொழுதும் அணிந்துகொள்ளுதலும் மெய்யடி யார்களின் முன்னிலைக்கண் அவர்களுக்கு யான் செய்யும் தொண்டு பொருந்துவதும் மறைநூல்களும் அறியமுடியாத திருவடிகளை வணங் குதலும் செங்கழுநீர்மலர் போன்ற திருவடிகள் என் தலையிற் பொருந்துவதும் உளவாகா என்பதாம் .