திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை யுடைய மடு. பொங்குதல் - மிக்கெழுதல். 'பொங்கிரு முந்நீர், அக மெல்லா நோக்கினை '' (கலி.- 144 - 17) என்புழி பொங்கு என்ப தற்கு மிக்கெழுகின்ற என நச். - உரைத்தமையுங் காண்க. 536 புகப்பாய்ந்து - உடல் நீரில் அமுங்கும்படி பாய்ந்து. மகளிர் நீரில் பாய்ந்து ஆடல் "புனல் பாய் மகளிர்” (பதிற்-86-10) "வாலிழை மடமங்கையர் தண்பொருநைப் புனல் பாயும் (புறநா. 11 - 2 - 5) என வருவனவற்றாலுமறிக. சங்கம் சிலம்ப - சங்குவளை ஒலிக்க. சிலம்பு கலந்து ஆர்த்தல். கைகளில் அணிந்த சங்கு வளையல் களின் ஒலியோடு காலில் அணிந்த சிலம்புகளின் ஒலி கலந்து ஒலித்தல். பொங்கல் - மேற்கிளருதல் 'வாட்டடங் கண்மட மங்கை நல்லீர் வரிவளை யார்ப்பவண் கொங்கை பொங்க சுண்ணம் இடித்து (பொற்.-8) என்புழிப்போல. பங்கயப் பூம்புனல் - தாமரைப் பூக்களையுடைய புனல். மிகுதிபற்றி பங்கயம் கூறினாராயினும் குவளை முதலியனவுங் கொள்க. "மடுவிற் பைந்தாட்குவளைகள் ருள் சூழ்ந்து பயின்றனவே '' ( திருக்கோவை - 363) பாய்ந்தாடுதல் இன்பம் பயத்தலின் "பாய்ந்தாடு" என்றார். பூத்தி இத்திருப்பாட்டில், நீராடும் மகளிர் தாம் நீராடும் மடுவினை இறைவியோடும் இறைவனோடும் ஒப்பித்துக் கூறி மகிழ்வாராயினர் இதன்கண், "எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்குமடு என்றதினால் சத்தியை வியந்தது என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 13 168. 35 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சிதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி யந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய். ப - ரை காது ஆர் குழை ஆட - காது களிற் பொருந்திய குழை கள் அசையவும்; பைம் பூண் கலன் ஆட - பசிய பொன்னாற் செய் யப்பட்ட பூண்களாகிய அணிகலன்கள் அசையவும், கோதை குழல் ஆட - பூமாலையும் கூந்தலும் அசையவும், வண்டின் குழாம் ஆட
திருவாசக ஆராய்ச்சியுரை யுடைய மடு . பொங்குதல் - மிக்கெழுதல் . ' பொங்கிரு முந்நீர் அக மெல்லா நோக்கினை ' ' ( கலி.- 144 - 17 ) என்புழி பொங்கு என்ப தற்கு மிக்கெழுகின்ற என நச் . - உரைத்தமையுங் காண்க . 536 புகப்பாய்ந்து - உடல் நீரில் அமுங்கும்படி பாய்ந்து . மகளிர் நீரில் பாய்ந்து ஆடல் புனல் பாய் மகளிர் ( பதிற் - 86-10 ) வாலிழை மடமங்கையர் தண்பொருநைப் புனல் பாயும் ( புறநா . 11 - 2 - 5 ) என வருவனவற்றாலுமறிக . சங்கம் சிலம்ப - சங்குவளை ஒலிக்க . சிலம்பு கலந்து ஆர்த்தல் . கைகளில் அணிந்த சங்கு வளையல் களின் ஒலியோடு காலில் அணிந்த சிலம்புகளின் ஒலி கலந்து ஒலித்தல் . பொங்கல் - மேற்கிளருதல் ' வாட்டடங் கண்மட மங்கை நல்லீர் வரிவளை யார்ப்பவண் கொங்கை பொங்க சுண்ணம் இடித்து ( பொற் . - 8 ) என்புழிப்போல . பங்கயப் பூம்புனல் - தாமரைப் பூக்களையுடைய புனல் . மிகுதிபற்றி பங்கயம் கூறினாராயினும் குவளை முதலியனவுங் கொள்க . மடுவிற் பைந்தாட்குவளைகள் ருள் சூழ்ந்து பயின்றனவே ' ' ( திருக்கோவை - 363 ) பாய்ந்தாடுதல் இன்பம் பயத்தலின் பாய்ந்தாடு என்றார் . பூத்தி இத்திருப்பாட்டில் நீராடும் மகளிர் தாம் நீராடும் மடுவினை இறைவியோடும் இறைவனோடும் ஒப்பித்துக் கூறி மகிழ்வாராயினர் இதன்கண் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்குமடு என்றதினால் சத்தியை வியந்தது என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 13 168 . 35 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சிதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி யந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய் . - ரை காது ஆர் குழை ஆட - காது களிற் பொருந்திய குழை கள் அசையவும் ; பைம் பூண் கலன் ஆட - பசிய பொன்னாற் செய் யப்பட்ட பூண்களாகிய அணிகலன்கள் அசையவும் கோதை குழல் ஆட - பூமாலையும் கூந்தலும் அசையவும் வண்டின் குழாம் ஆட