திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை புழியும் இப்பொருட்டாதல் காண்க. வகுத்த மயக்கங்கள் மயக்கவு ணர்ச்சியால் வகுக்கப்பட்ட காரியங்கள். அவை : தந்தை தாய் தமர் தாரம் முதலியன 1316 வானவர் - திருமால் முதலிய தேவர்கள், வானவரும் - உம்மை உயர்வு சிறப்பு: கண் என்றது ஈண்டு உண்மை அறிவைக் குறித்தது. கண்ணிலி காலம் - கண்ணிலியாயிருந்த காலம். சீவன் முத்த நிலைக்கண் கலக்கம் இன்மையின் "கலக்கறு மாகாதே" என்றார் கலக்கு- கலக் கம் என்பதன் கடைக்குறை. காதல்-அன்பு. பெண் ஆண் அலி என்னும் முக்கூற்றுப் படர்க்கைநிலையும் நான் நாம், நீ நீர் என்னும் இருகூற்றுத் தன்மை முன்னிலை நிலையும் ஆக உள்ளனவான மாறுபாடுகள் நீங்கிப் போதல் இனி உளதாகாது என்பதாம்; உலகம். அவன் அவள் அது என்னும் மூன்று கூறுகள் படர்க்கைக்கண் உரைக்கப்பட்டும், பின்னர் அவையே பேசும் பொரு ளு கேட்கும் பொருளுமாகித் தன்மை முன்னிலைக்கண் உரைச்கப் பட்டும் உளதாகின்ற மாறுபாடுகள் இறைவன் ஆட்கொண்ட போது நீங்கினமையின் அது இனி உளதாகாது என்பதாம் செய்யு ளாகலின் பெண் அலி ஆண் எனப் பிறழக் கூறினார். நாம் எனத் தன்மைப்பன்மை கூறப்பட்டமையின் அதன் ஒருமையும் அதற்கு இனமாகிய முன்னிலைப் பன்மையும் ஒருமையும் ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்' என்னும் தந்திரவுத்தியாற் கொள்ளப்படும். எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதமான பிறப்புக்கள் உளவாதலின் அவையொன்றின் பெயரும் அறியமுடியாமைப்ற்றிப் பேரறியாத பவங்கள்" என்றார். பெயர், பேர் என நின்றது. இனிப் பிறப்பின்மையின் 'பவங்கள் பிழைத்தன வாகாதே' என்றார். சித்திகள் எட்டு வகையாய் அவை ஒவ்வொன்றும் பலவாதலின், 'எண்ணிலியாகிய சித்திகள்' என்றார். எண்வகைச் சித்திகளாவன: அணிமா, மகிமா, கரிமா. இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன சீவன்முத்தநிலையடைந்து இறை யின்பத்தில் மூழ்கிக் கிடக்கும் உயிர்க்கு, இறைவனின் வேறாய் நின்று சித்திகளை எய்துதல் உளதாகாமையின் 'சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே' என்றார். எய்துவது என்பது எய்துதல் என்னும் தொழிற் பெயர்ப்பொருளுடைமையான் சித்திகள் என்னும் பன்மைக்கு முடி பாயிற்று: CHARD QU மயர்கறும், வணங்குதும் கலக்கறும் களித்திடும் பிணக்கரும் பிழைத்தன எய்துவது என்னும் வினைமுற்றுக்கள் தொழிற்பெயர்ப் ரொளில் வந்தன
திருவாசக ஆராய்ச்சியுரை புழியும் இப்பொருட்டாதல் காண்க . வகுத்த மயக்கங்கள் மயக்கவு ணர்ச்சியால் வகுக்கப்பட்ட காரியங்கள் . அவை : தந்தை தாய் தமர் தாரம் முதலியன 1316 வானவர் - திருமால் முதலிய தேவர்கள் வானவரும் - உம்மை உயர்வு சிறப்பு : கண் என்றது ஈண்டு உண்மை அறிவைக் குறித்தது . கண்ணிலி காலம் - கண்ணிலியாயிருந்த காலம் . சீவன் முத்த நிலைக்கண் கலக்கம் இன்மையின் கலக்கறு மாகாதே என்றார் கலக்கு- கலக் கம் என்பதன் கடைக்குறை . காதல் - அன்பு . பெண் ஆண் அலி என்னும் முக்கூற்றுப் படர்க்கைநிலையும் நான் நாம் நீ நீர் என்னும் இருகூற்றுத் தன்மை முன்னிலை நிலையும் ஆக உள்ளனவான மாறுபாடுகள் நீங்கிப் போதல் இனி உளதாகாது என்பதாம் ; உலகம் . அவன் அவள் அது என்னும் மூன்று கூறுகள் படர்க்கைக்கண் உரைக்கப்பட்டும் பின்னர் அவையே பேசும் பொரு ளு கேட்கும் பொருளுமாகித் தன்மை முன்னிலைக்கண் உரைச்கப் பட்டும் உளதாகின்ற மாறுபாடுகள் இறைவன் ஆட்கொண்ட போது நீங்கினமையின் அது இனி உளதாகாது என்பதாம் செய்யு ளாகலின் பெண் அலி ஆண் எனப் பிறழக் கூறினார் . நாம் எனத் தன்மைப்பன்மை கூறப்பட்டமையின் அதன் ஒருமையும் அதற்கு இனமாகிய முன்னிலைப் பன்மையும் ஒருமையும் ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் ' என்னும் தந்திரவுத்தியாற் கொள்ளப்படும் . எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதமான பிறப்புக்கள் உளவாதலின் அவையொன்றின் பெயரும் அறியமுடியாமைப்ற்றிப் பேரறியாத பவங்கள் என்றார் . பெயர் பேர் என நின்றது . இனிப் பிறப்பின்மையின் ' பவங்கள் பிழைத்தன வாகாதே ' என்றார் . சித்திகள் எட்டு வகையாய் அவை ஒவ்வொன்றும் பலவாதலின் ' எண்ணிலியாகிய சித்திகள் ' என்றார் . எண்வகைச் சித்திகளாவன : அணிமா மகிமா கரிமா . இலகிமா பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் என்பன சீவன்முத்தநிலையடைந்து இறை யின்பத்தில் மூழ்கிக் கிடக்கும் உயிர்க்கு இறைவனின் வேறாய் நின்று சித்திகளை எய்துதல் உளதாகாமையின் ' சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே ' என்றார் . எய்துவது என்பது எய்துதல் என்னும் தொழிற் பெயர்ப்பொருளுடைமையான் சித்திகள் என்னும் பன்மைக்கு முடி பாயிற்று : CHARD QU மயர்கறும் வணங்குதும் கலக்கறும் களித்திடும் பிணக்கரும் பிழைத்தன எய்துவது என்னும் வினைமுற்றுக்கள் தொழிற்பெயர்ப் ரொளில் வந்தன