திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1318 திருவாசக ஆராய்ச்சியுரை தாகாது; தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாது. இறைவனது அடியார்களின் திருவடிகள் என் தலைமீது பொருந்தி விளங்குதல் உளதாகாது; தான் அடியோம் உய வந்து உடன் தலைப்படும் ஆகாது இறைவன் தான் அடியோங்கள் உய்யும் பொருட்டு எழுந்தருளி வந்து எம்முடன் கூடுதல் உளதாகாது. இன் இயம் எங்கும் நிறைந்து இனிதாக இயம்பிடும் ஆகாது - இனிய வாச்சியங்கள் எவ்விடத்திலும் நிறைந்து இனிதாக ஒலித்தல் உள தாகாது: என்னை முன்னாளில் அடிமையாகக்கொண்ட இறைவனாகிய என் தந்தை என் அறிவில் வெளிப்பட்டு நிலைபெறப் பெற்றால் அதன் மேல், இறைவனது திருமேனியில் திருவெண்ணீறு பொலிந்து தோன்றுதலும் மாதவர்களுடைய கைகள் குவிந்து பூக்களை மழை போல இறைவன் மேற் சொரிதலும் நுண்ணிப மகளிரின் எண்ணம் வெளிப்படுதலும், வீணை முரன்று ஓசையினால் இன்பம் மிகுத்துத் தோன்றுதலும், இறைவனது யார்களின் திருவடிகள் என் தலைமீது விளங்குதலும், இறைவன் தான் அடியோங்கள் உய்யும் பொருட்டு எழுந்தருளி வந்து எம்முடன் கூடுதலும், இனிய வாச்சியங்கள் எவ் விடத்திலும் நிறைந்து இனிதாக ஒலித்தலும் உளவாகா என்பதாம். இடையையுடைய எழுகின்ற அடி பொருந்தி பொன்னியலுந் திருமேனி என்பதற்குப் பொன்னை ஒக்கும் திரு மேனி எனினுமாம். ''பொன்னியலுந் திருமேனி" (ஞான:361-3) எனவும்,''பொன்னியலு மேனியனே" (நாவு: 245-4) எனவும் தேவாரத்து வருவன காண்க. திருமேனி வெண்ணீறு பொலிந்திடு மாகாதே என்றது. இறைவர் தாமாந்தன்மை தோன்றுமாறு கண் முன் வெளிப்பட்டுக் காட்சிதருதல் இனி உளதாகாது என்பதாம். முன்னர் ஆட்கொண்டருளிய போது திருமேனிபில் திருநீறு பொலிந்திட எழுந்தருளியமை, "சிவனவன் திரள் தோள் மேல் நீறு நின்றது கண்டனையாயினும்" (சத. 33) எனவும், 'சிவனவனி வந் தருனி எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாப்" (அம் மானை 3) எனவும் வருவனவற்றாலுமறியலாம். 'உருத்திரநற் றிருமணியை யிலங்கு காடூல் ஒண்சிரத்திற் கந்தரத்தி லொளிகொண் மார்பிற் கரத்திலணிந் திலகுதிரு முண்டமங்கிக் கண்கரந்த நன்னுதன்மேற் கவினச் சாத்தித் திருத்திகழும் வேதியனா ரம்பொன் மேனி திகழ்வது கண்" (பெருந்துறை 35) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலுங் காண்க:
1318 திருவாசக ஆராய்ச்சியுரை தாகாது ; தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாது . இறைவனது அடியார்களின் திருவடிகள் என் தலைமீது பொருந்தி விளங்குதல் உளதாகாது ; தான் அடியோம் உய வந்து உடன் தலைப்படும் ஆகாது இறைவன் தான் அடியோங்கள் உய்யும் பொருட்டு எழுந்தருளி வந்து எம்முடன் கூடுதல் உளதாகாது . இன் இயம் எங்கும் நிறைந்து இனிதாக இயம்பிடும் ஆகாது - இனிய வாச்சியங்கள் எவ்விடத்திலும் நிறைந்து இனிதாக ஒலித்தல் உள தாகாது : என்னை முன்னாளில் அடிமையாகக்கொண்ட இறைவனாகிய என் தந்தை என் அறிவில் வெளிப்பட்டு நிலைபெறப் பெற்றால் அதன் மேல் இறைவனது திருமேனியில் திருவெண்ணீறு பொலிந்து தோன்றுதலும் மாதவர்களுடைய கைகள் குவிந்து பூக்களை மழை போல இறைவன் மேற் சொரிதலும் நுண்ணிப மகளிரின் எண்ணம் வெளிப்படுதலும் வீணை முரன்று ஓசையினால் இன்பம் மிகுத்துத் தோன்றுதலும் இறைவனது யார்களின் திருவடிகள் என் தலைமீது விளங்குதலும் இறைவன் தான் அடியோங்கள் உய்யும் பொருட்டு எழுந்தருளி வந்து எம்முடன் கூடுதலும் இனிய வாச்சியங்கள் எவ் விடத்திலும் நிறைந்து இனிதாக ஒலித்தலும் உளவாகா என்பதாம் . இடையையுடைய எழுகின்ற அடி பொருந்தி பொன்னியலுந் திருமேனி என்பதற்குப் பொன்னை ஒக்கும் திரு மேனி எனினுமாம் . ' ' பொன்னியலுந் திருமேனி ( ஞான : 361-3 ) எனவும் ' ' பொன்னியலு மேனியனே ( நாவு : 245-4 ) எனவும் தேவாரத்து வருவன காண்க . திருமேனி வெண்ணீறு பொலிந்திடு மாகாதே என்றது . இறைவர் தாமாந்தன்மை தோன்றுமாறு கண் முன் வெளிப்பட்டுக் காட்சிதருதல் இனி உளதாகாது என்பதாம் . முன்னர் ஆட்கொண்டருளிய போது திருமேனிபில் திருநீறு பொலிந்திட எழுந்தருளியமை சிவனவன் திரள் தோள் மேல் நீறு நின்றது கண்டனையாயினும் ( சத . 33 ) எனவும் ' சிவனவனி வந் தருனி எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாப் ( அம் மானை 3 ) எனவும் வருவனவற்றாலுமறியலாம் . ' உருத்திரநற் றிருமணியை யிலங்கு காடூல் ஒண்சிரத்திற் கந்தரத்தி லொளிகொண் மார்பிற் கரத்திலணிந் திலகுதிரு முண்டமங்கிக் கண்கரந்த நன்னுதன்மேற் கவினச் சாத்தித் திருத்திகழும் வேதியனா ரம்பொன் மேனி திகழ்வது கண் ( பெருந்துறை 35 ) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலுங் காண்க :