திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்படையாட்சி எங்கும் நிறைந்து என்றார் சர்வ வியாபகனாதலின்: பரஞ்சுடர் என்றது பரஞ்சோதியாகிய இறைவனை. அவ்விறைவன் பரமாசாரி யனாய்த் தம்மை ஆட்கொள்ள சுடர் எய்துவதாகாதே" என்றார். எழுந்தருளுதலின் மைபின் "பரஞ் மறையோன் - மறைபொருளாகிய இறைவன். "மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே" 1327 கோயிற் 5 "வேதப்பொருள் பாடி அப்பொருளா மாபாடி" திருவெம்பா.14 என அடிகள் கூறுமாறு காண்க. இனி வேதியன் எனவும் இரகசி யப் பொருளாயுள்ளவன் எனவும் உரைக்கலாம். ஈறு அறியா மறை யோன் - வேதமும் முடிவறியாத மறையோன். "மறையீற்றியா மறை யோனே" (சதகம் 85) என அடிகள் பிறாண்டும் கூறுதல் காண்க. தழைப்பன. சலித்திடும், அடங்கிடும்,திளைப்பன, தெரிந்திடும் எய்துவது என்னும் வினைமுற்றுக்கள் தொழிற்பெயர்ப் பொருளில் வந்தன. இதன்கிண், ஈறறியா மறையோன் எனையாள எழுந்தருளப் பெறில் சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன முதலிய செயல்கள் உளவாகா என்றமையால் சீவோபாதி யொழிதல் என்னும் பதிகம் நுதலிய பொருள் போந்தமை காண்க. 8 ை
திருப்படையாட்சி எங்கும் நிறைந்து என்றார் சர்வ வியாபகனாதலின் : பரஞ்சுடர் என்றது பரஞ்சோதியாகிய இறைவனை . அவ்விறைவன் பரமாசாரி யனாய்த் தம்மை ஆட்கொள்ள சுடர் எய்துவதாகாதே என்றார் . எழுந்தருளுதலின் மைபின் பரஞ் மறையோன் - மறைபொருளாகிய இறைவன் . மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே 1327 கோயிற் 5 வேதப்பொருள் பாடி அப்பொருளா மாபாடி திருவெம்பா .14 என அடிகள் கூறுமாறு காண்க . இனி வேதியன் எனவும் இரகசி யப் பொருளாயுள்ளவன் எனவும் உரைக்கலாம் . ஈறு அறியா மறை யோன் - வேதமும் முடிவறியாத மறையோன் . மறையீற்றியா மறை யோனே ( சதகம் 85 ) என அடிகள் பிறாண்டும் கூறுதல் காண்க . தழைப்பன . சலித்திடும் அடங்கிடும் திளைப்பன தெரிந்திடும் எய்துவது என்னும் வினைமுற்றுக்கள் தொழிற்பெயர்ப் பொருளில் வந்தன . இதன்கிண் ஈறறியா மறையோன் எனையாள எழுந்தருளப் பெறில் சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன முதலிய செயல்கள் உளவாகா என்றமையால் சீவோபாதி யொழிதல் என்னும் பதிகம் நுதலிய பொருள் போந்தமை காண்க . 8