திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை காத்து ஆட்கொள்ளும் குருமணியே-கொடிய பெரிய நரகத்தில் வீழ்ந்து ஆழ்ந்து போகாமல் தடுத்து ஆட்கொள்ளும் ஞானாசாரி யனாகிய மாணிக்கமணியே, எங்கள் நாயகமே - எங்கள் தலைவனே நடுவாய் நில்லாது ஒழிந்தக்கால் நன்றோ -- நீ நடுவுநிலை மையில்லா மல் நீங்கி விட்டால் அது நினக்கு நன்றாகுமோ? 1334 கேடிலாதாய். கேடடையும் இயல்புடைய யான் கெடுமா கெடு கின்றேன். யான் கேட்டைவதால் வரும்பழியை ஏற்றுக்கொள்ள வேண்டியவனாயினை. துன்பப்படுதற்குரியவனாகிய யான் படவேண்டிய துன்பங்களையெல்லாம் பட்டுவிட்டால் பின்னை நீ என்னைக் காப்ப தில் யாது பயனுண்டு? யான் கொடு மா நரகத்து அழுந்தாமே தடுத்து ஆட்கொள்ளும் ஞானாசாரியனாகிய மாணிக்கமணியே, எங் கள் நாயகமே, நீ நடுவாய் நில்லாமல் ஒழிந்தக்கால் அது நினக்கு நன்றாகுமோ? என்பதாம். கெடுவேன் படுவேன் என்னும் வினையாலணையும் பெயர்கள் கெடுமியல்புடையேன்; துன்பப்படுமியல்புடையேன் எனப்பொருள் தந்து நின்றன. கெடுமாறு என்பது ஈறுகெட்டு நின்றது எப்படி . கெடவேண்டுமோ அப்படி என்பது கருத்து. நான் கேடடைவதால் என்னை ஆட் கொண்ட தீமை இல்லாத நீ பழியடைய வேண்டியவ னாகின்றாய் என அடிகள் குறித்தது, பிராரத்தவினை அனுபவிக்கப் பட்டு முடியுமுன்பே வீடு பேற்றினைத் தரவேண்டுமெனக் குறித்த வாறாகும். அதனை, 'படுவேன் படுவதெல்லாம் நான் பட்டாற் பின்னைப் பயனென்னே' என்பதனாலும் வலியுறுத்தினார். தீமையும் துன்பமும் அடைந்தால் அது இறைவன் பெருமைக்கு இழுக்காகும் என்பதும், அதனை எண்ணாது நான் துன்பமெல்லாம் பட்டொழிந்த பின் என்னைக் காப்பதில் பயனில்லை என்பதும் '* கெடுவேன் பழி கொண்டாய் படுவதெல்லாம் நான் பட்டாற் பயனென்னே" என் பதன் கருத்தாகும். இறைவன் நரகிடை அழுந்தாமே காத்தல் மூவேழ் சுற்ற முரணுறு நரகிடை யாளாமே யருள் அரசே போற்றி" (போற்றி. 119-20) என்பதனாலும் அறியப்படும். குரு மணி என்பதற்கு ஆசாரியருள் சிறந்தவன் என்பது பொருள். பர மாசாரியன் எனவும் கொள்ளலாம். ஆசாரிய ரத்தினம் என்பர் வடநூலார். அடி ஆட்கொண்ட இறைவன் தன்னால் ஆட்கொள்ளப்பட்ட மையின் துன்பத்தை நீக்கவேண்டியதே முறையாகவும் அங்ஙனம் செய்யாமை முறைதவறியதாகும் அது இறைவற்கு நன்றாகாதே யாதலால் உடனே வீடு பேறு தந்தருளுதலே முறையாகுமென்பது 'குருமணியே நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ நாயகமே' என்பதனாற் புலனாகும்.
திருவாசக ஆராய்ச்சியுரை காத்து ஆட்கொள்ளும் குருமணியே - கொடிய பெரிய நரகத்தில் வீழ்ந்து ஆழ்ந்து போகாமல் தடுத்து ஆட்கொள்ளும் ஞானாசாரி யனாகிய மாணிக்கமணியே எங்கள் நாயகமே - எங்கள் தலைவனே நடுவாய் நில்லாது ஒழிந்தக்கால் நன்றோ -- நீ நடுவுநிலை மையில்லா மல் நீங்கி விட்டால் அது நினக்கு நன்றாகுமோ ? 1334 கேடிலாதாய் . கேடடையும் இயல்புடைய யான் கெடுமா கெடு கின்றேன் . யான் கேட்டைவதால் வரும்பழியை ஏற்றுக்கொள்ள வேண்டியவனாயினை . துன்பப்படுதற்குரியவனாகிய யான் படவேண்டிய துன்பங்களையெல்லாம் பட்டுவிட்டால் பின்னை நீ என்னைக் காப்ப தில் யாது பயனுண்டு ? யான் கொடு மா நரகத்து அழுந்தாமே தடுத்து ஆட்கொள்ளும் ஞானாசாரியனாகிய மாணிக்கமணியே எங் கள் நாயகமே நீ நடுவாய் நில்லாமல் ஒழிந்தக்கால் அது நினக்கு நன்றாகுமோ ? என்பதாம் . கெடுவேன் படுவேன் என்னும் வினையாலணையும் பெயர்கள் கெடுமியல்புடையேன் ; துன்பப்படுமியல்புடையேன் எனப்பொருள் தந்து நின்றன . கெடுமாறு என்பது ஈறுகெட்டு நின்றது எப்படி . கெடவேண்டுமோ அப்படி என்பது கருத்து . நான் கேடடைவதால் என்னை ஆட் கொண்ட தீமை இல்லாத நீ பழியடைய வேண்டியவ னாகின்றாய் என அடிகள் குறித்தது பிராரத்தவினை அனுபவிக்கப் பட்டு முடியுமுன்பே வீடு பேற்றினைத் தரவேண்டுமெனக் குறித்த வாறாகும் . அதனை ' படுவேன் படுவதெல்லாம் நான் பட்டாற் பின்னைப் பயனென்னே ' என்பதனாலும் வலியுறுத்தினார் . தீமையும் துன்பமும் அடைந்தால் அது இறைவன் பெருமைக்கு இழுக்காகும் என்பதும் அதனை எண்ணாது நான் துன்பமெல்லாம் பட்டொழிந்த பின் என்னைக் காப்பதில் பயனில்லை என்பதும் ' * கெடுவேன் பழி கொண்டாய் படுவதெல்லாம் நான் பட்டாற் பயனென்னே என் பதன் கருத்தாகும் . இறைவன் நரகிடை அழுந்தாமே காத்தல் மூவேழ் சுற்ற முரணுறு நரகிடை யாளாமே யருள் அரசே போற்றி ( போற்றி . 119-20 ) என்பதனாலும் அறியப்படும் . குரு மணி என்பதற்கு ஆசாரியருள் சிறந்தவன் என்பது பொருள் . பர மாசாரியன் எனவும் கொள்ளலாம் . ஆசாரிய ரத்தினம் என்பர் வடநூலார் . அடி ஆட்கொண்ட இறைவன் தன்னால் ஆட்கொள்ளப்பட்ட மையின் துன்பத்தை நீக்கவேண்டியதே முறையாகவும் அங்ஙனம் செய்யாமை முறைதவறியதாகும் அது இறைவற்கு நன்றாகாதே யாதலால் உடனே வீடு பேறு தந்தருளுதலே முறையாகுமென்பது ' குருமணியே நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ நாயகமே ' என்பதனாற் புலனாகும் .