திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "ஆவா என்றருளிச் செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக்கு குழை உடையவனே, யெனை ஆவவென்றருளாயே" எண்ணப். 6 1338 என அடிகள் அருளியமை காண்க. ஆரோ என்பதில் ஓ, ஒழியிசை. தான் - அசை. ஆரோதான் என்பதில் ஆர் என்னும் பன்மையொடு தான் என்னும் ஒருமை அசை இயைந்தமை இயல்பினாலாய வழு வமைதி. என்னளவே!-என்னளவினரோ, என்றது சாவாரெல்லாம் நின் னால் ஆட்கொள்ளப்பட்டும் பயன் பெறாது இறக்கும் என்னோடொத்த அளவினரோ என்றவாறு. என்னாரோ என்னும் பயனிலைக்கு யார் என்னும் எழுவாய் வருவித்துரைக்க. தக்கவாறன்று என்னாரோ- தக்கமுறையன்று என்று சொல்லமாட்டார்களோ? "சகந்தான் அடி அறிய முறையிட்டால் தக்க வாறன்றென்னாரோ" (கோயில் மூத்த. 3) என வருதலுங் காண்க. தேவு - தெய்வம் 'பொய்த் தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே" (கோத். 5) என வருதல் காண்க. தேவும்' தெய்வத்திற்கு ஒரு பெயர் என நச்சினார்க்கினியர் உரைத் தமையும் காண்க (சீவக, கடவுள். உரை). தில்லை நடமாடீ-தில்லையம் பலத்தே திருநடஞ் செய்பவனே. "ஏகம்பு மேயபிரான், தடமார் மதிற்றில்லை யம்பலமே தானிடமா நடமாடு மாபாடி" பூவல்லி "திகழ்தில்லை யம்பலத்தே திருநடஞ்செய் கூத்தா" தோணோ. 1 என வருவனவுங் காண்க. திகைத்தல் - மயக்கமடைதல். திகைத்தேன் தேற்றாயே என்று கேட்பதை, 'தேறும் வகையென் சிவலோகா திசைத்தால் தேற்ற வேண்டாவோ" (குழைத்த. 5) என்பதிலுங் காண்க. இதன்கண் 'கோவே யருளவேண்டாவோ; திகைத்தேன் தேற் றாயே" என்பதனால் சிவானுபவ விருப்பம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 647 நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரைபெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
திருவாசக ஆராய்ச்சியுரை ஆவா என்றருளிச் செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக்கு குழை உடையவனே யெனை ஆவவென்றருளாயே எண்ணப் . 6 1338 என அடிகள் அருளியமை காண்க . ஆரோ என்பதில் ஒழியிசை . தான் - அசை . ஆரோதான் என்பதில் ஆர் என்னும் பன்மையொடு தான் என்னும் ஒருமை அசை இயைந்தமை இயல்பினாலாய வழு வமைதி . என்னளவே ! -என்னளவினரோ என்றது சாவாரெல்லாம் நின் னால் ஆட்கொள்ளப்பட்டும் பயன் பெறாது இறக்கும் என்னோடொத்த அளவினரோ என்றவாறு . என்னாரோ என்னும் பயனிலைக்கு யார் என்னும் எழுவாய் வருவித்துரைக்க . தக்கவாறன்று என்னாரோ தக்கமுறையன்று என்று சொல்லமாட்டார்களோ ? சகந்தான் அடி அறிய முறையிட்டால் தக்க வாறன்றென்னாரோ ( கோயில் மூத்த . 3 ) என வருதலுங் காண்க . தேவு - தெய்வம் ' பொய்த் தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே ( கோத் . 5 ) என வருதல் காண்க . தேவும் ' தெய்வத்திற்கு ஒரு பெயர் என நச்சினார்க்கினியர் உரைத் தமையும் காண்க ( சீவக கடவுள் . உரை ) . தில்லை நடமாடீ - தில்லையம் பலத்தே திருநடஞ் செய்பவனே . ஏகம்பு மேயபிரான் தடமார் மதிற்றில்லை யம்பலமே தானிடமா நடமாடு மாபாடி பூவல்லி திகழ்தில்லை யம்பலத்தே திருநடஞ்செய் கூத்தா தோணோ . 1 என வருவனவுங் காண்க . திகைத்தல் - மயக்கமடைதல் . திகைத்தேன் தேற்றாயே என்று கேட்பதை ' தேறும் வகையென் சிவலோகா திசைத்தால் தேற்ற வேண்டாவோ ( குழைத்த . 5 ) என்பதிலுங் காண்க . இதன்கண் ' கோவே யருளவேண்டாவோ ; திகைத்தேன் தேற் றாயே என்பதனால் சிவானுபவ விருப்பம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 647 நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரைபெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்