திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ஆனந்தமாலை அரிய பொருளே அவிநாசி யப்பா பாண்டி வெள்ளமே தெரிய வரிய பரஞ்சோதீ T-188 செய்வ தொன்றும் அறியேனே: 1339 ப-ரை. நரியை குதிரை பரியாக்கி - நரியைக் குதிரை ஊர்தி யாக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்து - உலகமெல்லாம் அதனைத் தெரியும்படி செய்து. பெரிய தென்னன் மதுரை எல்லாம் - பெருமை யையுடைய அரிமர்த்தன பாண்டியனது மதுரையிலுள்ளார் யாவ ரையும், பிச்சது ஏற்றும் பெருந்துறையாய் - மயக்கம் மிகும்படி செய்யும் திருப்பெருந்துறையையுடையவனே, அரிய பொருளே பெறுதற்கரிய மெய்ப்பொருளாயுள்ளவனே, அவிநாசி அப்பா - அவி நாசி என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் அப்பனே, பாண்டி வெள்ளமே - சோமசுந்தர பாண்டியனாயிருந்து அரசாண்ட வெள்ளமே, தெரிய அரிய பரம் சோதீ - அறிதற்கரிய மேலான ஒளி வடிவினையுடையவனே. செய்வது ஒன்றும் அறியேன் - நின்னை அடை வதற்குச் செய்யத்தக்க உபாயம் ஒன்றினையும் அறிந்திலேன், நீயே இரங்கி அருள் செய்யவேண்டும். கருணை நரியைக் குதிரைப் பரியாக்கி உலகமெல்லாம் அதனைத் தெரி யும்படி செய்து பெருமையையுடைய பாண்டியனது மதுரையிலுள் ளார் யாவரையும் மயக்கம் மிகும்படி செய்யும் திருப்பெருந்துறை யையுடையவனே, பெறுதற்கரிய மெய்ப்பொருளாயுள்ளவனே. அவி நாசி என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் அப்பனே, பாண்டி வெள்ளமே, தெரிதற்கரிய மேலான ஒளிவடிவினையுடையவனே, நின்னை யடைவதற்குச் செய்யத்தக்க உபாயம் ஒன்றினையும் அறிந்திலேன்; நீயே இரங்கி அருள் செய்யவேண்டும் என்பதாம். இறைவன் நரியைக் குதிரைப் பரியாக்கியமை "நரியைக் குதிரை செய்வானும்" (தே நாவு. 4- ) என்பதனாலு மறியப்படும் பரி-தாங்கு வது. என்றது ஊர்தி. நிகழ்வித்தல் - தெரியும்படி செய்வித்தல். பெரிய தென்னன் என்றார், இறைவனால் குதிரை கொடுக்கப்பட்டமை யாலும் வையை அடைக்கப்பட்டமையாலும் அரிமர்த்தன பாண்டி யன் உயர்வடைந்தமைபற்றியாகும். இனி பெரிய என்பதை மது ரைக்கு விசேடணமாக்கினுமமையும்.ஓ பிச்சு - மயக்கம் பொருளே - மெய்ப்பொருளே. "பிறவிவே ரறுத்தென் குடிமுழுதாண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே" "பூங்கழல் காட்டிய பொருளே" (பிடித்த, 6, 7) என வருவன காண்க. பிச்சு - மயக்கம் என்றது நரியைக் குதிரையாக்கிக் கொடுத்த மையும் அவை பின்னர் நரிகளானமையும் ஆகிய இவற்றை ஆரா யும்போது இது எப்படி நிகழ்ந்தது? யாரால் நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந் தது என்பவை பற்றி உண்டாகும் மயக்கம்.
ஆனந்தமாலை அரிய பொருளே அவிநாசி யப்பா பாண்டி வெள்ளமே தெரிய வரிய பரஞ்சோதீ T - 188 செய்வ தொன்றும் அறியேனே : 1339 - ரை . நரியை குதிரை பரியாக்கி - நரியைக் குதிரை ஊர்தி யாக்கி ஞாலம் எல்லாம் நிகழ்வித்து - உலகமெல்லாம் அதனைத் தெரியும்படி செய்து . பெரிய தென்னன் மதுரை எல்லாம் - பெருமை யையுடைய அரிமர்த்தன பாண்டியனது மதுரையிலுள்ளார் யாவ ரையும் பிச்சது ஏற்றும் பெருந்துறையாய் - மயக்கம் மிகும்படி செய்யும் திருப்பெருந்துறையையுடையவனே அரிய பொருளே பெறுதற்கரிய மெய்ப்பொருளாயுள்ளவனே அவிநாசி அப்பா - அவி நாசி என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் அப்பனே பாண்டி வெள்ளமே - சோமசுந்தர பாண்டியனாயிருந்து அரசாண்ட வெள்ளமே தெரிய அரிய பரம் சோதீ - அறிதற்கரிய மேலான ஒளி வடிவினையுடையவனே . செய்வது ஒன்றும் அறியேன் - நின்னை அடை வதற்குச் செய்யத்தக்க உபாயம் ஒன்றினையும் அறிந்திலேன் நீயே இரங்கி அருள் செய்யவேண்டும் . கருணை நரியைக் குதிரைப் பரியாக்கி உலகமெல்லாம் அதனைத் தெரி யும்படி செய்து பெருமையையுடைய பாண்டியனது மதுரையிலுள் ளார் யாவரையும் மயக்கம் மிகும்படி செய்யும் திருப்பெருந்துறை யையுடையவனே பெறுதற்கரிய மெய்ப்பொருளாயுள்ளவனே . அவி நாசி என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் அப்பனே பாண்டி வெள்ளமே தெரிதற்கரிய மேலான ஒளிவடிவினையுடையவனே நின்னை யடைவதற்குச் செய்யத்தக்க உபாயம் ஒன்றினையும் அறிந்திலேன் ; நீயே இரங்கி அருள் செய்யவேண்டும் என்பதாம் . இறைவன் நரியைக் குதிரைப் பரியாக்கியமை நரியைக் குதிரை செய்வானும் ( தே நாவு . 4- ) என்பதனாலு மறியப்படும் பரி - தாங்கு வது . என்றது ஊர்தி . நிகழ்வித்தல் - தெரியும்படி செய்வித்தல் . பெரிய தென்னன் என்றார் இறைவனால் குதிரை கொடுக்கப்பட்டமை யாலும் வையை அடைக்கப்பட்டமையாலும் அரிமர்த்தன பாண்டி யன் உயர்வடைந்தமைபற்றியாகும் . இனி பெரிய என்பதை மது ரைக்கு விசேடணமாக்கினுமமையும்.ஓ பிச்சு - மயக்கம் பொருளே - மெய்ப்பொருளே . பிறவிவே ரறுத்தென் குடிமுழுதாண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே பூங்கழல் காட்டிய பொருளே ( பிடித்த 6 7 ) என வருவன காண்க . பிச்சு - மயக்கம் என்றது நரியைக் குதிரையாக்கிக் கொடுத்த மையும் அவை பின்னர் நரிகளானமையும் ஆகிய இவற்றை ஆரா யும்போது இது எப்படி நிகழ்ந்தது ? யாரால் நிகழ்ந்தது ? ஏன் நிகழ்ந் தது என்பவை பற்றி உண்டாகும் மயக்கம் .