திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அத்தன் - சிவரூபமாக்கி என்னை ஆட்கொண்டருளிய எமது தந்தை யாகிய இறைவன், எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் - எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார்? இஃது ஓர் அதிசயம். 1342 முத்தி நெறியை அறியாத மூர்க்கரொடு சேர்ந்து அவர் வழியில் நிற்க முயல்கின்ற என்னைப் பத்திநெறியை அறிவித்து என் பழைய வினைகள் அழியும் வண்ணம் மனத்திலுளதாகும் அழுக்கினை நீக்கிச் சிவமாக்கி என்னை ஆட்கொண்டருளின எமது தந்தையாகிய இறை வன் எனக்குச் செய்த முறைமையை வேறு யாவர் பெற வல்லார்? இஃது ஓர் அதிசயமாகும் என்பதாம். முத்தி நெறி - வீட்டு நெறி. மூர்க்கர் என்றது ஈண்டுத் தங் கொள் கையின் சரிபிழையினை ஆராயாது அதனை விடாப்பிடியாகக் கொண்ட வரை, முயலுதல் அம்மூர்க்கரொடு கூடி அவர் வழியில் நிற்கத் தொடங்குதல். பத்தி - அன்பு. பழவினைகள் - சஞ்சிதங்கள்; என்றது முற்பிறப்புக்களிற் செய்யப்பட்டு அனுபவிக்கப்படாமல் எஞ்சியிருக் கும் கன்மங்களை. பாறும் வண்ணம் ஆண்ட என இயையும். அங்ங னம் இயைவித்தது. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட காலத்து அவன் செய்யும் நயன தீட்சையினாலே சஞ்சித கன்மங்கள் நீங்குமென்பத னால் என்க. சித்தமலம் - மன அழுக்கு, என்றது காம வெகுளி மயக்கங்களை. இவை பிறப்புக்கு வித்தாகவுள்ளன. ''காமம் வெகுளி மயக்கமிவை மூன்றன், நாமங் கெடக்கெடும் நோய்' (குறள் 360) என்றார் திருவள் ளுவநாயனாரும்: இவை அற்றவிடத்துச் சிவபெருமானின் திருவடிப் பேரின்பமுண்டாகும். "காமம் வெகுளி மயக்க மிவைகடிந்து ஏமம் பிடித்திருந் தேனுக்கு'' திருமந். 2436 என்றார் திருமூலரும். சிவமாக்கி என்றது என்னைத் தன்னியல்பாகிய சிவமாந்தன்மையடையச் செய்து என்றவாறு. சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்' te தோணோ: 6 ''சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அந்தமிலா ஆனந்தம்" என அடிகள் அருளியவற்றாலும், கண்டபத்து 1
திருவாசக ஆராய்ச்சியுரை அத்தன் - சிவரூபமாக்கி என்னை ஆட்கொண்டருளிய எமது தந்தை யாகிய இறைவன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் - எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார் ? இஃது ஓர் அதிசயம் . 1342 முத்தி நெறியை அறியாத மூர்க்கரொடு சேர்ந்து அவர் வழியில் நிற்க முயல்கின்ற என்னைப் பத்திநெறியை அறிவித்து என் பழைய வினைகள் அழியும் வண்ணம் மனத்திலுளதாகும் அழுக்கினை நீக்கிச் சிவமாக்கி என்னை ஆட்கொண்டருளின எமது தந்தையாகிய இறை வன் எனக்குச் செய்த முறைமையை வேறு யாவர் பெற வல்லார் ? இஃது ஓர் அதிசயமாகும் என்பதாம் . முத்தி நெறி - வீட்டு நெறி . மூர்க்கர் என்றது ஈண்டுத் தங் கொள் கையின் சரிபிழையினை ஆராயாது அதனை விடாப்பிடியாகக் கொண்ட வரை முயலுதல் அம்மூர்க்கரொடு கூடி அவர் வழியில் நிற்கத் தொடங்குதல் . பத்தி - அன்பு . பழவினைகள் - சஞ்சிதங்கள் ; என்றது முற்பிறப்புக்களிற் செய்யப்பட்டு அனுபவிக்கப்படாமல் எஞ்சியிருக் கும் கன்மங்களை . பாறும் வண்ணம் ஆண்ட என இயையும் . அங்ங னம் இயைவித்தது . இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட காலத்து அவன் செய்யும் நயன தீட்சையினாலே சஞ்சித கன்மங்கள் நீங்குமென்பத னால் என்க . சித்தமலம் - மன அழுக்கு என்றது காம வெகுளி மயக்கங்களை . இவை பிறப்புக்கு வித்தாகவுள்ளன . ' ' காமம் வெகுளி மயக்கமிவை மூன்றன் நாமங் கெடக்கெடும் நோய் ' ( குறள் 360 ) என்றார் திருவள் ளுவநாயனாரும் : இவை அற்றவிடத்துச் சிவபெருமானின் திருவடிப் பேரின்பமுண்டாகும் . காமம் வெகுளி மயக்க மிவைகடிந்து ஏமம் பிடித்திருந் தேனுக்கு ' ' திருமந் . 2436 என்றார் திருமூலரும் . சிவமாக்கி என்றது என்னைத் தன்னியல்பாகிய சிவமாந்தன்மையடையச் செய்து என்றவாறு . சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் ' te தோணோ : 6 ' ' சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அந்தமிலா ஆனந்தம் என அடிகள் அருளியவற்றாலும் கண்டபத்து 1