திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1344 திருவாசக ஆராய்ச்சியுரை வருள் வழியினைச் சென்றடையும்படி கூத்தப் பெருமான் தனது திருவருட் கூத்தின் உண்மைப்பொருளை அறியும்படி எனக்கு அருள் செய்த முறைமையை வேறுயார் பெறவல்லார்? இஃதோர் யமாகும் என்பதாம்; அதிச நன் நெறியல்லாநெறி - தீ நெறி. நெறியாக நினைத்தல் - அதனை னெறியாக நினைதல். திருவருளே சேரும் வண்ணம் என்றது திரு வருள் நெறியிலே சென்று தன்னை அடையும் வண்ணம் என்றவாறு, குறி - அடையாளம்: என்றது ஊர் முதலிய அடையாளங்களை. "ஊரி வான்குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரி லான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரி லான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்" எனக் கந்தபுராணத்து வருதல் காண்க, குறியொன்று மில்லாத கூத் தன் என்றது இறைவனது சிறப்பியல்பு (சொரூபலக்கணம்) பற்றி யாகும். இறைவன் கூத்து உயிர்கள் மேற்கதியடைதற் பொருட்டு ஐந்தொழில்களை நடத்துவதாகும். "அந்த நல் நடமேதென்னில் ஐந்தொழில் நடத்தலாகும்" எனத் திருவாத வூரர் புராணத்து வருத லுங் காண்க. அவ்வுண்மையை அறியும்படி அருள்செய்தலையே கூத்தையெனக்கு அறியும் வண்ணம்' என்றார். இதன்கண்,கூத்தன்தன் கூத்தையெனக்கு அறியும் வண்ணம் அருளியவாற்றுக்கு வழியறியப்படாமையின் அனுபவ வழியறியாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 650. பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஐயனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. ப-ரை: மையல் பொய் எல்லாம் மெய் என்று-நிலையில்லாத பொருள் கள் எல்லாவற்றையும் நிலையுடைய பொருள்கள் என்று கருதி, புணர் முலையார் போகத்தே உற கடவேனை - நெருங்கிய தனங்களையுடைய மகளிரது போகத்தின் கண்ணே மயக்க மடைதற் குரிய என்னை, மாளாமே காத்தருளி - அப்போகத்தில் மூழ்கி மாண்டு போகாமற் பாதுகாத்தருளி, தையல் இடம் கொண்ட பிரான் ஐயன்- உமையம்மையை இடப்பாகத்தே கொண்ட பெருமானாகிய இறை
1344 திருவாசக ஆராய்ச்சியுரை வருள் வழியினைச் சென்றடையும்படி கூத்தப் பெருமான் தனது திருவருட் கூத்தின் உண்மைப்பொருளை அறியும்படி எனக்கு அருள் செய்த முறைமையை வேறுயார் பெறவல்லார் ? இஃதோர் யமாகும் என்பதாம் ; அதிச நன் நெறியல்லாநெறி - தீ நெறி . நெறியாக நினைத்தல் - அதனை னெறியாக நினைதல் . திருவருளே சேரும் வண்ணம் என்றது திரு வருள் நெறியிலே சென்று தன்னை அடையும் வண்ணம் என்றவாறு குறி - அடையாளம் : என்றது ஊர் முதலிய அடையாளங்களை . ஊரி வான்குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரி லான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரி லான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான் எனக் கந்தபுராணத்து வருதல் காண்க குறியொன்று மில்லாத கூத் தன் என்றது இறைவனது சிறப்பியல்பு ( சொரூபலக்கணம் ) பற்றி யாகும் . இறைவன் கூத்து உயிர்கள் மேற்கதியடைதற் பொருட்டு ஐந்தொழில்களை நடத்துவதாகும் . அந்த நல் நடமேதென்னில் ஐந்தொழில் நடத்தலாகும் எனத் திருவாத வூரர் புராணத்து வருத லுங் காண்க . அவ்வுண்மையை அறியும்படி அருள்செய்தலையே கூத்தையெனக்கு அறியும் வண்ணம் ' என்றார் . இதன்கண் கூத்தன்தன் கூத்தையெனக்கு அறியும் வண்ணம் அருளியவாற்றுக்கு வழியறியப்படாமையின் அனுபவ வழியறியாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 650 . பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஐயனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே . - ரை : மையல் பொய் எல்லாம் மெய் என்று - நிலையில்லாத பொருள் கள் எல்லாவற்றையும் நிலையுடைய பொருள்கள் என்று கருதி புணர் முலையார் போகத்தே உற கடவேனை - நெருங்கிய தனங்களையுடைய மகளிரது போகத்தின் கண்ணே மயக்க மடைதற் குரிய என்னை மாளாமே காத்தருளி - அப்போகத்தில் மூழ்கி மாண்டு போகாமற் பாதுகாத்தருளி தையல் இடம் கொண்ட பிரான் ஐயன் உமையம்மையை இடப்பாகத்தே கொண்ட பெருமானாகிய இறை