திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அச்சோப்பதிகம் மகளிரது கடைக்கண் பார்வையால் துன்பப்பட்டு மனத்திலுண் டாகிய துன்பம் மிகும்படி நிற்கும் இயல்புடைய யான் உன் திருவரு ளைப் பெற்றேன்: அதனால் யான் உய்வடைந்தேன்; உடையானே அடியேனை இங்கு வா என்று அழைத்துப் பயப்படாதே என்று எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார்? இஃதோர் அதிசயமாகும். பஞ்சாய அடி - பஞ்சுபோன்ற மெல்லிய அடி. 'பஞ்சின் மெல் அடியாள்'*(வாழா. 6) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க, இனி,செம்பஞ்சூட்டின அடி எனினுமமையும். மடவார்-மக ளிர். மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டுத் துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்று உஞ்சேன் என்க. பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால் உஞ்சேனெம் பெருமானே உடையானே" 1347 ஏசறவு 6 என அடிகள் அருளியமை காண்க : நெஞ்சாய - நெஞ்சிலுண்டாகிய. உய்ந்தேன் என்பது எதுகைநோக்கி உஞ்சேன் என்றாயது. இதன்கண், அடியேனை வருகவென்று அஞ்சேலென்று அருளிய வாற்றிற்கு வழியறியப்படாமையின் அனுபவவழியறியாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 653 வெந்து விழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக் கொந்துகுழற் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப் பந்தமறுத் தெனையாண்டு பரிசறவென் றுரிசுமறுத் தந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. க ப-ரை : வெந்து விழும் உடல் பிறவிமெய் என்று வினை பெருக்கி வெந்து நீறாய் விழுந்து அழிந்து போகும் உடம்பை எடுப்பதாகிய பிறப்பினை நிலையானது என்று எண்ணித் தீவினை களை மிகவுஞ் செய்து. கொந்து குழல் கோல் வளையார் குவி முலை மேல் வீழ்வேனை - பூங் கொத்து அணிந்த கூந்தலையுடைய திரண்ட வளையினையுடைய மகளி ரது குவிந்த முலைமேல் விரும்புதலைச் செய்யும் இயல்புடைய என்னை. பந்தம் அறுத்து எனை ஆண்டு - பாச பந்தத்தினை நீக்கி என்னை ஓட் கொண்டு, பரிசு அற என் துரிசும் அறுத்து எனது உயிரியல் : கெடும்படி எனது குற்றங்களையும் ஒழித்து. அந்தம் எனக்கு அருளிப ஆறு ஆர் பெறுவார் சங்கார காரணனகிய இறைவன் எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார்? அச்சோ - இஃதோர் அதிசயமாகும்.
அச்சோப்பதிகம் மகளிரது கடைக்கண் பார்வையால் துன்பப்பட்டு மனத்திலுண் டாகிய துன்பம் மிகும்படி நிற்கும் இயல்புடைய யான் உன் திருவரு ளைப் பெற்றேன் : அதனால் யான் உய்வடைந்தேன் ; உடையானே அடியேனை இங்கு வா என்று அழைத்துப் பயப்படாதே என்று எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார் ? இஃதோர் அதிசயமாகும் . பஞ்சாய அடி - பஞ்சுபோன்ற மெல்லிய அடி . ' பஞ்சின் மெல் அடியாள் ' * ( வாழா . 6 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க இனி செம்பஞ்சூட்டின அடி எனினுமமையும் . மடவார் - மக ளிர் . மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டுத் துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்று உஞ்சேன் என்க . பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால் உஞ்சேனெம் பெருமானே உடையானே 1347 ஏசறவு 6 என அடிகள் அருளியமை காண்க : நெஞ்சாய - நெஞ்சிலுண்டாகிய . உய்ந்தேன் என்பது எதுகைநோக்கி உஞ்சேன் என்றாயது . இதன்கண் அடியேனை வருகவென்று அஞ்சேலென்று அருளிய வாற்றிற்கு வழியறியப்படாமையின் அனுபவவழியறியாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 653 வெந்து விழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக் கொந்துகுழற் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப் பந்தமறுத் தெனையாண்டு பரிசறவென் றுரிசுமறுத் தந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே . - ரை : வெந்து விழும் உடல் பிறவிமெய் என்று வினை பெருக்கி வெந்து நீறாய் விழுந்து அழிந்து போகும் உடம்பை எடுப்பதாகிய பிறப்பினை நிலையானது என்று எண்ணித் தீவினை களை மிகவுஞ் செய்து . கொந்து குழல் கோல் வளையார் குவி முலை மேல் வீழ்வேனை - பூங் கொத்து அணிந்த கூந்தலையுடைய திரண்ட வளையினையுடைய மகளி ரது குவிந்த முலைமேல் விரும்புதலைச் செய்யும் இயல்புடைய என்னை . பந்தம் அறுத்து எனை ஆண்டு - பாச பந்தத்தினை நீக்கி என்னை ஓட் கொண்டு பரிசு அற என் துரிசும் அறுத்து எனது உயிரியல் : கெடும்படி எனது குற்றங்களையும் ஒழித்து . அந்தம் எனக்கு அருளிப ஆறு ஆர் பெறுவார் சங்கார காரணனகிய இறைவன் எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார் ? அச்சோ - இஃதோர் அதிசயமாகும் .