திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அச்சோப்பதிகம் மகளிரது மயக்கத்திலே அழுந்திப் பயனின்றிக் கழிதற்குரிய என்னை மெல்லக்கொண்டு சென்று பாசம் என்கின்ற தாழக்கோலினை உருவி எடுத்து வீசி உய்யும் நெறியினைக் காண்பித்துப் பிரணவத் தின் உட்கருத்தினை எனது தலைவன் எனக்கு அருள்செய்த முறை மையை வேறு யாவர் பெறவல்லார்? இஃதோர் அதிசயமாகும் என்பதாம். தையல் - பெண். பையவே கொடு போந்து என்றது உய்திகூடும் பக்குவகாலம் வருந்துணையும் மெல்ல மெல்ல அவ்வழியிற் கொண்டு சென்று என்றவாறு. பைய - மெல்ல. தாழ்-கதவுக்கிடும் தாழக்கோல். ' நாணுத்தாழ் வீழ்த்த கதவு'" (குறள் 1251} என வருதல் காண்க. தாழ்போல ஆன்மாவைக் கட்டியிருக்கும் பாசத்தினைப் பாசமெனுந் தாழ் என உருவகஞ் செய்தார். உருவுதல் -கழித்தல். உய்யுநெறி காட்டுவித்திட்டு என இரு பிறவினை கொடுத்தது கல்வி கேள்விக ளால் உய்யுநெறியை உளவாக்குதலும், குருவாய் வந்து அருளுத லால் உளவாக்கலும் ஆகிய இரு முறைமை பற்றியாகும். ஓங்காரம்- பிரணவம். அதன் உட்பொருள் திருவைந்தெழுத்து. அவ்வெழுத்துக் கள் ஐந்தனுள் சிகாரம் முதலாக நிற்கும் திருவைந்தெழுத்து முத்தி பஞ்சாக்கரம் என்று கூறப்படும். அதன் நடுவில் ஆன்மாவும் முன்னே திருவருட் சக்தியும் சிவமும், பின்னே திரோதான சத்தியும் மும் அமையும். பின்னேயுள்ள திரோதான சத்தியையும் மலத்தையும் ஒழித்து ஆன்மா திருவருட்சத்தி வாயிலாக இறைவனை அடையும். இம்முறைமையினை உபதேசஞ் செய்ததையே, 'ஓங்காரத்துட் பொருளை ஐயன் எனக்கருளியவாறு' என்றார். ஓங்காரத்துட்பொரு ளாய் இறைவன் நிற்றல், 'ஓங்காரத்துட் பொருளாய் நின்றான் கண்டாய்" (நாவு 252- 10) எனத் தேவாரத்து வருதலானுமறிக. மல் 1349 இதன்கண், ஓங்காரத்துட்பொருளை ஐயன் எனக்கருளியவாற்றின் வழியறியப்படாமையின் அனுபவ வழியறியாமை என்னும் பதிகநுத லிய பொருள் போதருதல் காண்க. 7 655 சாதல்பிதப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக் காதலினமிக் கணிபிழையார் கலவியிலே விழுவேனை மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஆதியெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. ப-ரை : சாதல் பிறப்பு என்னும் தடம்சுழியில் தடுமாறி- இறப்பு பிறப்பு என்னும் பெரிய நீர்ச்சுழியில் அகப்பட்டுத் தடுமாற்ற மடைந்து, காதலின்மிக்கு அணி இழையார் கலவியிலே விழுவேனை காதலிலே மிகுதிப்பட்டு அழகிய அணிகலங்களை அணிந்த மகளிரது போகத்திலே மிகவும் வீழும் இயல்புடைய என்னை. மாது ஒரு கூறு உடைய பிரான் ஆதி - உமையம்மையை ஒருபாகத்திலுடைய தலைவ னாகிய முதல்வன், தன் கழலே சேரும் வண்ணம் - தன்னுடைய திரு
அச்சோப்பதிகம் மகளிரது மயக்கத்திலே அழுந்திப் பயனின்றிக் கழிதற்குரிய என்னை மெல்லக்கொண்டு சென்று பாசம் என்கின்ற தாழக்கோலினை உருவி எடுத்து வீசி உய்யும் நெறியினைக் காண்பித்துப் பிரணவத் தின் உட்கருத்தினை எனது தலைவன் எனக்கு அருள்செய்த முறை மையை வேறு யாவர் பெறவல்லார் ? இஃதோர் அதிசயமாகும் என்பதாம் . தையல் - பெண் . பையவே கொடு போந்து என்றது உய்திகூடும் பக்குவகாலம் வருந்துணையும் மெல்ல மெல்ல அவ்வழியிற் கொண்டு சென்று என்றவாறு . பைய - மெல்ல . தாழ் - கதவுக்கிடும் தாழக்கோல் . ' நாணுத்தாழ் வீழ்த்த கதவு ' ( குறள் 1251 } என வருதல் காண்க . தாழ்போல ஆன்மாவைக் கட்டியிருக்கும் பாசத்தினைப் பாசமெனுந் தாழ் என உருவகஞ் செய்தார் . உருவுதல் -கழித்தல் . உய்யுநெறி காட்டுவித்திட்டு என இரு பிறவினை கொடுத்தது கல்வி கேள்விக ளால் உய்யுநெறியை உளவாக்குதலும் குருவாய் வந்து அருளுத லால் உளவாக்கலும் ஆகிய இரு முறைமை பற்றியாகும் . ஓங்காரம் பிரணவம் . அதன் உட்பொருள் திருவைந்தெழுத்து . அவ்வெழுத்துக் கள் ஐந்தனுள் சிகாரம் முதலாக நிற்கும் திருவைந்தெழுத்து முத்தி பஞ்சாக்கரம் என்று கூறப்படும் . அதன் நடுவில் ஆன்மாவும் முன்னே திருவருட் சக்தியும் சிவமும் பின்னே திரோதான சத்தியும் மும் அமையும் . பின்னேயுள்ள திரோதான சத்தியையும் மலத்தையும் ஒழித்து ஆன்மா திருவருட்சத்தி வாயிலாக இறைவனை அடையும் . இம்முறைமையினை உபதேசஞ் செய்ததையே ' ஓங்காரத்துட் பொருளை ஐயன் எனக்கருளியவாறு ' என்றார் . ஓங்காரத்துட்பொரு ளாய் இறைவன் நிற்றல் ' ஓங்காரத்துட் பொருளாய் நின்றான் கண்டாய் ( நாவு 252- 10 ) எனத் தேவாரத்து வருதலானுமறிக . மல் 1349 இதன்கண் ஓங்காரத்துட்பொருளை ஐயன் எனக்கருளியவாற்றின் வழியறியப்படாமையின் அனுபவ வழியறியாமை என்னும் பதிகநுத லிய பொருள் போதருதல் காண்க . 7 655 சாதல்பிதப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக் காதலினமிக் கணிபிழையார் கலவியிலே விழுவேனை மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஆதியெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே . - ரை : சாதல் பிறப்பு என்னும் தடம்சுழியில் தடுமாறி இறப்பு பிறப்பு என்னும் பெரிய நீர்ச்சுழியில் அகப்பட்டுத் தடுமாற்ற மடைந்து காதலின்மிக்கு அணி இழையார் கலவியிலே விழுவேனை காதலிலே மிகுதிப்பட்டு அழகிய அணிகலங்களை அணிந்த மகளிரது போகத்திலே மிகவும் வீழும் இயல்புடைய என்னை . மாது ஒரு கூறு உடைய பிரான் ஆதி - உமையம்மையை ஒருபாகத்திலுடைய தலைவ னாகிய முதல்வன் தன் கழலே சேரும் வண்ணம் - தன்னுடைய திரு