திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

542 திருவாசக ஆராய்ச்சியுரை 'நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து'' (அதிசய - 8) "மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ் வூனே புகவென் றனை நூக்கி உழலப் பண்ணுவித்திட்டாய் '' (குழைத்த.- 4) புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தே நீயாண்டவா றன்றேயெம் பெருமானே (ஏசறவு - 8) என அடிகள் அருளியவாற்றானு மறியலாகும். 66 பார்-பூமி.பாரொருகால் வந்தனையாள் என்பதற்கு தெய்வத் திருவருட்டிறம் பூண்ட அந்நங்கை நமக்கெல்லாம் அருள் செய்ய வேண்டிப் பூமியில் ஒருமுறை வந்தாற்போலும் தோற்றத்தினையுடை யள் எனவும் பொருள் கொள்ளலாம். முழுமுதல் இறைவன் ஒருவனையேயன்றி திருமால் முதலிய பிற தேவர்களை வணங்காமையின் "விண்ணோரைத்தான் பணியாள்'' என்றார். "உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லா தெ 4கள் உத்தமனே" (சத. -2) ''செழுமதி யணி + தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ (வாழா.-10) சொல்லாய்'' "என் கடைக்கண்ணினும் யான் பிறவேத்தாவகை யிரங்கித் தன் கடைக்கண் வைத்த தண்டில்லைச் சங்கரன் என அடிகள் அருளியவாற்றானும் அறியப்படும். திருமால் பிரமன் முதலிய தேவத்தலைவர்களுக்கும் இறைவனா தலின் இறைவனைப் "பேரரையன் " என்றார். “விடை விடா துகந்த விண்ணவர் கோவே" (பிடித். - 2) எனவருதலுங் காண்க. பெருமான் ஓரொருகால் எம்பெருமான் என்று என்று கூறுதல், புகழை ஒருகாலும் வாயோயாமல் பேசுவதும் விண்ணோரைப் பணி யாமையும் இறைவன் மாட்டுக்கொண்ட அன்புப்பித்துச் செயல்க ளாகக் காணப்படுதலின் "பேரரையற் கிங்ஙனே பித்தொருவரா மாறும்" என்றார். இங்ஙனே என்ற சுட்டு, ஓரொருகால் எம்பெரு மான் என்றென்று கூறுதல் முதலிய செயல்களைச் சுட்டியது. ஒருவர் பித்து ஆமாறும் என மாறிக் கூட்டுக. ஆமாறும் உளவோ என ஒருசொல் அவாய் நிலையில் வருவித்துரைக்க. "அன்னே இவையுஞ் சிலவோ" என்புழிப்போல. 35 (கோவை-298) வண்ணம் இங்ஙனம் உயர்ந்த பத்தித்திறம் உடையளாகும் ஆட்கொள்ளும் திறமையுடையார் இறைவர் ஒருவரேயன்றிப் பிறர்
542 திருவாசக ஆராய்ச்சியுரை ' நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து ' ' ( அதிசய - 8 ) மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ் வூனே புகவென் றனை நூக்கி உழலப் பண்ணுவித்திட்டாய் ' ' ( குழைத்த.- 4 ) புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தே நீயாண்டவா றன்றேயெம் பெருமானே ( ஏசறவு - 8 ) என அடிகள் அருளியவாற்றானு மறியலாகும் . 66 பார் - பூமி.பாரொருகால் வந்தனையாள் என்பதற்கு தெய்வத் திருவருட்டிறம் பூண்ட அந்நங்கை நமக்கெல்லாம் அருள் செய்ய வேண்டிப் பூமியில் ஒருமுறை வந்தாற்போலும் தோற்றத்தினையுடை யள் எனவும் பொருள் கொள்ளலாம் . முழுமுதல் இறைவன் ஒருவனையேயன்றி திருமால் முதலிய பிற தேவர்களை வணங்காமையின் விண்ணோரைத்தான் பணியாள் ' ' என்றார் . உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லா தெ 4 கள் உத்தமனே ( சத . -2 ) ' ' செழுமதி யணி + தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ ( வாழா . - 10 ) சொல்லாய் ' ' என் கடைக்கண்ணினும் யான் பிறவேத்தாவகை யிரங்கித் தன் கடைக்கண் வைத்த தண்டில்லைச் சங்கரன் என அடிகள் அருளியவாற்றானும் அறியப்படும் . திருமால் பிரமன் முதலிய தேவத்தலைவர்களுக்கும் இறைவனா தலின் இறைவனைப் பேரரையன் என்றார் . விடை விடா துகந்த விண்ணவர் கோவே ( பிடித் . - 2 ) எனவருதலுங் காண்க . பெருமான் ஓரொருகால் எம்பெருமான் என்று என்று கூறுதல் புகழை ஒருகாலும் வாயோயாமல் பேசுவதும் விண்ணோரைப் பணி யாமையும் இறைவன் மாட்டுக்கொண்ட அன்புப்பித்துச் செயல்க ளாகக் காணப்படுதலின் பேரரையற் கிங்ஙனே பித்தொருவரா மாறும் என்றார் . இங்ஙனே என்ற சுட்டு ஓரொருகால் எம்பெரு மான் என்றென்று கூறுதல் முதலிய செயல்களைச் சுட்டியது . ஒருவர் பித்து ஆமாறும் என மாறிக் கூட்டுக . ஆமாறும் உளவோ என ஒருசொல் அவாய் நிலையில் வருவித்துரைக்க . அன்னே இவையுஞ் சிலவோ என்புழிப்போல . 35 ( கோவை -298 ) வண்ணம் இங்ஙனம் உயர்ந்த பத்தித்திறம் உடையளாகும் ஆட்கொள்ளும் திறமையுடையார் இறைவர் ஒருவரேயன்றிப் பிறர்